admin

அர்த்தமற்ற விசாரணை

உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் வாழ்க்கையினையும் அவரது புகழ்பெற்ற லிஹாஃப் சிறுகதையினையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது லிஹாஃப் திரைப்படம். இதை இயக்கியவர் ரஹத் ஹஸ்மி. சர்ச்சைக்குரிய இந்தக் கதையை ஆபாசம் எனக் கருதி இஸ்மத் மீது நீதிமன்ற வழக்குத் தொடரப்பட்டது. இதற்காக அவர் லாஹுர் நீதிமன்றத்திற்குச் சென்று வந்தார். சதத் ஹசன் மண்டோ மீதும் இது போன்ற ஆபாச வழக்குத் தொடரப்பட்ட காரணத்தால் அவர்கள் இணைந்து லாஹுர் சென்று வந்தார்கள். இந்தப் படம் இஸ்மத் வீட்டிற்குப் போலீஸ் வருவதில் …

அர்த்தமற்ற விசாரணை Read More »

கிழவனும் இளைஞனும்

பழமையான சீனக்கதை ஒன்றை வாசித்தேன் மழைக்காலம் ஒன்றில் குடையோடு ஒரு இளைஞன் ஆற்றுப்பாலத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அந்தப் பாலத்திலிருந்த ஒரு பிச்சைக்காரக் கிழவன் அவனைக் கண்டதும் தனது இடதுகாலில் அணிந்திருந்த செருப்பை ஆற்றில் தூக்கிவீசிவிட்டு அதை எடுத்துத் தரும்படி கேட்கிறான் .இளைஞனும் கிழவன் மீது பரிதாபம் கொண்டு ஆற்றில் குதித்துச் செருப்பை மீட்டுக் கொண்டுவந்து கொடுக்கிறான். இப்போது பிச்சைக்காரன் புன்சிரிப்புடன் தனது வலதுகால் செருப்பை ஆற்றில் வீசி எறிந்து அதை எடுத்துக் கொண்டு வரச் சொல்கிறான். …

கிழவனும் இளைஞனும் Read More »

மார்க்வெஸின் கடைசி நாட்கள்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மறைவிற்குப் பிறகு அவரது கடைசி நாட்களைப் பற்றியும், குடும்பத்தினர் அதை எதிர்கொண்டவிதம் பற்றியும் நினைவு கூர்ந்து அவரது மகன் ரோட்ரிகோ கார்சியா A FAREWELL TO GABO AND MERCEDES என ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ரோட்ரிகோ கார்சியா ஹாலிவுட்டில் திரைப்பட இயக்குநராக உள்ளார் இந்நூல் மார்க்வெஸ் மற்றும் அவரது மனைவியின் மறைவைப் பற்றிய மகனின் துயர நினைவுகளைப் பேசுகிறது முதுமையில் மார்க்வெஸ் மெல்லத் தனது நினைவாற்றலை …

மார்க்வெஸின் கடைசி நாட்கள். Read More »

நூற்றாண்டின் நினைவுகள்

Around India with a Movie Camera என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன் பிரிட்டனின் BFI தேசிய ஆவணக் காப்பகத்திலுள்ள இந்தியா பற்றிய ஆவணப்படங்களிலிருந்து 72 நிமிஷங்கள் ஓடக்கூடிய இந்தத் தொகுப்பினை உருவாக்கியிருக்கிறார் சந்தியா சூரி. 1899ல் இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளில் துவங்கி 1947 வரையிலான பல்வேறு வகைக் காட்சிப்பதிவுகளைத் தேடிச்சேகரித்து ஒன்றிணைத்திருக்கிறார் இந்த ஆவணப்படத்தின் மூலம் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் எப்படி வாழ்ந்தார்கள். அன்றைய மகாராஜாக்கள் மற்றும் வைஸ்ராய்களின் ஆடம்பர வாழ்க்கை. இசை மற்றும் நடனக்கலைஞர்களின் உலகம். புலி …

நூற்றாண்டின் நினைவுகள் Read More »

இரண்டு கிழவர்கள்

விகடன் தீபாவளி மலரில் வெளியான சிறுகதை டெல்லிக்கு விமானத்தில் தான் போக வேண்டும் என்று பட்டாபிராமன் நினைத்தார். பின்பு காந்தி ஒருமுறை கூட விமானத்தில் போனதில்லையே. நாம் ஏன் காந்தி சமாதியைக் காண விமானத்தில் போக வேண்டும் என்று தோன்றியது. உடனே டெல்லி ரயிலில் டிக்கெட் போட்டார். காந்தி சமாதியை பார்க்க வேண்டும் என்பதற்காக டெல்லி போகிறேன் என்று மகனிடம் சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டான். இந்த வயதான காலத்தில் எதற்காகக் காந்தி சமாதியைப் பார்க்க வேண்டும். பல …

இரண்டு கிழவர்கள் Read More »

தாகூரின் குரலில்

இந்தியாவின் தேசிய கீதத்தை மகாகவி தாகூர் பாடும் காணொளி ஒன்றைக் கண்டேன். அவர் எழுதிய தேசியகீதத்தை அவரே பாடிக் கேட்பது அபூர்வமான தருணம். தாகூர் மெய்மறந்து பாடும் அழகும் ஜெயகே என உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்வதும் மனதைத் தொடுவதாக இருந்தது. நான் பள்ளியில் படித்த காலத்தில் மாணவர்களே ஜன கண மன சேர்ந்து பாட வேண்டும். வெறுமனே உதடு அசைத்தால் ஆசிரியர் கண்டுபிடித்துவிடுவார். ஆகவே மாணவர்கள் தேசியகீதத்தை மனப்பாடம் செய்து வைத்திருப்பார்கள். பள்ளி ஆண்டுவிழாவின் போது மட்டும் மாணவிகள் …

தாகூரின் குரலில் Read More »

துயிலின் ரகசியங்கள்

புரவி நவம்பர் இதழில் வெளியான நேர்காணல் நேர்காணல் செய்தவர் : கமலதேவி 1.நோய்மை என்பது வாதையா, மீட்சியா என்ற கேள்வி நாவல் முழுக்கச் சுழன்று வருகிறது. வாதை என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அது எவ்வகையில் மீட்சியாக வாய்ப்புள்ளது? நோய் உடலுடன் தொடர்பு கொண்டது என்றாலும் அது நிறைய மாற்றங்களை மனதளவில் கொண்டு வருகிறது. நோயுற்ற தருணங்களில் நாம் வயதை இழந்து விடுகிறோம். பிறரது அன்பிற்காக ஏங்குகிறோம். நோயுறும் போதெல்லாம் கடந்தகாலத்தை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிக்கிறோம். நோயிலிருந்து நலமடைந்தவுடன் …

துயிலின் ரகசியங்கள் Read More »

பனித்துளிகளைச் சேகரிப்பவள்.

இலக்கியத்தில் பதிவான சில சித்திரங்களை வாழ்நாளில் நாம் மறக்கமுடியாது. முதன்முறையாக வாசிக்கும் போது அடைந்த சந்தோஷத்தை இன்று வாசிக்கும் போதும் அந்த வரிகள் தருகின்றன. பனித்துளிகளைச் சேகரித்து வந்து அந்தப் பனிநீரால் முகத்தைக் கழுவிக் கொண்டால் அழகி ஆகிவிடுவாள் என நினைத்து ஒரு பேதைப் பெண் பனித்துளிகளைச் சேகரிக்கச் செல்லும் பாஸீ அலீயெவா Fazu Aliyeva நாவலில் வரும் அந்தக் காட்சி எத்தனை அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. இவ்வளவு அழகான ஒரு நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்த பூ. …

பனித்துளிகளைச் சேகரிப்பவள். Read More »

நிகழ்ச்சி நிரல்

எனது படைப்புலகம் குறித்து நடைபெறவுள்ள ஒரு நாள் கருத்தரங்கின் நிகழ்வு நிரல். நவம்பர் 14 காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்