அரிசி யானை- உப்பு யானை
தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றான விட்டல்ராவின் நதிமூலம் சுதந்திரப் போராட்ட நாட்களின் சாட்சியமாக எழுதப்பட்டிருக்கிறது. நாமக்கல் நகரை இதை விடச் சிறப்பாக யாரும் எழுதிவிட முடியாது. ஒரு ஆவணப்படம் போல நகரின் தொன்மையான வீதிகளையும் அதன் மனிதர்களையும் நாவல் அழகாகச் சித்தரித்துள்ளது. விட்டல்ராவ் ஒரு ஓவியர் என்பதால் காட்சிகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். எத்தனை கதாபாத்திரங்கள். மறக்கமுடியாத நிகழ்வுகள். காலத்தின் நீரோட்டம் நாவலை முன்னெடுத்துப் போகிறது மதராஸிலிருந்த நீல் சிலையை அகற்ற வேண்டும் என்பதற்காக நடந்த போராட்டம் …









