admin

இரவின் சிறுபாடல்

புதிய சிறுகதை கடைசிப் பஸ்ஸைத் தவறவிட்டிருந்தான் ரகுபதி. வேலை தேடிச் சுற்றியலைகிறவன் சரியான நேரத்திற்கு வீட்டிற்குப் போய் என்ன ஆகப்போகிறது என்ற அவனது நினைப்பு தான் பேருந்தைத் தவறவிட முக்கியக் காரணம். இனி காலை ஐந்தரை மணிக்கு தான் அவனது கிராமத்திற்குச் செல்லும் பேருந்து வரும். அதுவரை இந்தப் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியது தான். என்ன செய்வது எனத் தெரியவில்லை. நேரத்தை கழிக்க வேண்டும். நெருக்கடியான சூழலில் காலம் நீண்டுபோய்விடக்கூடியது. அன்றைக்கும் அப்படித்தான். இப்போது தான் …

இரவின் சிறுபாடல் Read More »

சுழலும் பார்வைகள்-1

மராத்தி எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலேவிற்கு 2020ற்கான சரஸ்வதி சம்மான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது டாடா நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டது. பதினைந்து லட்ச ரூபாய் விருதுத் தொகை தருகிறார்கள். லிம்பாலே மராத்தியின் முக்கிய தலித் எழுத்தாளர். அவரது நான்கு நூல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள் தமிழ் இலக்கிய உலகிலிருந்து இந்த விருதினை இந்திரா பார்த்தசாரதி மற்றும் பேராசிரியர் மணவாளன் இருவரும் பெற்றுள்ளார்கள். •• எழுத்தாளர் உம்பர்த்தோ ஈகோவின் நூலகம் என்றொரு வீடியோவைப் பார்த்தேன். …

சுழலும் பார்வைகள்-1 Read More »

இந்திய இலக்கியத்தின் முகம்

.ரஷ்ய இலக்கியங்களையும் உலகின் சிறந்த படைப்புகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் நீங்கள் ஏன் இந்திய இலக்கியங்களை அறிமுகம் செய்யவில்லை என்று நர்மதா என்ற இளம் வாசகி மின்னஞ்சலில் கேட்டிருந்தார். நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சாகித்ய அகாதமி மூலம் நிறைய இந்திய நாவல்கள், சிறுகதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு மலிவு விலையில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மிகச்சிறந்த சில நாவல்களுக்கு ஒரு விமர்சனம் கூட வெளியானதில்லை என்பது வருத்தமான விஷயமே என் கல்லூரி நாட்களில் எந்த எழுத்தாளரைச் சந்திக்கச் சென்றாலும் …

இந்திய இலக்கியத்தின் முகம் Read More »

உலோக விலங்குகள்

ஒவ்வொரு நாய்க்கும் அதன் இரவென்பதுண்டு -அய்யப்ப பணிக்கர் அவனது வீட்டின் வரவேற்பறை விலங்குகளால் நிரம்பியிருக்கிறது. விலங்குகள், வெண்கலம், எஃகு, பித்தளையில் வார்க்கப்பட்டவை.. அமைதியாக இருக்க அவை பழக்கப்படுத்தப்பட்டிருப்பினும், நேற்றிரவில் பெரும் அமளியை ஏற்படுத்திவிட்டன. நேற்று நாய்களின் முறை. ஒன்றின் குரைப்பு மற்றவைகளைத் தூண்டிவிட்டது. அதைக் கேட்டு நரிகள் அமைதியற்று ஊளையிடத் தொடங்குகின்றன. பித்தளைச் சிங்கம் கர்ஜிக்க எழுந்தது. பாடப் புத்தகங்களில் கர்ஜனை என்பதே சொல்; முயற்சித்து, ஆனால் சளியிருப்பதால், கைவிட்டுத் தானாகவே கூண்டுக்குத் திரும்பிவிட்டது. கச்சேரி முடிந்து …

உலோக விலங்குகள் Read More »

சுபமங்களா இதழில்

சுபமங்களா இதழில் வெளியான எனது சிறுகதைகள் குறித்து வண்ணநிலவன் எழுதியுள்ள இந்தக் குறிப்பு சுபமங்களா நாட்களை நினைவுபடுத்தியது. கோமலின் அன்பு மறக்கமுடியாதது. சுபமங்களா இதழின் பங்களிப்பு பற்றி வெளியான சிறப்பு மலரில் இந்தக் கட்டுரையை வண்ணநிலவன் எழுதியிருக்கிறார். சுபமங்களா இதழ்கள் யாவும் இணையத்தில் வாசிக்க கிடைக்கிறது. https://www.subamangala.in/

ஒளியை வாசிக்கிறவன்

அட்சரம் இதழில் வெளியான சிறுகதை – மீள்பிரசுரம். அந்த அறையில் அவனும் திமிங்கிலத்தையும் தவிர வேறு யாருமேயில்லை. கடலைவிட்டு வெளியேறி நாற்பதாண்டுகளாகி, உரு அழிந்து எலும்பு பொறியென நீண்டு நிசப்தித்திருக்கும் அந்தத் திமிங்கலத்தை எப்போது காணும் போதும் பிரம்மாண்டம் குறைவதேயில்லை. கோபாலராவ் திரும்பவும் அதன் வால் அருகே நின்றவனாக மொத்த திமிங்கலத்தையும் ஒருமுறை பார்த்தான். கண்களில் அடங்காத உருவம். மீனின் அடிவயிறு ஊஞ்சலென ஆடிக்கொண்டிருந்தது. இந்தத் திமிங்கலம் தன்னை விழுங்கியிருந்தால் இதே விலாவின் இரு எலும்புகளை பற்றியபடி …

ஒளியை வாசிக்கிறவன் Read More »

கூண்டிற்கு வெளியே

கூண்டிற்குள் அடைக்கபட்ட விலங்குகளை ஏன் வேடிக்கை பார்க்கிறோம். அண்ணா உயிரியல் பூங்காவிற்குச் செல்லும் போதெல்லாம் அங்கே வரும் மனிதர்களின் விசித்திரமான செயல்களை, நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். விலங்குகளை விட மேம்பட்டவனாக கருதப்படும் மனிதன் தான் உண்மையில் வேடிக்கை பார்க்கப்பட வேண்டியவன். வீட்டு விலங்குகள் அவனது அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றன. காட்டுவிலங்குகளோ அவனை பொருட்டாக கருதுவதேயில்லை. ஆகவே தன் அதிகாரத்திற்குள் விலங்குகளை அடக்கி ஒடுக்கச் செய்யும் முயற்சியே மிருகக்காட்சி சாலைகள். இயற்கையான வாழ்விடத்தில் மிருகங்களைக் காணுவதும் மிருகக் …

கூண்டிற்கு வெளியே Read More »

மீட்கப்பட்ட சிறுமி.

News of the World என்ற டாம் ஹாங்க்ஸ் நடித்த திரைப்படம் இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளது. அந்தப்படத்தினை நேற்றிரவு பார்த்தேன் அதில் கேப்டன் ஜெபர்சன் என்ற கதாபாத்திரத்தில் டாம் ஹாங்க்ஸ் நடித்திருக்கிறார். நாளிதழில் வந்துள்ள முக்கியமான செய்திகளைத் திரட்டி அவற்றைத் தொலைதூரங்களில் வசிக்கும் மக்களுக்கு அறிவிப்பு செய்யும் நியூஸ் ரீடர் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அந்தக் காலத்தில் மக்கள் கட்டணம் கொடுத்து செய்தி வாசிப்பினைக் கேட்டிருக்கிறார்கள். என் பத்துவயதுகளில் ராணுவத்தில் வேலைக்குப் போய் திரும்பி …

மீட்கப்பட்ட சிறுமி. Read More »

புறக்கணிப்பின் நிலக்காட்சிகள்

“கடவுள் விடுகிற மூச்சைப்போல் காற்று வீசும் கரிசல்வெளி வெயிலின் சமுத்திரத்தில் யாவும் முங்கிய நிசப்தம் கருஞ்சாம்பல் மண்பரப்புக்குள் மெல்ல முனகும் சிருஷ்டிகரம்“ எனக் கவிஞர் தேவதச்சனின் கவிதை ஒன்று துவங்குகிறது. இந்தக் கவிதையில் இடம்பெற்றுள்ள கடவுள் விடுகிற மூச்சைப் போலக் காற்றுவீசும் நிலப்பரப்பைத் திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்பிரான்செஸ்கோ ரோஸி. அந்தப்படம் Christ Stopped at Eboli (1979) இத்தாலிய இயக்குநரான பிரான்செஸ்கோ ரோஸி இயக்கிய Christ Stopped at Eboli (1979), இத்தாலியின் புகழ்பெற்ற எழுத்தாளரான கார்லோ லெவியின் …

புறக்கணிப்பின் நிலக்காட்சிகள் Read More »