admin

நினைவுகளின் ஊர்வலம்.

ஞானபீடம் விருது பெற்றுள்ள மலையாளத்தின் தலைசிறந்த எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயரின் வாழ்க்கை வரலாற்றின் முக்கியப் பகுதிகளையும் அவரது நேர்காணல் ஒன்றையும் கொண்டுள்ள தொகுப்பே நினைவுகளின் ஊர்வலம். சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தத் தொகுப்பினை டாக்டர் டி.எம்.ரகுராம் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். எம் டி வாசுதேவன் நாயர் என்ற மகா கலைஞனின் வாழ்க்கை வறுமையும் கஷ்டங்களும் நிரம்பியதாகவே இருந்திருக்கிறது. அவரது அப்பா இலங்கையில் வேலை பார்த்த நினைவுகளையும், மாமா வீட்டில் தன்னை வளர்க்க அம்மா பட்ட கஷ்டங்களையும் வாசுதேவன் …

நினைவுகளின் ஊர்வலம். Read More »

வீட்டின் இதயம்

லியோ மெக்கரி இயக்கி 1937ல் வெளியான “Make Way for Tomorrow” என்ற படத்தைப் பார்த்தேன். பார்க்லி மற்றும் லூசி கூப்பர் வயதான தம்பதியினர். அவர்களின் வீடு கடனுக்காகப் பறிபோகும் நிலையில் படம் துவங்குகிறது. இனி தாங்கள் எங்கே வாழுவது என்பதைத் தீர்மானிக்கத் தனது ஐந்து பிள்ளைகளையும் அவர்கள் வரவழைக்கிறார்கள். ஐந்தாவது மகள் தொலைவில் கலிபோர்னியாவில் இருக்கிறாள். ஆகவே அவள் வரவில்லை. மற்ற நான்கு பிள்ளைகளும் பெற்றோர்களைக் காண வருகிறார்கள். இனி முதுமையின் காரணமாகத் தன்னால் வேலை …

வீட்டின் இதயம் Read More »

வான்கோவின் காலணிகள்

ஓவியர்கள் Still Life சித்திரங்களாகப் பழங்களையும் மலர்களையும் வரைவதே வழக்கம். ஆனால் ஓவிய மேதை வின்சென்ட் வான்கோ காலணிகளை வரைந்திருக்கிறார். அதுவும் விவசாயிகள், உழைப்பாளர்கள் அணியும் காலணிகளை வரைந்திருக்கிறார். இது ஒரு தனித்துவமான அடையாளம். அந்தக் காலணிகள் அவர்களின் துயர வாழ்க்கையின் குறியீடாக உள்ளன. பாரீஸின் பழைய பொருட்கள் விற்கும் சந்தையில் இந்தக் காலணிகளை வாங்கி வந்து மழைக்கால நடைப்பயணத்தில் தானே அணிந்து சேற்றிலும் சகதியிலும் நடந்து திரிந்து பின்பே அதை ஓவியமாக்கினார் என்கிறார்கள். 1886 முதல் …

வான்கோவின் காலணிகள் Read More »

காலைக்குறிப்புகள்-2 காலமெனும் புதிர்.

Cosmic time is the same for everyone, but human time differs with each person. Time flows in the same way for all human beings; every human being flows through time in a different way. என நோபல் பரிசு பெற்ற யாசுனாரி கவாபத்தா (Yasunari Kawabata ) கூறுகிறார். காலம் பற்றிய சிந்தனையில்லாத எழுத்தாளனே கிடையாது. அதிலும் கடந்தகாலத்தை எவ்வாறு எதிர் கொள்வது என்பது …

காலைக்குறிப்புகள்-2 காலமெனும் புதிர். Read More »

அண்டரெண்டப் பட்சி.

நேற்று புதுவையிலிருந்து எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தொலைபேசியில் அழைத்தார். 98 வது வயதில் அண்டரெண்டப்பட்சி என்ற தனது புதிய கதையை எழுதியிருக்கிறார். நண்பர் இளவேனில் அதை வாசிப்பதற்காக எனக்கு அனுப்பிக் கொடுத்திருந்தார். அதைப் படித்துவிட்டீர்களா என ஆசையோடு கேட்டார். தனது முதல்கதையை பற்றித் தெரிந்து கொள்ளும் இளம் எழுத்தாளரின் குரலைப் போலிருந்தது. இந்த ஊரடங்கு நெருக்கடிகள் எதுவும் அவரைப் பாதிக்கவில்லை. தைரியத்துடன். உற்சாகத்துடன் எழுத்தாளன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம் போலிருந்தது அவரது உரையாடல். பெருமரங்களின் …

அண்டரெண்டப் பட்சி. Read More »

காதலில் தோற்றவன்.

ஜெர்ரி லூயிஸ் ஹாலிவுட்டின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர். இவரது இயக்கத்தில் வெளியான தி லேடிஸ் மேன் என்ற படத்தினைப் பார்த்தேன். 1961ல் வெளியான படம். ஹாலிவுட்டின் மிகச்சிறந்த திரைப்படமிது என்று புகழ்பெற்ற பிரெஞ்சு இயக்குநர் கோதார் கூறுகிறார். பிரெஞ்சு நவசினிமா இயக்குநர் பலரும் ஜெர்ரி லூயிஸை வியந்து கொண்டாடுகிறார்கள். சாப்ளினுக்குப் பிறகு இவரே ஹாலிவுட்டின் அசலான நகைச்சுவை நடிகர்  இயக்குநர் என்கிறார் லூயிமால் அது உண்மை என்பதற்குச் சாட்சியமாக உள்ளது இப்படம். 1961ல் இவ்வளவு பெரிய அரங்கு …

காதலில் தோற்றவன். Read More »

ஒரு தேவதைக் கதை

சத்யஜித்ரேயின் சாருலதா படத்தில் நடித்த மாதவி முகர்ஜி பற்றி கவிஞர் சுகுமாரன் எழுதியுள்ள இந்தப் பதிவு மிக முக்கியமானது. அவரது இணையதளத்திலிருந்து இதைப் பகிர்ந்து கொடுக்கிறேன் •• ஒரு தேவதைக் கதை கவிஞர் சுகுமாரன். சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தா சென்றிருந்தேன். தொழில் நிமித்தமான பயணம். ஆனால் அதற்கு மறைமுகமாக கலை நோக்கம் ஒன்றும் இருந்தது. என் அபிமானத்துக்குரிய இருவரைச் சந்திப்பதையும் பயணத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருந்தேன். ஒருவர் சத்யஜித் ராய். மற்றவர் மாதவி முகர்ஜி. கோவையில் …

ஒரு தேவதைக் கதை Read More »

தெலுங்கில்

போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் என்ற எனது சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் திருப்பதியைச் சேர்ந்த பாலாஜி.

பெயர் குழப்பம்

சக்கரவர்த்தி பீட்டர், வீரம் விளைந்தது என்ற இரண்டு ரஷ்ய நூல்களை நான் மொழிபெயர்ப்பு செய்துள்ளேன் என நினைத்து பலரும் என்னைத் தொடர்பு கொண்டு அதன் பிரதிகளைக் கேட்கிறார்கள். நான் இந்த நூல்களை மொழியாக்கம் செய்யவில்லை. அதைச் செய்தவர் தோழர் எஸ்.ஆர்.கே. இவர் ஜெயகாந்தனின் ஆசான்.மதுரைச் சேர்ந்த டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன். இடது சாரி இயக்கத்தலைவர். அவர் தான் இந்தநூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார் பலரும் எஸ். ராமகிருஷ்ணன் என்றதும் நான் என நினைத்துக் குழம்பிக் கொள்கிறார்கள். டாக்டர் எஸ்.ஆர்.கே …

பெயர் குழப்பம் Read More »

காந்தியின் நிழலில் -3 சந்தேகத்திற்கு அப்பால்

கனஸ்யாமதாஸ் பிர்லா எழுதிய காந்தி குறித்த நூல் பாபூ அல்லது நான் அறிந்த காந்தி என்ற பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது. அதன் முன்னுரையில் காந்தியை நான் அறிந்து கொள்ளத்துவங்கிய போது திலகருக்கு நிகராக அவருக்கும் பெயரும் புகழும் வருகிறதே என அவரைச் சந்தேகித்துக் குறைகளை அறிந்து கொள்வதற்காகவே பழகத் துவங்கினேன். ஆனால் அந்த நட்பு மிக ஆழமானதாக உருவெடுத்துவிட்டது என்கிறார் காந்தியைச் சந்தேகிப்பவர்கள், குறைகளைக் கண்டுபிடித்து அவரை விமர்சனம் செய்ய விரும்புகிறவர்கள் எப்போதுமிருக்கிறார்கள். அவர்கள் காந்தியை அறியும் …

காந்தியின் நிழலில் -3 சந்தேகத்திற்கு அப்பால் Read More »