admin

சங்கீதக்காரனின் வீடு

இசையை மையமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் கே.பி.நீலமணியின் புல்லின் இதழ்கள் தனிச்சிறப்பு கொண்டது. இசைக்கலைஞரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவலின் ஊடாக அந்தக் கால சுவாமிமலை மற்றும் திருவிடைமருதூரின் சித்தரிப்புகள் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. இசைக்கலைஞர்களுக்குக் காந்தியின் மீதிருந்த ஈடுபாடு. கச்சேரியில் சுதேசி பாடல்களைப் பாடுவது, அதற்கு உருவான எதிர்ப்பு எனச் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தின் சமூகச் சூழலையும் நீலமணி நுண்மையாக விவரித்திருக்கிறார் ஹரி என்ற இளம்பாடகன் சாதகம் செய்வதில் தான் நாவல் துவங்குகிறது. திருவிழா மற்றும் திருமண …

சங்கீதக்காரனின் வீடு Read More »

சிறப்பு சலுகை

பெருந்தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள காரணத்தால் புதிய லாக்டவுன் விதிகள் அறிவிக்கபட்டுள்ளன. சென்னைப் புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கபட்டுள்ளது. இந்தச் சூழலில் புதிய நூல்களை வாங்க விரும்பும் வாசகர்களுக்காக தேசாந்திரி பதிப்பகம் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது தேசாந்திரி இணையதளத்திலிருந்து புத்தகங்களை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தேசாந்திரி பதிப்பகத்தின் அலுவலகம் சாலிகிராமத்திலுள்ளது. நேரில் இந்த நூல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் இந்த ஆண்டு வெளியான புதிய நூல்கள்

டான்டூன் என்ற எறும்பு

ரியா ரோஷன் என்ற ஏழாம் வகுப்பு மாணவி டான்டூனின் கேமிரா நூலை வாசித்து எழுதியுள்ள குறிப்பு ••• பெயர் : ரியா ரோஷன் வகுப்பு: ஏழாம் வகுப்பு வயது :12 இடம்: சென்னை புத்தகம் : டான்டூனின் கேமிரா ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம் : தேசாந்திரி விலை: Rs.150 2021 இல் நான் படித்த முதல் புத்தகம் – நீல சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து. இந்த வருடத்தில் நான் படிக்கும் முதல் தமிழ் …

டான்டூன் என்ற எறும்பு Read More »

பழகிய நாட்கள்

சா.கந்தசாமியின் தொலைந்து போனவர்கள் தமிழின் அரிய நாவல்களில் ஒன்று. 1983ல் வெளியான இந்த நாவலுக்கு முன்னுரை எழுதியுள்ள கவிஞர் ஞானக்கூத்தன் ஒரு பத்தியில் நாவலின் மையத்தைச் சிறப்பாகச் சொல்லிவிடுகிறார் “வாழ்க்கைப் பாதையில் அவனது நண்பர்கள் மீட்கமுடியாதபடி தொலைத்துப் போய்விடுகிறார்கள். அவர்களை அவன் பார்க்கலாம், உரையாடலாம். ஆனால் அவர்களை ஒன்று சேர்த்து முன்பு இழந்த உலகைத்தை மீண்டும் கட்டிவிட முடியாது. அவர்கள் தொலைத்துப் போய்விட்டார்கள். எங்கே எப்படி என்று நுட்பமாகக் கூறுகிறது நாவல் “ தன்னோடு பள்ளியில் நடித்து …

பழகிய நாட்கள் Read More »

வண்ணதாசனின் வாழ்த்து

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘மண்டியிடுங்கள் தந்தையே’ 248 பக்கங்கள் தான். புத்தாண்டு முதல் நாள் இரவு வாசிக்கத் துவங்கி, நேற்றிரவு முடித்தேன். வழக்கத்தை விட வேகம் குறைவாக அமைந்த வாசிப்பு. ஒரு குறிப்பிட்ட நாளில் வெறும் பதினாறு பக்கங்களே வாசித்திருக்கும் படி, அன்றாடத்தின் பாரம் என் மேல் சரிந்திருந்தது. அன்றாடம் புது வருடம் பழைய வருடம் எல்லாம் பார்ப்பதில்லையே.ஆனால் கடந்த நான்கு நாட்களும் அதன் பக்கங்களின் வரிகளாகவே இருந்தேன். ஒரு சிறிய வெளிச்சமும் சிறிய துக்கமும் சதா என் மேல் …

வண்ணதாசனின் வாழ்த்து Read More »

இரண்டு முடிவுகள்

பஞ்சாபி எழுத்தாளரான தலீப் கௌர் டிவானாவின் இது தான் நம் வாழ்க்கை நாவல் சாகித்திய அகாதமி பரிசு பெற்றது.  இந்நாவலை தமிழாக்கம் செய்திருப்பவர் தி.சா.ராஜு. நேஷனல் புக் டிரஸ்ட் 1992ல் வெளியிட்டுள்ளது. மிகச்சிறிய நாவல். 90 பக்கங்கள். விலை ரூ 21.  இன்றைக்கும் இதே மலிவு விலையில் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது. •• பஞ்சாப் கிராமம் ஒன்றில் உள்ள நாராயண் அம்லி வீட்டில் கதை துவங்குகிறது. கங்கையில் நீராடச் சென்ற நாராயண் தற்கொலை செய்து கொள்ள முயன்ற …

இரண்டு முடிவுகள் Read More »

குற்றவுணர்வின் பாதை மிக நீண்டது.

ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமியின் Men Without Women சிறுகதைத் தொகுப்பிலுள்ளது Drive My Car சிறுகதை. இந்தச் சிறுகதையை மையமாகக் கொண்டு ரியுசுகே ஹமாகுச்சி இயக்கியுள்ள திரைப்படம் கான்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றுள்ளதோடு தற்போது ஆஸ்கார் பரிந்துரை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது படம் பார்ப்பதற்கு முன்பு நீங்கள் சிறுகதையைப் படித்திருந்தால் படத்தின் திரைக்கதை எவ்வளவு அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். முரகாமியின் நாவல்கள் இதற்கு முன்னதாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை …

குற்றவுணர்வின் பாதை மிக நீண்டது. Read More »

லிவோச்சாவின் குற்றமனது.

தஸ்தயேவ்ஸ்கியின் மனதால் பார்க்கப்படும் லிவோச்சாவின் காதல் த.அரவிந்தன் `மண்டியிடுங்கள் தந்தையே’ படித்து முடித்தேன். இது ரஷ்ய நிலத்தின், டால்ஸ்டாய் நிலத்தின் நாவல். அதற்கேற்ப உறைபனியின் குளுமையைத் தாங்கி இருக்கிறது. காலமும் அதில் அமைதியாக உறைந்து கிடக்கிறது. எல்லோரையும் போல ரஷ்ய நிலத்தின் பனியை எப்படிக் கொண்டு வரப் போகிறீர்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நாவலைப் படிக்கத் தொடங்கிய பிறகு ஒரு நிலத்தில் பெய்கிற மழையைப்போலத்தான் பனியும், அதைக் கையாளுவதற்குச் சிரமம் இருக்காது என்பதைப்போலத் தோன்றியது. அதே …

லிவோச்சாவின் குற்றமனது. Read More »

காதலின் நினைவில்

 ‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’ (நாவல்) – வாசிப்பனுபவம் ந. பிரியா சபாபதி, மதுரை. காதல் எனும் அன்பானது இவ்வுலகில் பிறந்த யாரையும் விட்டுவைப்பதில்லை. அது அனைவரின் மனத்திலும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. இதைக் கடந்து வராதவர்கள் எவரும் இல்லை. பலர் தம் மனத்தில் எழும் அன்பினைச் சொற்களின் வழியே அன்பானவர்களின் செவிக்குள் விழச் செய்கின்றனர். பலர் அதைத் தம் மனத்திற்குள்ளேயே திரையிட்டு மறைத்து விடுகின்றனர். எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’யை …

காதலின் நினைவில் Read More »