admin

புத்தக வெளியீட்டு விழா

டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு ரஷ்ய கலாச்சார மையத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம். முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். வெளியிடப்படவுள்ள நூல்கள் மண்டியிடுங்கள் தந்தையே / நாவல் ஐந்து வருட மௌனம் / சிறுகதை தொகுப்பு காந்தியின் நிழலில் / கட்டுரைத் தொகுப்பு நேற்றின் நினைவுகள் / கட்டுரைத் தொகுப்பு டான்டூனின் கேமிரா / சிறார் நாவல் காலத்தின் …

புத்தக வெளியீட்டு விழா Read More »

பார்வையற்றவர்களுக்கான சிறப்பு நூல்

பார்வையற்றவர்கள் வாசிப்பதற்காக பிரெயில் முறையில் டான்டூனின் கேமிரா என்ற எனது சிறார் நூல் வெளியிடப்படுகிறது. இதனைச் சாத்தியப்படுத்தியவர் எனது நண்பர் ஆடிட்டர் சந்திரசேகர். தேசிய பார்வையற்றோர் சம்மேளனம் சார்பில் இதனைக் கொண்டுவருகிறார்கள். அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும் இந்த நூலும் டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்படுகிறது.

நூலக மனிதர்கள்

பொது நூலகங்கள் குறித்தும் நூலகத்தில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றிய நினைவுக்குறிப்புகளும் கொண்ட புத்தகம். நூலகமனிதர்கள் டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் விழாவில் வெளியிடப்படுகிறது இந்நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது

திசை எட்டும் இதழில்

திசை எட்டும் இம்மாத இதழில் எனது சிறுகதையின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகியுள்ளது. மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் டாக்டர் சந்திரமௌலி.

விகடன் இணையதளத்தில்

ஆனந்தவிகடன் இணையதளத்தில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது. “கூழாங்கல்லின் மௌனம் போன்றதே எனது நிதானம்”- எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல் நா.கதிர்வேலன் தமிழ் இலக்கிய உலகின் வசீகர படைப்பாளுமைகளில் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். தன் எழுத்து வாழ்வில் காவிய கட்டத்தில் நிற்கிற அவர் தற்போது ‘மண்டியிடுங்கள் தந்தையே’ என்ற தலைப்பில் டால்ஸ்டாயை முன்வைத்து நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். வரும் ஆண்டின் புத்தகத் திருவிழாவின் முக்கியமான புத்தகமாக இந்நாவல் வாசகர் மனம் கவரக் காத்திருக்கிறது. அதற்கான உரையாடலாக நடந்தது இந்த சந்திப்பு. …

விகடன் இணையதளத்தில் Read More »

டான்டூனின் கேமரா

ஒரு எறும்பு போட்டோகிராபராக மாறும் கதை தான் டான்டூனின் கேமரா இந்த சிறார் நூலுக்காக அழகிய வண்ண ஓவியங்களை பிரபல ஓவியர் கே.ஜி. நரேந்திரபாபு வரைந்து கொடுத்திருக்கிறார் டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் இந்நூல் வெளியிடப்படவுள்ளது தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

காற்றில் பறக்கும் வேட்டைக்காரர்கள்

ஜார்ஜ் கேட்லின்(George Catlin) ஓவியங்களில் காணப்படும் அமெரிக்கப் பூர்வகுடிகளின் வாழ்க்கை வியப்பூட்டக்கூடியது காட்டெருமைகளைத் துரத்தி வேட்டையாடும் ஓவியத்தில் அந்த எருமைகள் ஓடிவரும் வேகமும் நிலவெளியின் பிரம்மாண்டமும் வில்லேந்தியபடியே குதிரையில் வரும் இனக்குழுவின் ஆவேசமும் பரவசமளிக்கின்றன. கூட்டமாகக் காட்டெருமைகள் பாய்ந்து வருவதை எவ்வளவு அழகாக வரைந்திருக்கிறார். உடலை வளைத்துத் திரும்பி வில்லேந்தும் வீரனின் தோற்றமும் எருதுகளின் ஆவேசப் பாய்ச்சலும் ஒவியத்தை உயிரோட்டமாக்குகின்றன. வேகத்தை ஓவியத்தில் கொண்டு வருவது எளிதானதில்லை. அதிலும் அகன்ற நிலவெளியின் ஊடே குதிரை வீரர்கள் காற்றில் …

காற்றில் பறக்கும் வேட்டைக்காரர்கள் Read More »

மண்டியிடுங்கள் தந்தையே

டால்ஸ்டாய் நாவலுக்கான அட்டை வடிவமைப்பினை முடித்து மணிகண்டன் அனுப்பியிருந்தார். மிக நன்றாக வந்துள்ளது. நாவலின் அட்டைப்படம் சரியாக வரவேண்டும் என்பதற்காக பத்திற்கும் மேற்பட்ட அட்டைகள் வடிவமைத்துப் பார்த்துவிட்டோம். எதுவும் என் மனதிற்கு நெருக்கமாகயில்லை முடிவில் டால்ஸ்டாயின் இந்த படமும் அதிலுள்ள அவரது முகபாவமும் நாவலின் மையக்கதைக்கு மிக நெருக்கமாக இருந்தது. இதுவே நாவலின் அட்டை வடிவம். நாவல் கெட்டி அட்டை பதிப்பாக வெளியாகிறது விலை ரூ 350 டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் …

மண்டியிடுங்கள் தந்தையே Read More »

ஜீவன் லீலா

காகா காலேல்கர் இந்திய நதிகளைத் தேடிச் சென்ற தனது பயணத்தை ஜீவன்லீலா என்ற நூலாக எழுதியிருக்கிறார். மிக முக்கியமான புத்தகம். இதைப் பற்றி நான் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். நீண்டகாலமாக அச்சில் இல்லாத இந்த நூலை சாகித்ய அகாதமி மீண்டும் பதிப்பித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் ஒரு வாசகர் இதன் பிரதியை நீண்டகாலமாகத் தேடிவருவதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். சாகித்ய அகாதமி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இந்த நூலைப் பெறலாம். சென்னைப் புத்தகக் கண்காட்சியில் …

ஜீவன் லீலா Read More »

அழைப்பிதழ்

டிசம்பர் 25 மாலை ஆறுமணிக்கு எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்