admin

இயற்கையின் காதலன்

In Search of Walt Whitman என்ற அமெரிக்க கவிஞர் வால்டர் விட்மன் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். அமெரிக்காவின் நிகரற்ற கவிஞரான வால்ட் விட்மன் 1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். சிறு வயதில் அச்சகத்தில் பணியாற்றிய விட்மன் பல்வேறு நாளிதழ்களில் கட்டுரைகள். செய்திக்குறிப்புகள் எழுதியிருக்கிறார்., பதினேழு வயதில் பள்ளி ஆசிரியராக வேலை செய்திருக்கிறார். 27 ஆவது வயதில் புரூக்லின் செய்தி …

இயற்கையின் காதலன் Read More »

கண்காணிப்பின் நிழல்

பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி என்றொரு அரிய நூலை பாரதியியல் அறிஞர் சீனி.விசுவநாதன் வெளியிட்டிருக்கிறார். இது பாரதியாரைப் பற்றிய காவல்துறையின் ரகசிய அறிக்கைகளைக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கைகள் மற்றும் குறிப்புகளைக் கி.அ.சச்சிதானந்தம் மற்றும் இரா. சுப்பராயலு இருவரும் இணைந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் பாரதியை எப்படியெல்லாம் காவல்துறைக் கண்காணித்தது, தொந்தரவு செய்தது என்பதற்கு இந்நூல் நேரடி சாட்சியமாகும். இந்தியச் சுதந்திரப் போரில் எத்தனையோ கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். ஆனால் எவரையும் கண்டு பிரிட்டிஷ் அரசு இவ்வளவு பயப்படவில்லை. …

கண்காணிப்பின் நிழல் Read More »

உதயம்.

ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு உதயம். 1952 முதல் 54 வரை அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலை அவரே அச்சுக் கோர்த்து பவானி பிரஸ் எனும் அச்சகத்தில் டிரெடில் மிஷினில் தானே அச்சிட்டிருக்கிறார். இப்படி ஒரு எழுத்தாளரின் முதற் தொகுப்பு அவராலே அச்சடிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமானது. அட்டை ஓவியம் வரைந்திருப்பவர் ஓவியர் ஆனந்தன். இந்தத் தொகுப்பில் சாந்தி பூமி, சுமை பேதம், கண்ணன் பிறந்தான், உதயம் பிழைப்பு மீனாட்சி ராஜ்யம், காந்தி ராஜ்யம் என ஏழு …

உதயம். Read More »

டாவின்சியின் கிறிஸ்து ஓவியம்.

The Lost Leonardo என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். துப்பறியும் கதைகளை விட விறுவிறுப்பாக உருவாக்கப்பட்ட ஆவணப்படமது. லியோனார்டோ டாவின்சியின் கடைசி ஓவியம் என்று விளம்பரப்படுத்தபட்டு மே 2015ல் கிறிஸ்டி நிறுவனத்தின் மூலம் 450 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட Salvator Mundi என்ற இயேசு கிறிஸ்து ஓவியம் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது. இது உண்மையில் டாவின்சி வரைந்த ஓவியம் தானா. இதற்கு எப்படி விலை மதிப்பு உண்டானது என்பதை இந்த ஆவணப்படம் விரிவாகப் பேசுகிறது. இன்னொரு தளத்தில் அரிய …

டாவின்சியின் கிறிஸ்து ஓவியம். Read More »

டால்ஸ்டாயுடன் ஒரு பயணம்

மண்டியிடுங்கள் தந்தையே – எஸ். ராமகிருஷ்ணன்…. பிரான்சிஸ் சேவியர் 2022 ல் நான் வாசித்த முதல் நாவல்…. எஸ். ராமகிருஷ்ணன் சொல்லுவது போல் தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல். ஒரு பனிக்காலத்தில் கதை தொடங்குகிறது. யஸ்னயா போல்யானா பண்ணை, போர்யா கிராமம், துலா, மாஸ்கோ எனப் பயணிக்கிறது… டால்ஸ்டாய் கால ரஷ்யாவுக்குச் சென்று டால்ஸ்டாய் யோடு பயணித்த உணர்வு வந்து போகிறது… டால்ஸ்டாய் வாழ்கையின் ஊடே பயணித்துப் பற்றிய உண்மைகளை அப்படியே சொல்லுகிறது… முன்னும் பின்னுமாக நகர்ந்து …

டால்ஸ்டாயுடன் ஒரு பயணம் Read More »

காலம் வரைந்த காட்சிகள்

காவேரிப்பட்டினம் சித்தாந்த வேங்கடரமணி எனப்படும் கே.எஸ். வேங்கடரமணி இரண்டு நாவல்களை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல்கள் தஞ்சை மாவட்ட கிராமிய வாழ்க்கையை விவரிக்கின்றன. பூம்புகாரைச் சேர்ந்த கா.சி. வேங்கடரமணி வழக்கறிஞராகப் பணியாற்றியவர். .இவரது தந்தை சித்தாந்த ஐயர் சுங்கவரி அதிகாரி. இவரது முன்னோர்கள் தஞ்சை மராட்டிய மன்னர்களின் அரசவையில் அமைச்சர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.. வேங்கடரமணி ஆரம்பப் பள்ளியினை மாயவரத்திலும் கல்லூரி படிப்பைச் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் பயின்றிருக்கிறார். சட்டம் படித்து மயிலாப்பூரில் வழக்கறிஞராகத் தொழில் நடத்தியிருக்கிறார். ஓவியத்தில் …

காலம் வரைந்த காட்சிகள் Read More »

ஒளிமலர்

பிரபு மயிலாடுதுறை ஒரு பெரிய கிராமம். அதில் உலகம் கண்ட மகத்தான கலைஞர்களில் ஒருவன் வாசம் புரிகிறான். அவனது குடும்பம். நேசிக்கும் மனைவி . கலையார்வம் மிக்க வாரிசுகள். நூற்றுக்கணக்கான அவனது பண்ணைத் தொழிலாளர்கள். பெரிய மாளிகை. பெரிதினும் பெரிது கேட்கும் அவனது மனநிலை. சாரட்டு வண்டிகள். கிராமத்துத் திருவிழாக்கள் என உலகின் மகத்தான கலைஞன் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த வாழ்க்கையைத் தன் சொற்கள் மூலம் என்றுமுள காலத்தில் நிறுவியிருக்கிறார் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். …

ஒளிமலர் Read More »

சலனமாகாத காதல்

ஆதித்ய ஸ்ரீநிவாஸ் மண்டியிடுங்கள் தந்தையே வாசித்தேன். டால்ஸ்டாயின் கதையெனத் தோன்றியது, டால்ஸ்டாயின் காதல் கதை எனத் தோன்றியது, திமோஃபியின் கதை எனத் தோன்றியது, திமோஃபிக்கும் டால்ஸ்டாய்க்குமான உறவு பற்றிய கதை எனத் தோன்றியது. ஆனால் இது அக்ஸின்யாவின் கதை. அக்ஸின்யாவில்தான் எதற்கும் சலனமாகாத காதல் திகழ்கிறது. முகங்களை சொற்களை மீறி ஆழ்மனதின் அலைகளை உணர்வதால் மட்டும் உணரப்படும் அன்பு அக்ஸியாவினுடையது. இந்த அன்பினைச் சுற்றித்தான் நாவல் ஒரு வாழ்வை நெய்துக்காட்டுகிறது. டால்ஸ்டாயின் வாழ்க்கை, பண்ணையடிமைகள், திமோஃபி, ஓல்கா, …

சலனமாகாத காதல் Read More »

வெறும் வலை

மால்டாவிலுள்ள மீனவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் “Luzzu” படத்தை இயக்கியுள்ளார் அலெக்ஸ் காமிலேரி. இயக்குநரின் முதற்படமிது தலைமுறையாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெஸ்மார்க்கின் வழியே கதை சொல்லப்படுகிறது. அவன் வைத்துள்ள நாட்டுப்படகு அவனது தாத்தாவிற்குச் சொந்தமானது. நவீன இயந்திர படகுகளும் புதிய கடல் விதிமுறைகளும் வந்தபிறகு மீன்பிடி தொழிலில் கள்ளச்சந்தை உருவாகிவிட்டது. அது ஜெஸ்மார்க்கிற்குப் பிடிக்கவில்லை. மேலும் படகுகள் அதிகாரிகளால் சீரற்ற முறையில் சோதனை செய்யப்படுகின்றன. அதிகாரிகள் மிரட்டி லஞ்சம் பெறுகிறார்கள். உள்ளூர் மீன் ஏலத்தினைச் சிலர் …

வெறும் வலை Read More »

ரயில் கதைகள்

தமிழில் எழுதப்பட்ட ரயில் சார்ந்த சிறுகதைகளைத் தொகுத்து சா. கந்தசாமி ஒரு தொகைநூல் கொண்டு வந்திருக்கிறார். இதனை சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் எனது ரயில் நிலையத்தில் ஒருவன் சிறுகதை இடம் பெற்றுள்ளது. ரஸ்கின் பாண்ட் இது போல ரயில் கதைகள் கொண்ட ஆங்கிலத் தொகுப்பு நூல் ஒன்றை கொண்டுவந்திருக்கிறார். அது போல ஒன்றை தமிழில் தொகுக்க வேண்டும் என்று கந்தசாமி விரும்பினார். இந்நூல் அவரது மறைவிற்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ளது,