admin

காலைக்குறிப்புகள் 22 இதிகாசத்தின் நிழல்.

பீட்டர் புரூக் தயாரித்த மகாபாரதம் நாடகத்தை நேரில் கண்டதில்லை. 9 மணி நேரம் நடக்கக்கூடியது. பின்பு அது தொலைக்காட்சிக்கு ஏற்ப ஆறு மணி நேரத்திற்குள் குறைக்கப்பட்டது. இந்தத் திரைவடிவத்தைப் பார்த்திருக்கிறேன். ஜீன் கிளாடே கேரியர் தான் இதன் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். நாடக வடிவமும் அவர் எழுதியதே. பன்னாட்டுத் தயாரிப்பில் உருவான அந்த நாடகத்தில் திளெரபதியாக நடித்தவர் மட்டுமே இந்தியர். மல்லிகா சாராபாய் என்ற பரத நாட்டியக் கலைஞர். பீஷ்மர், அர்ச்சுனன். பீமன், கிருஷ்ணர் பற்றி நமக்கு …

காலைக்குறிப்புகள் 22 இதிகாசத்தின் நிழல். Read More »

இன்னொரு விசாரணை

1961ல் வெளியான Judgment at Nuremberg என்ற திரைப்படம் யூத இனப்படுகொலை குறித்த நீதிமன்ற விசாரணையை முதன்மைப்படுத்தியது. மிகச்சிறந்த படம். ஹிட்லர் செய்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த யாரையெல்லாம் தண்டிப்பது என்ற கேள்வியைப் படம் எழுப்புகிறது. இதில் ஒரு இளம் வழக்கறிஞர் இனப்படுகொலை என்பது ஒரு மாயை. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு பொய். புகைப்படங்கள். சாட்சியங்கள் சொல்வது உண்மையில்லை. எங்கேயிருக்கிறது ஹிட்லரின் உத்தரவு. கேஸ் சேம்பர் பற்றிய செய்திகள் யாவும் கட்டுக்கதை என்று வாதிடுவார். இனப்படுகொலையின் சாட்சியங்கள் …

இன்னொரு விசாரணை Read More »

வாழ்த்துகள்

நவீனத் தமிழ் கவிதையின் தனித்துவமிக்க ஆளுமை கவிஞர் கலாப்ரியா. வடிவ ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தனது கவிதைகளில் இவர் நிகழ்த்திய பாய்ச்சல் குறிப்பிடத்தக்கது. இவர் நடத்திய குற்றாலம் கவிதைப்பட்டறை மறக்கமுடியாதது. கவிஞராக மட்டுமின்றி  நாவல், சிறுகதை, கட்டுரைகள் என எழுதி பன்முகப் படைப்பாளியாக விளங்குகிறார். தமிழ் விமர்சனவுலகில் தனித்துவமிக்க ஆளுமையாக விளங்குபவர் பேராசிரியர் பஞ்சாங்கம். பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் சமகாலப்புனைவுகள் வரை ஆழ்ந்து திறனாய்வு செய்து வருபவர். இவர்கள் இருவருக்கும் 2019ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் நினைவு விளக்கு’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளக்கு விருது பெறும் அண்ணன் கலாப்ரியா அவர்களுக்கும்,  பேராசிரியர் பஞ்சாங்கம் அவர்களுக்கும் எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள் தொடர்ந்து சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கும் விளக்கு அமைப்பிற்கும் எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். ••

ஆசிய சினிமா இதழ்.

வீட்டில் ஏதோ புத்தகம் ஒன்றைத் தேடும் போது வாங்கிப்படித்து பாதுகாத்து வைத்திருந்த Cinemaya இதழ்கள் கையில் கிடைத்தன. எனது கல்லூரி நாட்களில் விரும்பி வாசித்த சினிமா இதழ் Cinemaya. டெல்லியிலிருந்து காலாண்டிதழாக வெளியானது. இந்த இதழை வாங்குவதற்காகவே திருவனந்தபுரம் போய் வருவேன். விருதுநகரிலிருந்து பாசஞ்சர் ரயில் மூலம் திருவனந்தபுரம் செல்வது பிடித்தமானது. மாதம் இரண்டு முறையாவது சென்றுவிடுவேன். நாலரை மணி நேரப்பயணம். மழைக்காலத்தில் பயணம் செல்லும் போது வழியெங்கும் பசுமை ததும்பி வழிய சிலுசிலுவெனக் காற்று வீசும். …

ஆசிய சினிமா இதழ். Read More »

காலைக்குறிப்புகள் 21 நோபல் பரிசின் பின்னால்

இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றுள்ள கவிஞர் லூயிஸ் க்லூக் பெயரைக் கூட இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை. பரிந்துரைப் பட்டியலிலிருந்த நாவலாசிரியர் கூகி வா தியாங்கோ, கவிஞர் ஆன் கார்ஸன், ரஷ்ய நாவலாசிரியர் ல்யூட்மிலா உலிட்ஸ்கயா, சீன எழுத்தாளர் யான் லியான்கே, முரகாமி, ஜமைக்கா கின்கைட் போன்றவர்களை வாசித்திருக்கிறேன். ஆனால் எந்தப் பரிந்துரையாளரும் லூயிஸ் க்லூக் பெயரைச் சொல்லவேயில்லை. நோபல் பரிசு கமிட்டி இது போன்ற திகைப்பூட்டும் ஆச்சரியங்களைத் தருவதை வழக்கமாக மாற்றிவிட்டார்கள். ஸ்வீடிஷ் அகாடமி …

காலைக்குறிப்புகள் 21 நோபல் பரிசின் பின்னால் Read More »

எரிமலையின் முன்னால்.

ஸ்ட்ரோம்போலி 1950ல் வெளியான திரைப்படம். ராபர்டோ ரோசோலினி இயக்கியது. இத்தாலிய நியோ ரியலிச சினிமாவில் குறிப்பிடத்தக்கது. இங்க்ரிட் பெர்க்மென் நடித்துள்ள இந்தப்படம் இரண்டாம் உலகப்போருக்கு பிறகான காலகட்டத்தில் நடக்கிறது. லிதுவேனிய அகதியான கரீன் இத்தாலிய அகதி முகாம் ஒன்றில் வசிக்கிறாள். முகாம் வாழ்க்கையிலிருந்து தப்பிச்செல்வதற்காக முகாமின் காவலராக உள்ள ராணுவ வீரனான அன்டோனியோவைத் திருமணம் செய்து கொள்கிறாள். அன்டோனியோவின் பின்புலம் எதுவும் அறியாமலே அவனைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறாள். அவனும் அவளது நிகரற்ற அழகில் மயங்கி …

எரிமலையின் முன்னால். Read More »

இலக்கிய முகவர்

நார்டின் கோடிமர் தனது நேர்காணல் ஒன்றில் தான் எந்தப் பத்திரிக்கைக்கும் கதையை அனுப்புவதேயில்லை. எழுதத் துவங்கிய நாள் முதல் தனது கதைகளைத் தனது இலக்கிய முகவராக (Literary Agent) செயல்பட்ட சிட்னி தான் அனுப்பி வைப்பார். தனது புத்தகங்களை அமெரிக்காவின் முக்கியப் பதிப்பகங்கள் வெளியிடுவதற்கும் அவரே காரணம். ஆகவே பத்திரிக்கைகளுக்குக் கதையை அனுப்பி விட்டுக் காத்திருப்பது என்ற பழக்கமே தனக்குக் கிடையாது என்கிறார். தமிழ் எழுத்தாளர்கள் எவருக்கும் இது போன்ற வசதியோ, உதவியோ கிடையாது. கதைகளை அனுப்பி …

இலக்கிய முகவர் Read More »

இருபத்திநான்கு கண்கள்.

1954ல் வெளியான அகிரா குரசேவாவின் செவன் சாமுராய் படத்தோடு போட்டியிட்டு பல்வேறு திரைப்படவிழாக்களில் விருதுகளை வென்ற திரைப்படம் Twenty-four Eyes. கினோஷிதா இயக்கியது. பெண் எழுத்தாளர் சாகே சுபோய் எழுதிய நாவலினை மையமாக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய சினிமா என்றாலே சாமுராய் படங்கள் என்ற பொதுப்புத்தியிலிருந்து முற்றிலும் மாறுபட்டபடமிது. ஓசுவின் திரைப்படங்கள் ஜப்பானின் ஆன்மாவை பிரதிபலிப்பதாக இருந்தன. அது போலவே கினோஷிதா இயக்கிய படங்களும் இலக்கியப்பிரதிகளின் ஒப்பற்ற திரைப்படைப்பாக விளங்குகின்றன ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான உறவு பற்றிய …

இருபத்திநான்கு கண்கள். Read More »

இயற்கையின் குரல்

David Attenborough: A Life On Our Planet என்ற புதிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். வாழ்வில் சிலரைத் தான் அதிர்ஷ்டசாலிகள் என்று நான் நினைப்பேன். அவர்களில் ஒருவர் டேவிட் அட்டன்பரோ. உலகில் அவர் கால்படாத இடமேயில்லை. காடுகள் பனிமலைகள் குகைகள் பாலைவனம் என்று இந்தப் பூமியில் அவர் சுற்றித்திரியாத இடமேயில்லை. அவர் தயாரித்த புவிவாழ்க்கை குறித்த ஆவணப்படங்கள் மிகச்சிறப்பானவை. ஒருவர் தான் வாழ்நாள் முழுவதும் இப்படி அரிய உயிரினங்களைத் தேடி, இயற்கையின் வனப்புகளைத் தேடி பயணம் …

இயற்கையின் குரல் Read More »

சிறுகதை குறித்து

எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’ ஒரு படைப்பாளி சிறுகதையில் படைப்பாக்கும் கரு முற்றிலும் புதிய தடத்தில் செல்வதன் உயிர்ப்பை வெளிப்படுத்துவது. தவாங் என்னும் இடம் சீனத்திலா ஜப்பானிலா என்பது தெரியவில்லை. தவாங் மடாலயத்து பௌத்தத் துறவி தமது வாழ்வின் இறுதி நாட்களில் மிகவும் சிரமப்பட்டு ஒரு பயணத்தை மலையிலிருந்து அடிவாரத்துக்கு மேற்கொள்கிறார். அதன் நோக்கம் தமது வாழ்நாளில் தாம் இரவலாகப் பெற்று திருப்பித் தராமற் போன மூன்று பொருட்களை கொடுத்தவரிடம் ஒப்படைப்பது. பௌத்த சூத்திரங்களாலான ஒரு நூலை …

சிறுகதை குறித்து Read More »