admin

புத்தக வெளியீடு-2

டிசம்பர் 25 மாலை நேரலை வழியாக எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதனை ஸ்ருதி டிவியுடன் இணைந்து தேசாந்திரி பதிப்பகம் நடத்துகிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஸ்ருதி டிவி முகநூல் மற்றும் யூடியூப் வழியாக இந்த ஒளிபரப்பு நடைபெறும் இதில் வெளியிடப்படும் உலக இலக்கியம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம் தொடர்புக்கு தேசாந்திரி பதிப்பகம் D1 ,Gangai apartments, 80 Feet Road, …

புத்தக வெளியீடு-2 Read More »

டிசம்பர் 25 புத்தக வெளியீடு

டிசம்பர் 25 மாலை நேரலை வழியாக எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதனை ஸ்ருதி டிவியுடன் இணைந்து தேசாந்திரி பதிப்பகம் நடத்துகிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஸ்ருதி டிவி முகநூல் மற்றும் யூடியூப் வழியாக இந்த ஒளிபரப்பு நடைபெறும். இதில் வெளியாகும் எனது குறுங்கதைகளின் தொகுப்பு. கர்னலின் நாற்காலி நகுலன் வீட்டில் யாருமில்லை என்ற குறுங்கதைகளின் தொகுப்பினை முன்பு வெளியிட்டிருக்கிறேன். இந்த தொகுப்பில் 125 …

டிசம்பர் 25 புத்தக வெளியீடு Read More »

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்

அமெரிக்காவில் வசிக்கும் வித்யா சுபாஷ்  கதைகேளு கதை கேளு என்ற ஆடியோ ஒலிப்பரப்பில் எனது தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் சிறுகதையைச் சிறப்பாக பேசியிருக்கிறார். அவரது குரலின் வழியே குளிரையும், வெளிச்சத்தையும் நெருக்கமாக அனுபவிக்க முடிகிறது. அவருக்கு எனது மனம் நிரம்பிய நன்றி. Writer: S. Ramakrishnan Narrator: Vidhya Subash Audio Credit : Vidhya Subash இணைப்பு :

அஞ்சலி

அன்பிற்குரிய நண்பர் கருப்பு கருணா மறைந்தார் என்ற செய்தியை நம்பமுடியவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பழகிய தோழன். திருவண்ணாமலை என்றாலே கருணாவும் பவாவும் தான். நானும் கோணங்கியும் எந்த இரவிலும் வந்து சேருவோம். அன்பு காட்டி ஆதரவு கொடுத்த தோழமைகள். எத்தனை நிகழ்வுகளை கருணாவும் பவாவும் நடத்தியிருக்கிறார்கள். மறக்க முடியாத நினைவுகள். கண்ணீர் கசிகிறது. அன்பின் நண்பன் கருணா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

அக்காலம்- மஹாபலிபுரம்

அந்தக் காலத்தில் மஹாபலிபுரத்திற்கு படகில் போய் வந்திருக்கிறார்கள். அந்த நினைவுகளைச் சொல்லும் இந்தக் கட்டுரையை இன்று வாசிக்கையில் வியப்பாகவுள்ளது. ‘விவேக சிந்தாமணி’ இதழில் ச.ம. நடேச சாஸ்திரி எழுதிய குறிப்பு 1894 ஏப்ரலில் வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து தெற்கே செல்லுகிற தென்னிந்தியா இருப்புப்பாதை வழியாகச் செங்கற்பட்டு சென்றால் ஒன்பது மைல் தூரத்திலுள்ள திருக்கழுக்குன்றம் என்ற திவ்விய க்ஷேத்திரத்தை ஜட்கா வண்டிகள் மூலமாய்ச் சேரலாம். இந்தவிடத்திலிருந்து ஒன்பது மைல் மேற்படி ஜெட்காவிலேயே ஏறிச் சென்றால் யாம் தலைப்பில் குறித்த மஹாபலிபுரம் …

அக்காலம்- மஹாபலிபுரம் Read More »

ஆங்கிலத்தில்

உறுபசி நாவலின் ஆங்கில மொழியாக்கம் கிறுகிறு வானம் நாவலின் ஆங்கில் மொழியாக்கம் எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கம் தேசாந்திரியில் கிடைக்கிறது

தெலுங்கு மொழியாக்கம்

எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு தெலுங்கில் வெளியாகிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் ஜி.பாலாஜி. நைல் நதி சாட்சிகா என்ற தலைப்பில் இந்த தொகுப்பு வெளியாகிறது. ஜி.பாலாஜி எனது யாமம் நாவலை முன்னதாக மொழியாக்கம் செய்திருக்கிறார். மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். இந்த தருணத்தில் தெலுங்கில் இந்த கதைகள் வெளிவர முன்முயற்சி எடுத்த நண்பர் குறிஞ்சி வேலன் அவர்களுக்கு மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளியின் பயணம்.

லைட்டிங் என்பது ஒளியை ஒரு குறிப்பிட்ட விதமாக எடுத்துச் செல்வது.  கையாளுவது. மிகையான வெளிச்சம் காட்சியின் இயல்பைக் கெடுத்துவிடும் ஆகவே நான் பெரும்பாலும் ஒளியை விட நிழல்களைப் பயன்படுத்த விரும்புகிறேன் என்கிறார் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் வில்மோஸ் ஸிக்மண்ட். ஆஸ்கார் விருது பெற்றவர். ஹாலிவுட் இயக்குநர்கள். நடிகர்கள் பற்றி நிறைய ஆவணப்படங்கள் உருவாக்கபட்டுள்ளன. ஆனால் அதன் ஒளிப்பதிவாளர்கள். இசையமைப்பாளர்கள் பற்றி மிகக் குறைவான ஆவணப்பதிவுகளே காணப்படுகின்றன. ஹங்கேரியை பூர்வீகமாகக் கொண்ட ஒளிப்பதிவாளர் வில்மோஸ் ஸிக்மண்ட் பற்றிய ஆவணப்படமான …

ஒளியின் பயணம். Read More »

இரண்டு விநோதக் கதைகள்

குளிர்சாதனப் பெட்டி இசபெல் ஸாஜ்ஃபெர் தமிழில் : லதா ராமகிருஷ்ணன் என்னுடைய பாட்டி இறந்து விட்ட பிறகும் இடுகாட்டிற்குப் போக மறுத்தாள். நாங்கள் என்ன சொல்ல இயலும்? குளிர்சாதனப் பெட்டியிலிருந்த கீழ்தள அடுக்குகளை அகற்றிவிட்டு, அங்கே அவளை இடுப்புப் பகுதியிலிருந்து நேராய் நிமிர்த்திக் காய்கறி வைக்கும் ட்ரேயில் பொருத்தி வைத்தோம். நாங்கள் கைப்படியை இழுத்துத் திறக்கும்போதெல்லாம் அவள் புன்சிரிப்பாய்க் கேட்பாள் – ஹாய், எப்படியிருக்கிறாய் இன்று? நாங்கள் குளிர்சாதனப்பெட்டியின் கதவைத் திறந்து வைத்தபடி, அவளோடு அளவிளாவிய படியே …

இரண்டு விநோதக் கதைகள் Read More »