admin

காணாமல் போனவர்களின் வசிப்பிடம்

(உயிர்மை 100 வது இதழில் வெளியான சிறுகதை) 1891ம் ஆண்டு நடைபெற்ற பில்வமங்கன் கொலை வழக்கு எனப்படும் மோகன்பூர் ஜமீன்தார் கொலைவழக்கினை விசாரணை செய்வதற்காக நியமிக்கபட்டிருந்த போலீஸ் சூப்ரெண்டெண்ட் யதோத்தகாரி எழுதிய டயரிக் குறிப்புகள் அவரது மறைவிற்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்பு அவரது குடும்பத்தினரால் கண்டறியப்பட்டு நூலாக்கம் பெறுவதற்காக நவயுகம் பதிப்பகத்திற்கு அனுப்பி வைக்கபட்டிருந்தது. இந்த வழக்கின் விசித்திரம் கொலையாளியாகச் சந்தேகிக்கபடும் பில்வமங்கனின் மனைவி வருணா கொலை நடந்த இரவு காணாமல் போய்விட்டார். இக் கொலைவழக்கினை விசாரிக்க …

காணாமல் போனவர்களின் வசிப்பிடம் Read More »

இரண்டு புகைப்படங்கள்

ராகவ் வெங்கடராமன் எனது படைப்புகள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறந்த புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அவர் எடுத்த இரண்டு புகைப்படங்கள் மிக அழகாக உள்ளன நன்றி ராகவ் வெங்கடராமன்

வெர்மீரின் பால் குவளை

The Milkmaid ஒவியம் 1658ல் வரையப்பட்டது என்கிறார்கள். துல்லியமாக ஆண்டினை கண்டறிய முடியவில்லை என்ற போதும் வெர்மீரின் ஒவியவரிசையைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டினை முடிவு செய்திருக்கிறார்கள். ஓவியத்தின் அகம் காலமற்றது. இந்த ஓவியத்தில் காணப்படும் பெண் நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் அழியாத உருவமாக இருக்கிறாள். அவளது பால் குவளையிலிருந்து வழியும் பால் நிற்கவேயில்லை. இந்தப் பால் வடிந்து கொண்டிருக்கும் வரை உலகில் அன்பு நீடிக்கவே செய்யும் என்கிறார்கள். அது உண்மையே. வெர்மீரின் பால் குவளையை ஏந்திய …

வெர்மீரின் பால் குவளை Read More »

ஆங்கிலத் தொகுப்பில்

Aleph Book Company தமிழின் முப்பது சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து THE GREATEST TAMIL STORIES EVER TOLD என ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார்கள் சுஜாதா விஜயராகவன் மற்றும் மினி கிருஷ்ணன் இந்தத் தொகுப்பினைத் தேர்வு செய்து உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் தொகுப்பில் எனது சிறுகதை புறாப்பித்து இடம்பெற்றுள்ளது.

பனியில் மறையாத காலடிகள்.

ஜான் ஃபோர்டின் புகழ்பெற்ற திரைப்படமான தி சர்ச்சர்ஸ் பாதிப்பில் அதே கதையினைத் துருவப்பகுதியில் நடப்பதாகப் புதிய திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். Maliglutit (searchers) எனும் இப்படத்தை இயக்கியவர் சகரியாஸ் குனுக். 2016ல் வெளியாகியிருக்கிறது. உலகின் முதற்குடிமக்கள் என்று அழைக்கப்படும் இனூட் பூர்வகுடிகள் துருவப்பகுதியில் வாழுகிறார்கள். உறைபனிப் பிரதேசத்தில் வசிக்கும் இவர்கள் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டவர்கள். உறைபனியில் பயணம் செய்வதற்கு நாய்களால் இழுக்கப்படும் வண்டியைப் பயன்படுத்துகிறார்கள். இப்படம் இனூட் குழுக்களுக்குள் உள்ள சண்டை, மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை, உணவு …

பனியில் மறையாத காலடிகள். Read More »

தூரதேசவாதியின் நெடும்பயணக் குறிப்பு

 ( ‘உப பாண்டவம்’ நாவலை முன்வைத்து) முனைவர் ப. சரவணன்       எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நாவல்களுள் முதன்மையானதும் முக்கியமானதுமான நாவல் ‘உப பாண்டவம்’. அதன் கதைக்களம் மகாபாரதம். இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மகாபாரதம் பற்றிய அடிப்படைப் புரிதல் இருக்கும். காரணம், மகாபாரதம் இந்தியத் தொல் மரபில் நீக்கமுடியாத ஓர் அடுக்கு அடித்தளம். ஒட்டுமொத்த இந்தியக் குடிமக்களையும் நரம்பில் கோத்த மணிகளாக மாற்றி, மணிமாலையாக உருவாக்கி, ஒளிரச் செய்வது  மகாபாரதம் அன்றி வேறேது? அத்தகைய இந்தியக் …

தூரதேசவாதியின் நெடும்பயணக் குறிப்பு Read More »

மூன்றாம் உலகிலிருந்து வருகிறவன்

நாகிப் மாஃபௌஸ் (நோபல் பரிசு ஏற்புரையின் ஒரு பகுதி) தமிழில் சா.தேவதாஸ். என் பெயர் இப்பரிசிற்காக அறிவிக்கப்பட்டவுடன், அந்த இடம் சட்டென்று நிசப்தமானதாகவும், பலரும் நான் யார் என்பது அறியாமல் வியந்ததாகவும் ஓர் அயல் நாட்டு நிருபர், கெய்ரோவில் என்னிடம் கூறினார். எனவே இயன்றவரையில் சுருக்கமாக என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுகிறேன். சரித்திரத்தின் ஒரு கட்டத்தில் இருவேறு நாகரிகங்களுக்கிடையே நிகழ்ந்த ஒரு சந்தோஷமான திருமணத்தின் மூலம் பிறந்தவன் நான். இவற்றில் முதல் நாகரிகத்திற்கு ஏழாயிரம் வயதாகிறது. அது …

மூன்றாம் உலகிலிருந்து வருகிறவன் Read More »

கருத்தரங்கில்

நேற்று நடைபெற்ற எனது படைப்புகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள். காலை பத்து மணிக்குத் துவங்கிய நிகழ்வு நிறைவுபெற இரவு எட்டுமணியாகிவிட்டது. எனது படைப்புகள் குறித்துப் பேசியவர்கள் ஆழ்ந்து படித்துச் சிறப்பாக உரையாற்றினார்கள். படைப்பின் நுண்மைகளை அவர்கள் எடுத்துக்காட்டிய விதம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. காலை அமர்வில் பேசிய நீதி நாயகம் சந்துரு அவர்கள் இடக்கை நாவல் பற்றிச் சிறப்பாகப் பேசினார். எனது ஆசான் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் எனது படைப்புகள் மற்றும் …

கருத்தரங்கில் Read More »

ஒரு நாள் கருத்தரங்கம்

நாளை எனது படைப்புகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து நற்றுணை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. என்னைத் தொடர்ந்து வாசித்து வரும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இப்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கல்விப்புலங்களில் எனது படைப்புகள் குறித்த கருத்தரங்குகள் நிறையவே நடந்துள்ளன. எனது படைப்புகளை ஆராய்ந்து இருபதுக்கும் மேற்பட்டவர்கள் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஆறு பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். பொதுத்தளத்திலும் நிறைய விமர்சனக் …

ஒரு நாள் கருத்தரங்கம் Read More »

கலைஞர் பொற்கிழி விருது

நாளை (13/11/2021) மாலை பபாசி வழங்கும் கலைஞர் பொற்கிழி விருது விழா நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு விருதுவிழா நடைபெறாத காரணத்தால் 2020 மற்றும் 2021ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு இணைந்து நடைபெறுகிறது. இந்நிகழ்வில் 2021ம் ஆண்டிற்கான உரைநடை பிரிவில் விருது பெறுகிறேன் நாள் 13.11.2021நிகழ்வு நடைபெறும் இடம் வாணி மஹால்103 ஜி.என். செட்டி சாலை தி.நகர். சென்னை 17நேரம் மாலை 6 மணி இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்