சங்கீதக்காரனின் வீடு
இசையை மையமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் கே.பி.நீலமணியின் புல்லின் இதழ்கள் தனிச்சிறப்பு கொண்டது. இசைக்கலைஞரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவலின் ஊடாக அந்தக் கால சுவாமிமலை மற்றும் திருவிடைமருதூரின் சித்தரிப்புகள் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. இசைக்கலைஞர்களுக்குக் காந்தியின் மீதிருந்த ஈடுபாடு. கச்சேரியில் சுதேசி பாடல்களைப் பாடுவது, அதற்கு உருவான எதிர்ப்பு எனச் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தின் சமூகச் சூழலையும் நீலமணி நுண்மையாக விவரித்திருக்கிறார் ஹரி என்ற இளம்பாடகன் சாதகம் செய்வதில் தான் நாவல் துவங்குகிறது. திருவிழா மற்றும் திருமண …








