வண்ணதாசன் 75
தமிழின் மகத்தான படைப்பாளி வண்ணதாசனின் 75 வது பிறந்த நாளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழின் மகத்தான படைப்பாளி வண்ணதாசனின் 75 வது பிறந்த நாளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஐசக் பாஷவிஸ் சிங்கர் இட்டிஷ் மொழியில் எழுதியவர். இவரது நோபல் பரிசு ஏற்புரையில் தனது மொழியைப் பற்றிச் சிங்கர் இப்படிக் குறிப்பிடுகிறார். ” language of exile, without a land, without frontiers, not supported by any government, a language which possesses no words for weapons, ammunition, military exercises” இட்டிஷ் இறந்து போன மொழியாகக் கருதப்படுகிறது. இறந்தவர்களின் கதையை எழுதுவதற்கு இறந்து போனதாகச் …
அறிவியல் புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி தனது நேர்காணல் ஒன்றில் அறிவியல் புனைவுகளுக்குத் தத்துவமே அடிப்படையானது. பிளேட்டோ தான் உலகின் முதல் அறிவியல் புனைவு எழுத்தாளர். மனிதர்களின் லட்சிய வாழ்க்கையைப் பற்றி அவர் கண்ட கனவு தான் இன்றும் அறிவியல் புனைவின் அடிப்படையாக உள்ளது. உண்மையில் பதின்வயதில் நாம் கற்பனையில் சஞ்சரிக்கத் துவங்குகிறோம். அந்தக் கற்பனையான பறத்தலிலிருந்தே படைப்பு மனநிலை பிறக்கிறது. எழுத்தாளன் சொற்களைச் சேகரித்து வைத்துக் கொள்வதில்லை. விண்ணிலிருந்து பெய்யும் மழை போல அது ஒரு …
குத்துச்சண்டை போட்டியினை எப்படி ஒரு சூதாக மாற்றுகிறார்கள் என்பதைப் பற்றிய படம் The Harder They Fall. மார்க் ராப்சன் இயக்கியுள்ளார். போகார்ட் நடித்த கடைசிப்படம். திறமையில்லாத ஒரு குத்துச்சண்டை வீரனை மீடியா எவ்வாறு திட்டமிட்டு நாக் அவுட் நாயகனாக உருவாக்குகிறது என்பதே படத்தின் மையக்கதை. 1956ல் வெளியான திரைப்படம். ஹம்ப்ரி போகார்ட் எடியாக நடித்திருக்கிறார். புட் ஷுல்பெர்க்கின் நாவலைப் படமாக்கியிருக்கிறார்கள். புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் எழுத்தாளர் எடி வில்லிஸ்ஸைத் தேடி ஒரு நாள் குத்துச்சண்டை போட்டிகளை ஏற்பாடு …
பதாகை இணைய இதழில் வெளியாகியுள்ள ஸ்ரீதர் நாராயணன் கவிதை மிகச்சிறப்பாகவுள்ளது. காத்திருப்பின் தருணத்தில் தான் எத்தனை சாத்தியங்கள். ஜென் கவிதைகளில் செயல்படுவது போல ஒரு புள்ளியை முதன்மைப்படுத்தி கவிதை விரிகிறது. பறவையின் சிறகசைப்பை போல கவிதையும் படபடத்து எழுகிறது. வாழ்த்துகள் ஸ்ரீதர் நாராயணன். •• பறவை – ஸ்ரீதர் நாராயணன் * இறக்கைகளை பறத்திக் கொண்டு விரிந்த நிலப்பரப்பில் நின்றிருக்கிறது சாம்பல் வண்ண பறவை ஒன்று தன் நிழலைப் பார்த்தபடி. பருவமாற்றத்தின் படிநிலையைக் காட்ட வலசை போகலாம். …
எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன் சொல்வனம் இணைய இதழில் உலக இலக்கியங்கள் குறித்து அற்புதமான கட்டுரைகளை எழுதிவருபவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். நான் அவரது எழுத்தின் ரசிகன். அவரது கட்டுரைகளின் தொகுப்பு வெளிவரவுள்ளது. யாவரும் பதிப்பகம் வெளியிடும் இந்நூலிற்கு முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமான நண்பர்கள் நூலை முன்பதிவு செய்து கொள்ளவும். எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன் அவர்களின் “பாண்டியாட்டம்” உலக இலக்கியக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலின் விலை 320/- முன்பதிவு விலையாக 250/-… A/c no.34804520231 (yaavarum publishers) SBI …
ஒவ்வொரு மாதமும் எனக்கு இருபது முப்பது சிற்றிதழ்கள் தபாலில் வருவது வழக்கம். ஆனால் ஊரடங்கு காலத்தில் ஒரு இதழும் வெளியாகவில்லை. தபால் வருவதே இரண்டு மாதங்களாக இல்லாமல் இருந்தது. தற்போது தபால் வருகிறது. ஆனால் இதழ்கள் ஒன்றையும் காணவில்லை. சிற்றிதழ் நடத்துகிறவர்களின் பொருளாதாரக் கஷ்டம் உலகம் அறிந்தது. அதிலும் இந்த ஊரடங்கு காலத்தில் அச்சிடுவது, தபாலில் அனுப்புவது இயலாத காரியம். நிறைய இணைய இதழ்கள் வருகின்றன. அது போல இவர்களால் செயல்படவும் முடியாது, தொழில்நுட்ப வசதிகளும் குறைவு. …
The Bookshop என்ற 2017ல் வெளியான திரைப்படத்தைப் பார்த்தேன். 1978 ஆம் ஆண்டு பெனிலோப் ஃபிட்ஸ்ஜெரால்டு எழுதிய நாவலைப் படமாக்கியிருக்கிறார்கள். பெண் இயக்குநரான இசபெல் கோய்செட் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். இவர் ஸ்பானிய திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குநர். இந்தப் படத்தில் எமிலி மோர்டிமர், பாட்ரிசியா கிளார்க்சன் மற்றும் பில் நைகி ஆகியோர் நடித்துள்ளனர் 1950 களின் பிற்பகுதியில் கதை நடக்கிறது. புளோரன்ஸ் கிரீன் என்ற பெண் போரில் கணவனை இழந்தவர். பல ஆண்டுகளாகக் காலியாக உள்ள தனது …
புதிய சிறுகதை •• உண்மையான பறவைகளை விடவும் காகிதத்தில் செய்த பறவைகள் கூடுதல் வசீகரமாகியிருக்கின்றன. அவை வீட்டிற்குள் பயமின்றி பறக்கின்றன. காகித பறவைகளின் வானம் வீட்டுக்கூரை தானே. தபால்கார மார்டினின் மூத்தமகள் ஸ்டெல்லா அழகாகக் காகிதப்பறவைகள் செய்வாள். அவளுக்குத் திக்குவாய் என்பதாலும் மனவளர்ச்சி அடையவில்லை என்பதாலும் பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டில் சமையல் வேலைக்குத் துணையாக இருந்தாள். தாயற்ற பெண் என்பதால் அவளை மார்டின் கண்டிப்பதில்லை. பகல் நேரங்களில் அவள் வண்ண காகிதங்களை வெட்டி காகிதப்பறவைகள் செய்வாள். சில …
நோயல் நடேசன் . சமீபத்தில் தென் கொரியாவில் உள்ள ஜேஜு தீவில் ஒரு சர்வதேச மிருக வைத்திய மகாநாடு நடந்த போது அதில் பங்குபற்றச் சென்றேன். மகாநாட்டு குழுவினரால் ஒதுக்கப்பட்ட தென்கொரியாவின் பெரிய நட்சத்திர ஹோட்டல் லோட்டேயில் தங்கினேன் . நான்கு நாள் மகாநாட்டில் இரண்டு நாள் மட்டும் மகாநாட்டில் கலந்து கொண்டேன். மற்றைய இரண்டு நாட்களில் ஒரு நாள் ஊர் சுற்றிப் பார்க்;கச் சென்றேன். மற்றைய நாளில் றக்கிங் என பதினைந்து கிலோ மீட்டர் நடந்து …