வாதவூரடிகள்
கடந்த வாரத்தில் மதுரையில் இருந்தேன் டிசம்பர் 11 மகாகவி பாரதி பிறந்த நாள் ஆகவே எட்டயபுரம் வரை சென்று வரலாமா என்றொரு எண்ணம் தோன்றியது. ஆனால் அன்று காலையில் எழுந்தவுடன் திருவாதவூரில் உள்ள மாணிக்கவாசகர் சன்னதிக்குப் போய் வரலாம் என்று தோன்றியது. பாரதிக்கும் மாணிக்கவாசகருக்கும் நிறைய நெருக்கம் இருப்பதாகவே உணர்கிறேன். எனது வீட்டில் மாணிக்கவாசகரின் திருவுருவச்சிலை வைத்திருக்கிறேன். திருவாசகம் எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். அதன் கவித்துவ மேன்மையை எண்ணி வியந்து போகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு …









