எனது பரிந்துரைகள் -3
சென்னை புத்தகக் கண்காட்சியின் மூன்றாம் நாளுக்கான எனது பரிந்துரைகள். •• பிறக்கும் தோறும் கவிதை ஷங்கர் ராமசுப்ரமணியன் வனம் வெளியிடு கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் நவீன கவிதையுலகில் தனித்துவமான கவிஞர். கவிதைகள் குறித்த அவரது கட்டுரைகள் ஆழ்ந்த புரிதலின் வெளிப்பாடாக அமைந்தவை. சமகாலத் தமிழ் கவிதைகள் குறித்த அவரது இந்தக் கட்டுரைகளின் தொகுப்பு நவீன தமிழ்க்கவிதையின் போக்கினையும் சாதனைகளையும் எடுத்துச் சொல்கிறது இயந்திரம் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் எழுதிய நாவல். தமிழாக்கம் ஆனந்தகுமார். நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு. …







