admin

வாதவூரடிகள்

கடந்த வாரத்தில் மதுரையில் இருந்தேன் டிசம்பர் 11 மகாகவி பாரதி பிறந்த நாள் ஆகவே எட்டயபுரம் வரை சென்று வரலாமா என்றொரு எண்ணம் தோன்றியது. ஆனால் அன்று காலையில் எழுந்தவுடன் திருவாதவூரில் உள்ள மாணிக்கவாசகர் சன்னதிக்குப் போய் வரலாம் என்று தோன்றியது. பாரதிக்கும் மாணிக்கவாசகருக்கும் நிறைய நெருக்கம் இருப்பதாகவே உணர்கிறேன். எனது வீட்டில் மாணிக்கவாசகரின் திருவுருவச்சிலை வைத்திருக்கிறேன். திருவாசகம் எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். அதன் கவித்துவ மேன்மையை எண்ணி வியந்து போகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு …

வாதவூரடிகள் Read More »

பெயரும் நினைவும்

அமெரிக்க உரைநடைக்கவிதையில் குறிப்பிடத்தக்கவர் ரஸல் எட்சன். இவரது கவிமொழியும் கருப்பொருட்களும் வசீகரமானவை. அபத்தமும் விசித்திரமும் கொண்ட உரைநடைக்கவிதைகளை எழுதுகிறார். ரஸல் எட்சனின் தந்தை ஒரு கார்டூனிஸ்ட். ஆகவே ரஸலும் இளமையில் ஒவியத்தில் ஆர்வம் காட்டியிருக்கிறார். 1950 களில் கவிதைகளை வெளியிடத் தொடங்கிய எட்சன். உரைநடை கவிதைகளில் நிறையப் பரிசோதனைகள் செய்திருக்கிறார். GODFATHER OF THE PROSE POEM IN AMERICA என்று சிறப்பிக்கப்படும் எட்சன் Appearances, (Thing Press, 1961); A Stone Is Nobody’s, (Thing …

பெயரும் நினைவும் Read More »

திரையெங்கும் முகங்கள்

உலக சினிமா குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இத்தாலிய நியோ ரியலிசப் படங்களில் துவங்கி சென்ற ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற படங்கள் வரையான பல்வேறு நாடுகளின் திரைப்படங்களை அறிமுகம் செய்யும் இந்நூல் திரை அழகியலின் மாற்றங்களை அடையாளப்படுத்துகிறது

சிறிய உண்மைகள்

போர்ஹெஸ் தனது The Book of Sand கதையில் NEITHER THE BOOK NOR THE SAND HAS ANY BEGINNING OR END என்கிறார் வாசிப்பின் போது சில வரிகள், சில நிகழ்வுகள். நினைவுகள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்வேன். இவை எழுத்தாளனுக்கான கச்சாப் பொருட்கள். எழுத்தின் ஆதாரங்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரைகள் எனது இணையதளத்தில் வெளியானவை. தேசாந்திரி பதிப்பகம் வெளியிடும் இந்நூல் டிசம்பர் 25 மாலை ரஷ்ய கலாச்சார …

சிறிய உண்மைகள் Read More »

புத்தக வெளியீட்டு விழா

டிசம்பர் 25 சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ள எனது பத்து புதிய நூல்களின் வெளியீட்டுவிழா சம்பிரதாயமான முறையிலிருந்து மாறுபட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது தலைமை, வாழ்த்துரை என எதுவும் கிடையாது. பத்து நூல்களுக்கும் தனி உரைகள் நிகழ்த்தப்படப்போவதில்லை நிகழ்வின் துவக்கத்தில் புதிய நூல்களை வெளியிடுகிறோம். அன்பிற்குரியவர்கள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள் எனது புதிய நாவலை எனது நண்பரும் தேர்ந்த இலக்கியவாசகருமான திருப்புகழ் IAS அவர்கள் வெளியிட்டு உரை நிகழ்த்துகிறார் அதைத் தொடர்ந்து நாவலின் சில பகுதிகளை நான் …

புத்தக வெளியீட்டு விழா Read More »

ரகசியத்தின் பாதையில்

Souad என்ற எகிப்திய படத்தைப் பெண் இயக்குநரான அய்டன் அமீன் இயக்கியுள்ளார். 2021ல் வெளியான இப்படம் ஆஸ்கார் விருதுக்கான அயல்மொழி பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது பேஸ்புக், டிக்டாக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு இளந்தலைமுறையினருக்கென ஒரு ரகசிய வாழ்க்கை உருவாகியிருக்கிறது. ஆன்லைன் வழியாகக் காதல் கொள்வதும் அதில் ஏற்படும் சிக்கல்களும் முந்தைய தலைமுறை அறியாத விஷயம். டீனேஜர்கள் இணையவெளியில் எவருடன் நட்பாக இருக்கிறார்கள். யாருடன் சாட் செய்கிறார்கள். எந்த வீடியோவை, புகைப்படத்தை ரசிக்கிறார்கள். …

ரகசியத்தின் பாதையில் Read More »

மண்டியிடுங்கள் தந்தையே

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் வெளியாகவுள்ள எனது புதிய நாவல் மண்டியிடுங்கள் தந்தையே பற்றிய காணொளி சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது

கார்க்கியின் பாட்டி

மாக்சிம் கார்க்கி தனது வாழ்க்கை வரலாற்றை மூன்று பகுதிகளாக எழுதியிருக்கிறார். மூன்றும் மிகச் சுவாரஸ்யமான புத்தகங்கள். இதில் எனது குழந்தைப் பருவம் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. தனது தந்தையின் மரணத்தைக் கார்க்கி எதிர்கொண்ட விதமும் பாட்டியோடு மேற்கொண்ட கப்பல் பயணத்தைப் பற்றிய நினைவுகளும் திரைப்படம் போல நம் கண்முன்னே விரிகின்றன. கார்க்கியின் தந்தை அவரை எதற்காகவும் அழக்கூடாது என்று பழக்கியிருந்தார். ஆகவே தந்தை இறந்த போதும் அவருக்கு அழுகை வரவில்லை. ஒரு மழைநாளில் தந்தை இறந்த போது பாட்டி …

கார்க்கியின் பாட்டி Read More »

உதிர்ந்த கனவுகள்

A Fortunate Man என்ற டேனிஷ் திரைப்படத்தைப் பார்த்தேன். வெளியான படம். பில்லி ஆகஸ்ட் இயக்கியிருக்கிறார் கதை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடக்கிறது. தீவிரமான மதப்பற்றுள்ள குடும்பம் ஒன்றில் பிறந்த பீட்டர் தந்தையைப் போல மதகுருவாக விரும்பாமல் பல்கலைக்கழகத்தில் சென்று பொறியியல் படிக்க விரும்புகிறான். இதை அவனது தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிடிவாதமாக வீட்டை விட்டுப்புறப்படும் மகனுக்கு ஒரு பாக்கெட் கடிகாரத்தைப் பரிசாகத் தருகிறார் தந்தை. அந்தக் கடிகாரம் அவன் தவறான பாதையில் செல்வதை …

உதிர்ந்த கனவுகள் Read More »