admin

அக்காலம் : மதராஸ் பீபில்ஸ் பார்க்

என்னும் சிங்காரத் தோட்டத்தில் நடக்கும் வருஷோற்சவம் வருகிற 1879 – ளு ஜனவரி மீ 1 உ நமது காருண்ணிய மகாராணியாரவர்கள் இந்தியச் சக்கரவர்த்தினிப்பட்டம் சூடிய மகோற்சவ தினமாகையால் அதைக் கொண்டாடு நிமித்தம் அதற்கு முன் இரண்டு நாளும், விசேஷமாய் அன்றும் பீபில்ஸ்பார்க் என்னும் சிங்காரத் தோட்டத்தில் நடத்தப்படுகிற மகா விநோதங்களை ஒவ்வொன்றாக நடக்கும் வண்ணம் விவரித்துச் சொல்ல வேண்டுமானால் மிகவும் பெருகுமாதலால் அவற்றை ஒருவாறு சுருக்கித் தெரிவிக்கிறோம். மேற்கண்ட சிங்காரத் தோட்டத்தில் எப்போதும் ஜன செளக்கியத்திற்கும், …

அக்காலம் : மதராஸ் பீபில்ஸ் பார்க் Read More »

ராமசாமிகளின் வம்ச சரித்திரம்

ராமசாமிகளின் வம்ச சரித்திரம்  என்ற எனது சிறுகதை The Tenth Rasa  என்ற பென்குவின் வெளியிட்டுள்ள ஆங்கிலத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கதையை மொழியாக்கம் செய்திருப்பவர் கவிஞர் லதா ராமகிருஷ்ணன். ••

சிவப்பு மச்சம்

– சிறுகதை “என்னைய இப்படி ஆறு மாசமா இழுத்தடிக்கிறீங்களே… உங்களுக்கே அநியாயமா தெரியலையா? நீங்க நல்லாயிருக்க மாட்டீங்க. உங்க புள்ளகுட்டி விளங்காமப்போயிரும். என் புருஷன் செத்த இடம் புல் முளைச்சுப்போயிருச்சு. இன்னும் என்னைய அலையவிடுறீங்களே… வயிறெரிஞ்சு சொல்றேன், என் சாபம் உங்களைச் சும்மா விடாது’’ என ராக்கி கத்திக் கொண்டிருந்தாள். வருவாய்த் துறை அலுவலகத்துக்குள் யாரோ அதைக் கேட்டுச் சிரித்தார்கள். “சாபமெல்லாம் வெளியே போய்க் குடு. இங்க நின்னு கத்தக் கூடாது” என ஒருவர் அவளை வெளியேற்றினார். …

சிவப்பு மச்சம் Read More »

கால் முளைத்த கதைகள்

விமர்சனம் •• தமிழக அரசின் புதிய பாடநூலில் கால்முளைத்த கதைகள் தொகுப்பிலிருந்து ஒரு கதை இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் நிறையப் பேர் இந்த நூலை ஆர்வமாக வாசித்து விமர்சனம் எழுதி வருகிறார்கள். இணையத்தில் நான் படித்த ஒரு விமர்சனத்தை பகிர்ந்து தருகிறேன் ••• ஆந்தைக்குத் தூங்குவது என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஆகவே அது பகல் முழுவதும் தூங்கிக் கொண்டேயிருக்கும். ஒரு நாள் ஒரு ஆந்தை மரத்தில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது மரங்கொத்தி ஒன்று …

கால் முளைத்த கதைகள் Read More »

புகைப்படங்களின் எதிரி

அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜே.டி.சாலிஞ்சர் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். 2013ல் வெளியான இந்தப் படத்தை Shane Salerno தயாரித்திருக்கிறார் எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் தமிழில் மிகவும் குறைவு.பெரும்பாலும் எழுத்தாளர் மற்றும் அவரது நண்பர்களின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பாகவே ஆவணப்படங்கள் இருக்கின்றன.தமிழின் நேர்த்தியான ஆவணப்படங்கள் என்று கவிஞர் ரவிசுப்ரமணியன்.அம்ஷன்குமார் இயக்கிய ஆவணப்பபடங்களைக் குறிப்பிடலாம். சாகித்யஅகாதமியே ஆண்டு தோறும் சிறந்த இந்திய எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்படங்களை உருவாக்கி வருகிறது.ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் குறுந்தகடாக விற்பனைக்குக் கிடைக்கின்றன.அவற்றில் …

புகைப்படங்களின் எதிரி Read More »

காந்தி

எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. அதன் ஆடியோ ஒலிபரப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு Nilu Nadi Sakshiga” Story https://youtu.be/3WXcSxZ5lpQ Telugu Translator: Jillela Balaji Narrator: Malleswara Rao Akula, IBS

காலைக்குறிப்புகள் 20 எங்கிருந்து கிடைக்கின்றன

அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளரான சிந்தியா ஓசிக்  கட்டுரை ஒன்றில் எழுத்தாளர்களிடம் தொடர்ந்து கேட்கப்படும் ஒரு கேள்வி பற்றி எழுதியிருக்கிறார்.  இந்தக் கதைகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதே அக் கேள்வி. இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத எழுத்தாளரே கிடையாது. ஏன் தொடர்ந்து இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் அறிஞரிடம்  கண்டுபிடிப்பிற்கான எண்ணம் எங்கிருந்து கிடைத்தது என்று எவரும் கேட்பதில்லை. வேறு துறை சார்ந்த அறிஞர்கள் எவரிடம் இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்படுவதில்லை. ஆனால் எழுத்தாளர்களிடம் தொடர்ந்து …

காலைக்குறிப்புகள் 20 எங்கிருந்து கிடைக்கின்றன Read More »

மேய்ச்சல் மனிதர்கள்.

ஜின்ஜியாங் பிராந்தியத்தில் வாழும் கசாக் இன மக்களின் மாறிவரும் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படம் Fade Away Pastoral. ஹதிஷா மற்றும் ஹுமார் குடும்பங்களின் கதையைச் சொல்கிறது. ஹுமார் மேய்ச்சலுக்குச் செல்பவர்களின் வழிகாட்டியாக விளங்குகிறார். கசாக்குகள் செம்மறி ஆடுகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் மந்தைகளை ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் மேய்ச்சலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர்கள். பனிப்பிரதேசத்தில் அவர்கள் மந்தைகளுடன் செல்லும் காட்சிகள் படத்தில் பிரமிப்பூட்டுகின்றன. மிகச்சிறந்த ஒளிப்பதிவு. கடும்பனிப்புயலில் மந்தையோடு அவர்கள் சிக்கிக் கொள்வதில் …

மேய்ச்சல் மனிதர்கள். Read More »

காலைக் குறிப்புகள் 19 நினைவின் நறுமணம்

ஜப்பானிய இயக்குநர் ஓசுவின் திரைப்படம் ஒன்றில் திருமணமாகிச் செல்லும் மணப்பெண்ணை வீட்டிலிருந்து அழைத்துப் போகிறார்கள். அவள் தந்தையிடம் ஆசி பெறுகிறாள். அப்போது இத்தனை ஆண்டுகள் தன்னை வளர்த்து அன்பு செலுத்தியதற்கு நன்றி தெரிவிக்கிறாள். தந்தை அவளது எதிர்காலம் கடந்தகாலத்தை விடவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறார். அந்தக் காட்சியை என்னால் மறக்கமுடியவில்லை கடந்தகாலத்தை விடவும் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைப்பது தான் இலக்கியத்தின் பணியும். அந்தத் தந்தையின் ஆசியைப் போன்ற ஒரு …

காலைக் குறிப்புகள் 19 நினைவின் நறுமணம் Read More »

அஞ்சலி.

அன்பிற்குரிய நண்பரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தாயார்  திருமதி.ராஜாமணி அவர்கள் இன்று காலமானார். திருமதி.ராஜாமணி எங்கள் ஊருக்கே தாயாக விளங்கியவர். மல்லாங்கிணற்றில் அவர்களின் வீடு ஒரு அன்னசாலை. வீடு தேடி வந்தவர்களுக்கெல்லாம் உணவு கொடுத்து தேவையான உதவிகள் செய்த அன்பின் திருவுருவம். எங்கள் குடும்பத்தின் மீது அவர்கள் காட்டிய அன்பு நிகரற்றது. அன்னையை இழந்து வாடும் அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். ••