admin

வாழ்த்துகள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி. ராஜநாராயணனின் 98-ஆவது பிறந்த நாளுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் கிராவிற்கு ஞானபீடம் விருது வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஒரு காணொளி வெளியிட்டுள்ளேன். இணைப்பு : https://youtu.be/fc_cLDMuYyc

சென்னையில் விமானம்

மதராஸில் விமானம் அறிமுகமான நாட்களில் எழுதப்பட்ட பதிவுகள் •• சென்னையில் ஆகாய யாத்திரை இந்தியாவெங்கும் பிரஸித்தி பெற்ற ஸ்பென்ஸர் நமது சென்னைபுரிக்கு வந்து, மும்முறை ஆகாய யாத்திரை செய்தார். இவர் ஆகாயத்தில் ஏறும்போது புகைக் கூட்டின் துணையினாலே வரும் போது அதை விட்டு அதனோடு சேர்ந்தாற்போல் மாட்டியிருந்த பாராசூட் என்னும் பெருங்குடையைப் பிடித்து அதன் கீழே தொங்கிக் கொண்டு தமக்குச் சிறிதாயினும் அபாயமில்லாதபடி ஷேமமாக வந்திறங்கினார். சற்றேறக்குறைய 3200 அடி உயர மட்டுந்தான் ஏறினார். இவர் இறங்கி …

சென்னையில் விமானம் Read More »

காலைக்குறிப்புகள் 15 கனவெனும் நாடகம்.

கணிப்பொறி வந்தபிறகு கையால் எதையும் எழுதுவதேயில்லை. அரிதாக வெளியூர் பயணத்தில் ஒன்றிரண்டு பக்கங்கள் கையால் எழுதியிருக்கிறேன். மற்றபடி 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கணிப்பொறியில் தான் எழுதுகிறேன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர்கள் பலரும் டைப்ரைட்டரில் எழுதினார்கள். பாப்லோ நெரூதா தலைமறைவாக ஒளிந்து வாழ்ந்த போது கூடத் தன் கையோடு ஒரு டைப்ரைட்டரை தூக்கிக் கொண்டே அலைந்தார். அறிவியல் புனைகதை எழுத்தாளரான ஐசக் அசிமோவிற்குக் கணிப்பொறியில் எழுதுவது என்றால் பயம். அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்ட கணிப்பொறியை வாழ்நாள் முழுவதும் …

காலைக்குறிப்புகள் 15 கனவெனும் நாடகம். Read More »

ஒரே மனிதன்

தி. சுபாஷிணி அவர்கள் காந்தி கல்வி நிலையத்தில் நடைபெற்ற புத்தக விமர்சனக் கூட்டம் ஒன்றினைக் குறித்து 2011ல்  இந்தப் பதிவினை எழுதியிருக்கிறார். அதை மீள்பதிவு செய்திருக்கிறேன் •• வெங்கட் நாராயண சாலையில் தக்கர்பாபா தொழில் நுட்பப் பள்ளி வளாகத்தினுள் “காந்தி கல்வி நிலையம் உள்ளது..  இந்த கல்வி நிலையம் கடந்த 40 வருடங்களாக அங்கு செயல்பட்டு வருகின்றது. இங்கே ஒவ்வொரு புதன் மாலை 6.45க்கு தொடங்கி, 7.30 வரை ஒரு நூலைப் படித்துவந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் …

ஒரே மனிதன் Read More »

காலைக்குறிப்புகள் 14 நாவலின் வரைபடம்

ஒரு நாளில் இரண்டு பக்கங்கள் எழுதினால் போதும் ஒரு ஆண்டிற்குள் ஒரு நாவலை முடித்துவிடலாம் என்று நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் சரமாகோ சொல்கிறார். ஐரோப்பிய எழுத்தாளர்கள் ஒரு நாளில் இத்தனை சொற்கள் என்று வார்த்தைகளை எண்ணி எழுதக்கூடியவர்கள்.  அன்றாடம் எழுதும் பழக்கம் உள்ளவர்களுக்கு எழுதுவது விருப்பமான வேலையாகிவிடும். ஆனால் புதிதாக எழுத ஆரம்பிக்கிறவர்களுக்கு ஒரு நாளில் மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் எழுதுவது என்பது இயலாத ஒன்றே. பெரும்பான்மை நாவலாசிரியர்கள் தனது நாவலுக்கான …

காலைக்குறிப்புகள் 14 நாவலின் வரைபடம் Read More »

ஜி.நாகராஜன்

எழுத்தாளர் ஜி.நாகராஜனின் சிறுகதைகள் குறித்த உரையை வெளியிட்டுள்ளேன். இந்தப்  புதிய காணொளி தேசாந்திரி youtube பக்கத்தில் உள்ளது புதியவர்கள் இந்த youtube பக்கத்தில் இணைந்து கொண்டால் எனது காணொளிகளைத் தொடர்ந்து காணலாம். இணைப்பு : https://youtu.be/5n8KZYy-ux0

சென்னையும் நானும் 18

கடந்த நான்கு மாதமாக லாக்டவுன் காரணமாக சென்னையும் நானும் காணொளித் தொடருக்கான படப்பிடிப்பு மேற்கொள்ளமுடியவில்லை. தற்போது மீண்டும் அந்த காணொளித் தொடர் வெளியாகியுள்ளது சென்னையும் நானும் 18 தேசாந்திரி youtube பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதியவர்கள் இந்த youtube பக்கத்தில் இணைந்து கொண்டால் எனது காணொளிகளைத் தொடர்ந்து காணலாம். இணைப்பு : https://youtu.be/TyCop8ck5kI

வாழ்க்கையே கதை.

Web of Stories – Life Stories of Remarkable People எழுத்தாளர்கள். கவிஞர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள்  எனப் பல்துறை ஆளுமைகளின் நேர்காணல்களைச் சிறு சிறு பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்கள். மிகச்சிறந்த தொகுப்பிது. Adam Zagajewski Jean-Claude Carrière KG Subramanyan Redmond O’Hanlon (Writer) Julia Hartwig நேர்காணல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. •• https://www.youtube.com/c/webofstories/playlists

Arts and ideas

The Journal of Arts and ideas மிக முக்கியமான கலை இலக்கிய இதழ். 1983ல் இருந்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்த இதழில் தான் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் நேர்காணலை முதன்முதலில் வாசித்தேன். அவர் நோபல் பரிசு பெற்றவுடனே இந்த நேர்காணல் வெளியாகியிருந்தது. இலக்கியம் சினிமா, கலை, அரசியல், பண்பாடு என இந்த இதழில் வெளியான கட்டுரைகள் யாவும் சிறப்பானவை. இந்த இதழ்கள் யாவும் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. https://dsal.uchicago.edu/books/artsandideas/

கறுப்பு வெள்ளை புத்தகங்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ராகவ் என்ற நண்பரின் வீட்டிற்குச் சென்ற போது அவரது பத்துவயதான மகள் ஸ்வேதா என்னிடம் கேட்டாள் “ஏன் அங்கிள் பெரியவங்க படிக்கிற புக் எல்லாம் பிளாக் அண்ட் வொயிட்டில் இருக்கிறது.“ அது தானே. ஏன் பெரியவர்கள் படிக்கும் நாவல், கதை, கவிதைத் தொகுப்பு எதுவும் வண்ணத்தில் இல்லையே. அச்சுத் தொழிலைப் பொறுத்தவரை இன்றும் புத்தகங்களின் அட்டை மட்டுமே வண்ணத்தில் அச்சிடப்படுகிறது. சில நேரம் புகைப்படங்கள், ஓவியங்கள் உள்ள புத்தகமாக இருந்தால் பாதி அளவு …

கறுப்பு வெள்ளை புத்தகங்கள். Read More »