admin

காதல் மீதான பெருங்காதல்

 ‘மண்டியிடுங்கள் தந்தையே’ (நாவல்) ந. பிரியா சபாபதி மதுரை. மண்டியிடுங்கள் தந்தையே நாவலின் வழியே டால்ஸ்டாய் மாறுபட்ட மனிதராகக் காணப்படுகிறார். சோபியாவின் பார்வை வழியாக நாம் அவரை அன்பில்லாத மனிதராகவே எண்ணுவோம். ஆனால், அக்ஸினியாவின் பார்வை வழியே டால்ஸ்டாயைக் காணும்பொழுது, நாம் பிறிதொரு டால்ஸ்டாயைத்தான் கண்டடைகிறோம். டால்ஸ்டாய் அன்பிற்கு ஏங்கிய மனிதர் மட்டும் அல்ல; அன்பு நிறைந்தவரும் கூட. அக்ஸினியா மீது அவருக்குக் காதலைத் தாண்டிய தீராத அன்பு இருந்தது. காமம் கொண்ட காதலாக இருந்திருந்தால், அது …

காதல் மீதான பெருங்காதல் Read More »

சோமனின் உடுக்கை

சோமனதுடி என்ற கன்னடத் திரைப்படத்தை தூர்தர்ஷனில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக பார்த்திருக்கிறேன். அப்போது ஞானபீடம் பரிசு பெற்றுள்ள கன்னட எழுத்தாளரான சிவராம காரந்த் நாவல்கள் எதையும் வாசித்ததில்லை. சோமனதுடி திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிவராம காரந்தின் அழிந்த பிறகு, மண்ணும் மனிதர்களும் படித்த பிறகு தான் அவர் மிகப்பெரிய இலக்கிய ஆளுமை என்பதை உணர்ந்தேன். சிவராம காரந்த் நாற்பது நாவல்கள் எழுதியிருக்கிறார். நாடகம், நாட்டுப்புற ஆய்வு, யட்சகானம், குழந்தை இலக்கியம், கலைவரலாறு சுற்றுச்சூழல் ஆய்வு என்று …

சோமனின் உடுக்கை Read More »

மறுக்கப்பட்ட நீதியின் குரல்

இடக்கை (நாவல்) – வாசிப்பனுபவம் ந. பிரியா சபாபதி, மதுரை ‘இடக்கை’ என்ற இந்த நாலைப் படித்ததும், ‘தன் மனத்தினை அநீதியிடம் ஒப்படைத்தவர்களின் கைகளில் எளியோர் சிக்குண்டால், அவர்களின் நிலைமை சூறாவளியால் வேரோடு பறித்துச்செல்லப்படும் மரத்தின் நிலைமையைப் போன்றாகிவிடுமே!’ என்பதை உணர்ந்தேன். இந்நாவல் மன்னராட்சிக் காலத்தைப் பற்றிப் பேசுகிறது. மன்னர்களின் வாழ்வினையும் அவர்கள் நீதிக்கும் அநீதிக்கும் இடையில் சிக்குண்ட நிலையையும் கூறிச் செல்கிறது. “அரசபதவி என்பது ஒரு மரணசிம்மாசனம், அதில் ஏறி அமர்ந்தவன் மெல்ல மெல்ல மனிதத்தன்மைகளை …

மறுக்கப்பட்ட நீதியின் குரல் Read More »

நாம் அறியாத உலகம்

சந்தையில் விற்கப்படும் காய்கறிகள், பழங்களை யார் மொத்தமாகக் கொள்முதல் செய்வது. யார் விநியோகம் செய்வது, விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதன் பின்னாள் ஒரு சிண்டிகேட் செயல்படுகிறது. அவர்களை மீறி எவரும் தக்காளியோ, வெங்காயமோ வாழைப்பழங்களோ நேரடியாக வாங்கி விற்பனை செய்துவிட முடியாது. அந்தச் சிண்டிகேட் உறுப்பினர்கள் விவசாயிகள் எப்போது அறுவடை செய்யவேண்டும். யாரிடம் விற்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். அவர்கள் நினைத்தால் காய்கறிகள் பழங்கள் எதுவும் கிடைக்காமல் நகரை ஸ்தம்பிக்கச் செய்துவிட முடியும். விவசாயிகள் …

நாம் அறியாத உலகம் Read More »

டால்ஸ்டாயின் ஒளிரும் அகம்

 ‘மண்டியிடுங்கள் தந்தையே’ (நாவல்) – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை. ரஷ்ய படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது, அந்த நாட்டின் நிலக்காட்சி மனத்தில் பதிய மறுக்கும். அங்கு நிகழும் பனிப்பொழிவு நமக்கு அந்நியமானது. அவர்களின் பெயர்களும் அவர்களின் உடை, உணவு முறைகளும்கூட நமக்கு முற்றிலும் புதிதானவையே. அதனாலேயே நான் ரஷ்ய படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் திணறி திணறித்தான் படித்து முடிப்பேன். ஆனாலும் அவற்றில் உள்ள படைப்பு நயம் என்னை மயக்கிவிடும். அந்த மயக்கத்திற்காகவே நான் மீண்டும் …

டால்ஸ்டாயின் ஒளிரும் அகம் Read More »

கவிஞர் சிற்பி ஆவணப்படம்

இந்திரன் தமிழின் முன்னோடி கலைவிமர்சகர். ஓவியம். சிற்பம். வரைகலை எனக் கலைகள் குறித்துத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வரும் இவர் தமிழ் அழகியல் குறித்துத் தனித்த பார்வைகள் கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவர் எழுதியுள்ள கட்டுரைகள் மிகுந்த பாராட்டிற்குரியவை. தனித்துவமான கலையாளுமையாக விளங்கும் இந்திரன் கவிஞர் சிற்பி குறித்த ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். சிற்பி பாலசுப்பிரமணியம் எனும் கவிஞர் சிற்பி, பேராசிரியர் மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், பாடத்திட்டக்குழு உறுப்பினர். இதழாசிரியர் சாகித்ய அகாதமி தமிழ் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் …

கவிஞர் சிற்பி ஆவணப்படம் Read More »

தபால்காரனின் நாட்கள்

நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான ரோஜர் மார்டின் தூகார்டு எழுதிய தபால்காரன் நாவல் பற்றிக் காலம் இலக்கிய இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நாவலிது. க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார். தபால்காரனை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்ட கதைகளையும் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

காதலும் காதல் சார்ந்தவையும்

 ‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’ – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை. கடுங்கோடையில் மழைக்காகக் காத்திருக்கும்போது வானிலிருந்து சரமென இறங்கும் கோடைமழையின் முதற்துளியைக் கையில் ஏந்தியது போன்றதுதான் பருவவயதில் வாய்த்துவிடும் முதற்காதலை வரவேற்கும் இளம் மனத்தின் நிலை. அந்த மனநிலையை வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது. அதன் பின்னர் ஆயிரமாயிரம் பெருங்காதல்கள் வந்து மனத்தில் குடியேறியபோதும் அந்த முதற்காதல் நினைவுகள் கடுங்கோடையில் மண்ணில் விழுந்த முதல்மழையின் சுவடுகள்போலப் பதிந்தே இருக்கும். காதலைக் கொண்டாடாத படைப்பாளர்கள் …

காதலும் காதல் சார்ந்தவையும் Read More »

நிழலின் பந்தம்

“மண்டியிடுங்கள் தந்தையே” நூல் குறித்த வாசிப்பு விமர்சனம்… மஞ்சுநாத் எழுத்தாளனுக்கு எழுத்தின் வழியேயான சுதந்திரம் எல்லையற்றது. கட்டுபாடுகள் இல்லாதது. உண்மையில் எல்லா வகையான படிமங்களிலும் இதைச் சாத்தியமாக்குவது முடியுமா…? முடியாது என்பதே எதார்த்தம். குறிப்பாகத் தனி மனிதர்களின் வரலாற்றுப் பின்புலத்தைச் சாரமாகக் கொண்டு கட்டமைக்கப்படும் கதைகளுக்கு எல்லைகளும் கட்டுப்பாடுகளும் அதிகம் உள்ளன. கூடுதலாக ரஷ்ய எழுத்துலகின் கொண்டாட்டமான மனிதரான டால்ஸ்டாய் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை எழுதுவதென்பது காட்டில் திரியும் குதிரை தானாக விரும்பி தனது …

நிழலின் பந்தம் Read More »