admin

தந்தை எனும் அதிகாரம்

தந்தையும் தனயர்களும் என்ற தலைப்பில், இவான் துர்கனேவ் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அந்தத் தலைப்பு எனக்குப் பிடித்தமானது. காரணம், தலைமுறைகள் மாறினாலும் தந்தைக்கும் தனயனுக்குமான உறவிலுள்ள எதிர் நிலை மாறவேயில்லை. தந்தையாக இருப்பது என்பது ஒரு அதிகாரம்.எல்லாத் தந்தைகளுக்கும் அது பொருத்தமானதே.தனயன் என்பது ஒரு மீறல். ஒரு விடுபடல். சுதந்திரம். எல்லாக் காலத்திலும் மகன் தந்தையினைக் கடந்து போகவும் மீறிச் செயல்படவுமே முயற்சிப்பான். அதுவே இயல்பு. மகன் வளர்ந்து பெரியவன் ஆகி திருமணமாகி மகனோ, மகளோ பெற்றவுடன் …

தந்தை எனும் அதிகாரம் Read More »

திசை எட்டும்

சிறந்த மொழிபெயர்ப்பாளரும் நண்பருமான குறிஞ்சி வேலன் மொழிபெயர்ப்பிற்கென்று திசை எட்டும் இதழை மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த கொரோனா காலத்தில் இதழைத் தயாரிப்பது கடினமான பணி. அதிலும் சிறப்பாக முயன்று திசை எட்டும் 65-66 வது இதழைக் கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள் இந்த இதழில் எனது இரண்டு குமிழ்கள் சிறுகதையை வின்சென்ட் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் வின்சென்டிற்கு எனது அன்பும் நன்றியும்

நூரெம்பெர்க் விசாரணை

நூரெம்பெர்க் வழக்கு விசாரணை உலக வரலாற்றில் மிக முக்கியமானது. ஹிட்லரின் நாஜிக் கொடுமைகளை விசாரிக்க நூரெம்பெர்க்கில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், சர்வதேச நீதிபதிகள் முன்பாக நாஜி ராணுவ தளபதி, அன்றைய அமைச்சர்கள். உயரதிகாரிகள். நீதிபதிகள் எனப் பலரும் நீதி விசாரணை செய்யப்பட்டார்கள். இந்த விசாரணையைப் பற்றி Judgment at Nuremberg என்றொரு படம் 1961ல் வெளியானது. மிகச் சிறந்த படமிது. அந்தத் திரைப்படத்தில் ஹிட்லர் மட்டும் குற்றவாளியில்லை அவரை மிகப்பெரிய ஆளுமையாகக் கொண்டாடிய அனைவரும் குற்றத்திற்கு உடந்தையானவர்களே. …

நூரெம்பெர்க் விசாரணை Read More »

கூடுதலான எனது கைகள்

எமிதால் மஹ்மூத் (Emtithal Mahmoud) சூடானியக் கவிஞர். அமெரிக்காவில் வசிக்கிறார். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பின் நல்லெண்ண தூதராகச் செயல்பட்டு வரும் இவர் கென்யா, கிரீஸ் மற்றும் ஜோர்டானில் உள்ள அகதிகள் முகாம்களுக்குச் சென்று, அகதிகளின் நிலைமை குறித்து ஆராய்ந்து எழுதி வருகிறார். மஹ்மூத் சூடானின் டார்பூரில் பிறந்தவர், 1998 இல் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார். அங்கே பிலடெல்பியாவில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் பின்னர் அவர் யேல் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பயின்றார் யேல் பல்கலைக்கழகத்தில் பயின்ற நாட்களில் …

கூடுதலான எனது கைகள் Read More »

பொங்கல் புத்தகத் திருவிழா

சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள டிரேட் சென்டர் எதிரில் PMAC EXPO HALLல் ஜனவரி 8 முதல் ஜனவரி 18 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் தேசாந்திரி அரங்கு அமைத்துள்ளது. அரங்கு எண் 5 தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 வரை இந்தக் கண்காட்சி செயல்படும் வழக்கமாக நடைபெறும் நந்தனம் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு தாமதமாகிற காரணத்தால் சிறிய புத்தகக் கண்காட்சியினை சென்னை வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் ஐம்பது …

பொங்கல் புத்தகத் திருவிழா Read More »

துணையெழுத்து சிறப்பு பதிப்பு

ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுச் சாதனை புரிந்துள்ள துணையெழுத்து ,சிறப்புப் பதிப்பாக கெட்டி அட்டையில் வெளியிடப்பட்டிருக்கிறது இதன் விலை ரூ 475 தேசாந்திரி பதிப்பகம் D1, Gangai apartments, 110,Sathya garden, Saligramam,Chennai – 600 093CALL US(044) 236 44947(+91) 9600034659desanthiripathippagam@gmail.com ஆன்லைனில் வாங்க : https://www.desanthiri.com/

கர்னலின் நாற்காலி சிறப்பு பதிப்பு

கர்னலின் நாற்காலி -குறுங்கதைகளின் தொகுப்பு சிறப்புப் பதிப்பாக கெட்டி அட்டையில் வெளியாகியுள்ளது இதன் விலை ரூ 470. தேசாந்திரி பதிப்பகம் D1, Gangai apartments, 110,Sathya garden, Saligramam,Chennai – 600 093CALL US(044) 236 44947(+91) 9600034659desanthiripathippagam@gmail.com ஆன்லைனில் வாங்க : https://www.desanthiri.com/

ஏழாம் நாள் பேருரை- இதாலோ கால்வினோ

உலக இலக்கியம் குறித்த பேருரைகளின் ஏழாம் நாளில் இதாலோ கால்வினோவின் புலப்படாத நகரங்கள் குறித்து உரை நிகழ்த்தினேன் ஏழு நாட்களும் இந்த உரைகளைத் தொடர்ந்து கேட்டு வந்த வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி இந்தப் பேருரைகளைப் பாராட்டி நிறைய மின்னஞ்சல்கள். தொலைபேசி அழைப்புகள் வந்தன. அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் புத்தாண்டில் இப்படி ஒரு நிகழ்வைச் சாத்தியப்படுத்திய ஸ்ருதி டிவிக்கு எனது அன்பும் நன்றியும் இந்தப் பேருரைகள் ஸ்ருதிவிடி யூடியூப் …

ஏழாம் நாள் பேருரை- இதாலோ கால்வினோ Read More »

திரைக்கூட்டணி

புக்கர் பரிசு மற்றும் ஆஸ்கார் விருது இரண்டையும் வென்ற ஒரே எழுத்தாளர் ரூத் ப்ராவர் ஜாப்வாலா. மெர்சண்ட் ஐவரி தயாரிப்பில் வெளியான படங்களுக்கு இவரே திரைக்கதைகள் எழுதியிருக்கிறார். இவர்கள் கூட்டணி கடைசிவரை நீடித்தது. ஹாலிவுட் சினிமாவில் பெண் திரைக்கதை ஆசிரியர்கள் குறைவு. அதிலும் இப்படி நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து ஒரு கூட்டணியாகத் திரைப்படத்தில் பணியாற்றுவது அபூர்வமானது. ஜாப்வாலா பன்னிரண்டு நாவல்களையும் எட்டு சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். 23 படங்களுக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார். இதில் இரண்டு முறை சிறந்த …

திரைக்கூட்டணி Read More »

ஏழாம் நாள் உரை -இதாலோ கால்வினோ

உலக இலக்கியச் சொற்பொழிவின் ஏழாம் நாள் உரை இதாலோ கால்வினோவின் புலப்படாத நகரங்கள் பற்றியது. இன்று மாலை ஆறுமுப்பது மணிக்கு ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகும்