கற்பனையுலகின் வரம்பு.
செர்பிய நாவலாசிரியரான மிலோராட் பாவிக் நேர்காணலின் ஒரு பகுதி . தமிழில்: லதா ராமகிருஷ்ணன். தானாஸிஸ்: கற்பனாதீதம் (fantasy) என்பது வாழ்க்கையின் உண்மைகளுக்கெதிராகப் போரிட ஒருவர் பயன்படுத்தும் ஆயுதமா? பாவிக்: மெய்யுலகிற்கும், கற்பனையுலகிற்கும் இடையே தெளிவான, திட்டவட்டமான வரம்பெல்லைகள் என்று எதுவும் கிடையாது. ஒரு சுதந்திர மனிதன் அந்த இரண்டு உலகங்களுக்கும் இடையேயான வரம்பெல்லைகளை அழுத்தி, அடக்கி வைக்கிறான். ஒரு எழுத்தாளனாக இந்த உணர்வு எனக்கு அடிக்கடி ஏற்படுகிறது. ஒரு எழுத்தாளனிடம் இடம் பெற்றிருக்க வேண்டிய மிக …









