admin

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -2

நகுல்வசன் தமிழில் புனைவெழுத்து முயற்சிப்பவர், ஆங்கில மொழியாக்கங்களுக்கு Nakul Vāc என்ற பெயர் புனைந்து கொண்டவர். இவர் தமிழில் எழுதியுள்ள கதைகளும் கவிதைகளும் சொல்வனம் மற்றும் பதாகை இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. நகுல்வசன் தேவதச்சனை மிகவும் ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார். சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் நகுல்வசனுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். பதாகை இணையதளத்திலிருந்து  மீள்பதிவு செய்யப்படுகிறது *** ஒரு இடையன் – தேவதச்சன்  (ஆங்கிலம்: நகுல்வசன்) – goat-herd ** ஒரு இடையன் பத்துப் பனிரெண்டு …

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -2 Read More »

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -1

பதாகை இணைய இதழில் நகுல்வசன் தேவதச்சனின் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருப்பதுடன் மொழிபெயர்ப்பின் சவால்களையும் தான் கவிதைகளை புரிந்து கொண்ட விதம் பற்றியும் சிறப்பாக எழுதியிருக்கிறார். கவிதையை மொழியாக்கம் செய்வதன் சவால் குறித்து இது போல அசலாக எழுதப்பட்ட குறிப்புகள் குறைவே. நகுல்வசன் தேவதச்சனை மிகவும் ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார். சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் நகுல்வசனுக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். பதாகை இணையதளத்திலிருந்து இந்த மொழியாக்கம் மீள்பதிவு செய்யப்படுகிறது •• குருட்டு ஈ / …

தேவதச்சனை மொழிபெயர்ப்பது -1 Read More »

சிங்கப்பூர் இலக்கிய விருதுகள்

சிங்கப்பூரின் முக்கிய இலக்கிய விருதுகளில் ஒன்றான  Singapore Book Council விருது 2020 அறிவிக்கபட்டுள்ளது. இந்த விருது பெற்றுள்ள எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ், ஹேமா இருவருக்கும் மனம் நிரம்பிய வாழ்த்துகள். சித்துராஜ் கவிதை நாவல் என இரண்டு விருதுகள் பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி. **

காந்தியின் நிழலில்- 4 டால்ஸ்டாயும் காந்தியும்.

1909 அக்டோபர் 1ம் தேதி லண்டனிலிருந்து டால்ஸ்டாயிற்குக் கடிதம் எழுதும் போது காந்தியின் வயது 40. அப்போது டால்ஸ்டாயின் வயது 81. டிரான்ஸ்வாலில் நடக்கும் காலனிய ஒடுக்குமுறைகளை டால்ஸ்டாயிற்குக் கவனப்படுத்த வேண்டும் என்பதுடன் அவரது A Letter to a Hindu என்ற கடிதத்தை மொழியாக்கம் செய்து வெளியிடும் உரிமையைப் பெறவே காந்தி கடிதம் எழுதுகிறார். காந்தியின் கடிதம் போல உலகெங்குமிருந்து அன்றாடம் நாற்பது ஐம்பது கடிதங்கள் டால்ஸ்டாயிற்கு வருவது வழக்கம். கடிதங்களைப் படித்துப் பதில் எழுதுவதற்கென்றே …

காந்தியின் நிழலில்- 4 டால்ஸ்டாயும் காந்தியும். Read More »

சிரிக்க மறந்த ஜோஹன்.

1967ம் ஆண்டு வெளியான The 25th Hour என்ற படத்தினைப் பார்த்தேன். ஹென்றி வெர்னுவில் இயக்கிய படம். ருமேனியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் தேவாலயத்தில் ஜோஹன் மோரிட்ஸின் குழந்தைக்கு ஞானஸ்நானம்  செய்து வைக்கப்படுகிறது. தம்பதிகள் குழந்தையோடு வீடு திரும்புகிறார்கள். வீட்டின் வெளியே விருந்து நடக்கிறது. ரேடியோவில் இனிமையான சங்கீதம் கேட்டபடியே குழந்தை தொட்டிலில் உறங்குகிறது. திடீரென ரேடியோவில் ஹிட்லர் பேசத்துவங்குகிறார். குழந்தை திடுக்கிட்டு அழுது கத்துகிறது. அப்போது தான் ஜோஹன் முதன்முறையாக ஹிட்லரின் பேச்சைக் கேட்கிறான். …

சிரிக்க மறந்த ஜோஹன். Read More »

நாதஸ்வர ஓசையிலே

நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான் என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. பூவும் பொட்டும் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் கோவர்த்தனம். பாடல் படமாக்கப்பட்டவிதம் அத்தனை சிறப்பாகயில்லை. படமும் சுமாரே. கண்ணதாசன் எழுதிய பாடல் TMS மற்றும் P.சுசிலா இனிமையான குரல் கொடுத்துப் பாடியிருக்கிறார்கள். 1968-இல் பூவும் பொட்டும் வெளிவந்தது இந்தப் பாடல் ரேடியோவில் கேட்டுக் கேட்டு மனதில் ஆழமாகப் பதிந்து போயிருக்கிறது. எப்போதும் இந்தப் பாடலைக் கேட்கத் துவங்கினாலும் மறுநிமிசம் மனது …

நாதஸ்வர ஓசையிலே Read More »

அஞ்சலி.

பேரன்பு மிக்க நண்பரும் இடதுசாரி இயக்கத்தின் முக்கியத் தலைவருமான டி.லட்சுமணன் நேற்றிரவு காலமானார். தோழர் டி.எல் என்று அழைக்கப்பட்ட டி.லட்சுமணன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவரது தந்தை காவல்துறையில் பணியாற்றியவர். கால்நடை ஆய்வாளராக அரசுப்பணியிலிருந்தவர் டி.லட்சுமணன். தமிழக அரசு ஊழியர் சங்கத்தினை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். மாற்றுத்திறனாளிக்கான அமைப்பின் தலைவராகச் செயல்பட்டவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையினை மேற்கொண்டு வந்த அற்புதமான மனிதர் அன்பு காட்டுவதில் டி.எல் அவர்களுக்கு நிகரே கிடையாது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக …

அஞ்சலி. Read More »

கல்பற்றா நாராயணன்

இணையத்தில் வாசித்த மொழிபெயர்ப்புக் கவிதை என்று கல்பற்றா நாராயணன் கவிதை ஒன்றை நண்பர் முரளி அனுப்பியிருந்தார். மிகவும் அற்புதமான கவிதை. பிறந்தநாளைப் பற்றிய மனப்பிம்பத்தை ஒரு நொடியில் கவிதை மாற்றிவிடுகிறது. பிறந்தநாளில் விரல்களுக்கும் வயதாகுமா எனச் சிறுமி கேட்பது அபாரம்.  முல்லா கதை ஒன்றில்  தனது தலைமுடிக்குத் தன்னை விட வயது அதிகம் என்று சொல்லுவார் முல்லா. அது இக்கவிதையை வாசிக்கையில் நினைவில் வந்து போனது.  கல்பற்றா மலையாளத்தின் மிக முக்கிய கவிஞர். அவரது சுமித்ரா என்ற …

கல்பற்றா நாராயணன் Read More »

காலைக்குறிப்புகள் 7 ஆயிரம் நன்றிகள்

யாசுனாரி கவாபத்தா Thank You என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதில் ஒரு பேருந்து ஒட்டுநர் தன்னைக் கடந்து செல்லும் குதிரைவண்டிகள், வாகனங்கள் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லுகிறார். உண்மையான மகிழ்ச்சியோடு அவன் தனக்காக வழிவிடும் அத்தனை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நன்றி சொல்லுகிறார். மலைப்பாதையில் செல்லும் அந்தப் பேருந்தில் ஒரு பெண் தனது மகளுடன் பயணம் செய்கிறாள். பேருந்து பயணத்தின் வழியே ஒட்டுநரின் அகம் முழுமையாக வெளிப்படுகிறது. சாலையில் செல்லும் குதிரைகளுக்குத் தனது பேருந்தின் வெளிச்சம் கண்ணை உறுத்தக்கூடும் என்பதால் …

காலைக்குறிப்புகள் 7 ஆயிரம் நன்றிகள் Read More »

புத்தகமெனும் புதையல்.

நியூயார்க்கில் நடைபெறும் அரிய புத்தகங்களுக்கான கண்காட்சியினைப் பற்றிய ஆவணப்படம் The Booksellers. . அரிய புத்தகங்களை விற்பனை செய்பவர்கள். அவர்களின் வாடிக்கையாளர்கள். இந்தப் புத்தகங்களுக்குச் சந்தையிலுள்ள மதிப்பு பற்றி விரிவாக ஆராய்கிறது ஆவணப்படம். தமிழில் முதற்பதிப்பினை சேகரித்து ஆவணப்படுத்தும் முயற்சியே கிடையாது. அரிய நூல்கள் கவனமின்றி வீசி எறியப்பட்டுக் காலத்தில் மறைந்து போய்விட்டன. ஆனால் சர்வதேசச் சந்தையில் நூற்றாண்டுகளைக் கடந்த புத்தகங்களின் மதிப்பு மிகவும் அதிகம். உம்பர்தோ ஈகோ இப்படி அரிய நூல்களைச் சேகரிக்கக் கூடிய ஒரு …

புத்தகமெனும் புதையல். Read More »