admin

எமிலி டிக்கின்சனின் காதல்

கவிஞர் எமிலி டிக்கின்சன் வாழ்க்கை வரலாற்றினை விவரிக்கும் Wild Nights with Emily என்ற படத்தைப் பார்த்தேன். மேடலின் ஓல்னெக் என்ற பெண் இயக்குநர் இயக்கிய படமிது A Quiet Passion என்ற ஒரு திரைப்படமும் எமிலியின் சுயசரிதையை மையமாகக் கொண்டதே. இரண்டிலும் அறியப்படாத எமிலியின் ரகசியக் காதலே முதன்மையாகப் பேசப்படுகிறது. தனது இருபதாம் பிறந்தநாளுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், எமிலி டிக்கின்சன் முதன் முறையாகச் சூசன் கில்பர்ட்டை சந்தித்தார். சூசன் அவளை விட ஒன்பது நாட்கள் …

எமிலி டிக்கின்சனின் காதல் Read More »

ஒரே ஒரு ஊரிலே

மலையாளச் சிறுகதை பால் சக்கரியா தமிழில்: எம்.எஸ். ஒரே ஒரு ஊரிலே ஒரு வீட்டைச் சுற்றியிருந்த புல்வெளியின் ஒரு மூலையில் ஒரு மீன் குளம் இருந்தது. அதில் சில தவளைகளும் வசித்து வந்தன. தவளைகளின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்தது. காரணம், மழைக்காலங்களில் இரவு முழுதும் கலங்கிய நீரில் தாய்த் தவளைகள் அழுது அழுது இடும் முட்டைகளின் கரிய மாலைகளின் பெரும் பகுதியும் குளத்தில் வாழும் கொழுத்த மீன்களுக்கும், நீண்ட கம்புகள் ஏந்திய அந்த வீட்டுக் குழந்தைகளின் வேடிக்கைக்கும் …

ஒரே ஒரு ஊரிலே Read More »

தென்னிந்திய நாடகவிழாவில்

சங்கீத நாடக அகாதமியின் Festival of plays by Young Directors of South Zone நாடகவிழாவில் எனது அரவான் நாடகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாடகத்தைப் புதுவை பல்கலைக்கழக நாடகத்துறையைச் சேர்ந்த சுகுமார் சண்முகம் இயக்கியுள்ளார். முன்னதாக அவர் அரவான் நாடகத்தைப் புதுவையில் மேடையேற்றியபோது கண்டிருக்கிறேன். மிகச்சிறப்பான தயாரிப்பு. சுகுமார் சிறந்த நடிகர். நவீன நாடகங்களின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். ஆரோவில் நாடகக் குழுவோடு இணைந்து ஆங்கில நாடகங்களிலும் பணியாற்றுகிறவர். திரைத்துறையிலும் நடிகர் தேர்வு …

தென்னிந்திய நாடகவிழாவில் Read More »

மழைப்பயணி.

புதிய சிறுகதை •• பைக்கை தள்ளிக் கொண்டு ராதிகா சாலையில் நடந்து கொண்டிருந்தாள்.. இப்படி வழியில் பைக் ரிப்பேர் ஆகிவிடும் என்று அவள் நினைக்கவில்லை. ராதிகாவிற்கு இருபத்திநான்கு வயது நடந்து கொண்டிருந்தது. கறுப்பு நிறத்தில் ஜெர்கின் அணிந்திருந்தாள். நீல நிற ஜீன்ஸ். மெலிந்த உடல்வாகு. கௌகாத்தியிலிருந்து ஷில்லாங் செல்லும் அந்த மலைப்பாதையில் ஆள் நடமாட்டமில்லை. நீண்டு வளைந்து செல்லும் பாதையில் மஞ்சள் வெயில் மினுங்கிக் கொண்டிருந்தது. மழைக்காலத்தின் மாலைநேரம் பேரழகு மிக்கது. அந்தப் பாதையில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் …

மழைப்பயணி. Read More »

மூடிய கண்கள்

புதிய சிறுகதை ••• கவிஞர் டேனியல் விநோதனுக்காக நிதி திரட்டுவது என்று அவர்கள் முடிவு செய்தார்கள். அது ரமணாவிற்கு ஏற்புடையதாகயில்லை என்றாலும் ஒத்துக் கொண்டான் மூன்று வாரத்திற்கும் மேலாக விநோதன் சிறுநீரகம் செயலற்றுப் போனதன் காரணமாக மருத்துவமனையிலிருந்தார். ஐம்பது வயதைக் கடந்திருந்த போதும் அவரது தோற்றம் எழுபது வயது போலாகியிருந்தது. அதுவும் சவரம் செய்யப்படாத நரைத்த தாடி கொண்ட முகமும் அழுக்கடைந்து போன வேஷ்டியும் வெளிர் நீல அரைக்கை சட்டையும் அணிந்திருந்த அவரது நிலையைக் காணும் போது …

மூடிய கண்கள் Read More »

ஹெமிங்வேயின் நண்பர்

எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேயிற்கும் பிரபல ஹாலிவுட் நடிகர் கேரி கூப்பருக்குமான நட்பை விவரிக்கும் Cooper & Hemingway: The True Gen என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த ஆவணப்படம், அவர்களின் இருபது ஆண்டுகால நட்பை ஆராய்கிறது. கேரி கூப்பர் மற்றும் எர்னஸ்ட் ஹெமிங்வே இருவரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற நட்சத்திரங்கள். இரண்டு பேருக்கும் நிறைய ஒற்றுமைகள். ஒரே உயரம். ஹெமிங்வே கூப்பரை விடப் பத்து மாதம் மூத்தவர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் கூப்பர். …

ஹெமிங்வேயின் நண்பர் Read More »

மோலியரின் காதல்

புகழ்பெற்ற பிரெஞ்சு நாடக ஆசிரியரான மோலியரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் திரைப்படத்தைப் பார்த்தேன். லாரன்ட் டிரார்ட் இயக்கியுள்ளார் 1658 ஆம் ஆண்டில் கதை நடக்கிறது பகடி நாடகங்களுக்குப் பிரபலமான மோலியர் அதை விடுத்து துன்பவியல் நாடகம் ஒன்றை நிகழ்த்த விரும்புகிறார். அவரது குழுவினர்கள் அதை விரும்புவதில்லை. மன்னரின் ஆதரவுடன் மோலியர் நாடகங்களை நிகழ்த்துகிறார். மன்னருக்கோ நகைச்சுவை நாடகங்கள் மட்டுமே பிடிக்கிறது. ஆகவே கட்டாயத்தின் பெயரில் நகைச்சுவை நாடகம் போட வேண்டிய நெருக்கடி உருவாகிறது. இந்தச் சூழலில் அவரது …

மோலியரின் காதல் Read More »

தெலுங்கில்

எனது கைதட்டல்கள் போதும் என்ற சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது.  sakshi  ஞாயிறு இணைப்பில் இந்தக் கதை வெளியாகியுள்ளது. தெலுங்கில் மொழியாக்கம் செய்திருப்பவர் ஜி.பாலாஜி. Link : https://epaper.sakshi.com/2860049/Funday/18-10-2020#page/1/1

காந்தியோடு பேசுவேன் காணொளி

எனது காந்தியோடு பேசுவேன் சிறுகதையை  வித்யா சுபாஷ் வெகு சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறார். இவர் அமெரிக்காவில் வசிப்பவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். இலக்கிய வாசகர். காந்தியின் குரல். வார்தா காட்சிகள், எனது காந்தி குறித்த உரையின் பகுதி என்று அழகாக இணைத்து இந்தக் கதையைச் சொல்லிய விதம் மிகுந்த பாராட்டிற்குரியது. ஒரு கதையைச் சொல்வதற்கு வித்யா சுபாஷ் காட்டியுள்ள அக்கறையும் உழைப்பும் நல்ல முன்னுதாரணம் என்பேன். அவரது கதைகேளு கதைகேளு நிகழ்ச்சியில் சிறந்த தமிழ் சிறுகதைகளைத் தொடர்ந்து அறிமுகம் …

காந்தியோடு பேசுவேன் காணொளி Read More »

காலைக்குறிப்புகள் 24 நாவலாசிரியனின் ஜன்னல்

ஆர்தர் கோய்ஸ்லர் எழுதிய சந்நியாசியும் சர்வாதிகாரியும் என்ற கட்டுரைத் தொகுப்பினை ச.து.சு.யோகியார் மொழியாக்கம் செய்திருக்கிறார். நான் அறிந்தவரை ஆர்தர் கோய்ஸ்லரின் இந்த ஒரு புத்தகம் தான் தமிழில் வெளியாகியுள்ளது. பியர்ல் பப்ளிகேஷன் வெளியீடாக வந்த இந்த நூலில் நாவலாசிரியனின் மயக்கம் என்றொரு கட்டுரை உள்ளது. அந்தக் கட்டுரை எழுத்தாளன் எப்படி ஒரு நாவலை எழுத வேண்டும் என்பது குறித்துப் பேசுகிறது. தனி மனிதன் ஒரு அறைக்குள்ளிருக்கிறான். சமூகம் வெளியே இருக்கிறது. மூடப்பட்டிருந்த ஒரு ஜன்னலைத் திறந்து வெளியுலகைப் …

காலைக்குறிப்புகள் 24 நாவலாசிரியனின் ஜன்னல் Read More »