புத்தரின் சொற்கள்.
தீக நிகாயம் என்ற பௌத்த மறைநூலை மு.கு.ஜகந்நாத ராஜா மொழியாக்கம் செய்திருக்கிறார். திரிபிடகங்களில் ஒன்றான சுத்தபீடகத்திலுள்ள தீக நிகாயம் புத்தரின் போதனைகளை விரிவாக உணர்த்துகிறது. இராஜபாளையத்தில் வசித்து வந்த மு.கு.ஜகந்நாத ராஜா அவர்களை நேரில் சந்தித்துப் பழகியிருக்கிறேன். அவரது நூலகத்திற்குச் சென்று பௌத்தம் தொடர்பான நூல்களை வாசித்திருக்கிறேன். மணிமேகலை மன்றம் அமைப்பை நடத்தி வந்த மு.கு.ஜகந்நாத ராஜா சமஸ்கிருதம், பிராகிருதம். பாலி மொழிகளைக் கற்றவர். மணிமேகலையை ஆழ்ந்து படிப்பதற்காகவே தான் பாலி மொழியினைக் கற்றுக் கொண்டதாகக் கூறினார். …









