அஞ்சலி
தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளியும் அன்புமிக்க நண்பருமான எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களின் மறைவிற்கு இதயப் பூர்வமான அஞ்சலி
தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளியும் அன்புமிக்க நண்பருமான எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களின் மறைவிற்கு இதயப் பூர்வமான அஞ்சலி
இந்த ஊரடங்கு காலத்தில் 125 குறுங்கதைகள் எழுதியிருக்கிறேன். குறுங்கதை எழுதுவது பெரிய நாவல் எழுதுவதை விடவும் மிகச் சவாலானது குறுங்கதை எனும் வடிவம் இல்லாத நாடேயில்லை. அதை மிக அதிகமாக மதம் பயன்படுத்தியிருக்கிறது. கதை சொல்லாத ஞானியே இல்லை. நாட்டுப்புறக்கதைகளில் குறுங்கதை வடிவமே பிரதானமாக உள்ளது. எழுத்து மரபு உருவானபிறகு தான் குறுங்கதைகள் நீட்சியடைந்தன. நவீன இலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகள் பலரும் குறுங்கதை வடிவத்தைப் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். மெய் தேடல், தத்துவம் மிகைபுனைவு. மயா யதார்த்தம், கனவுத்தன்மை, …
அந்த நகரில் கவலைகளின் குளியலறை ஒன்றிருந்தது. அது ஒரு பொதுக்குளியலறை. நாள் முழுவதும் மக்கள் அங்கே குளிக்கக் காத்திருந்தார்கள் உண்மையில் அது ஒரு நீரூற்று. அந்த நீரூற்று பொங்கி வழிந்து தாரையாகச் செல்லும் வழியினைத் தடுத்து பதினாறு குளியலறைகளை உருவாக்கியிருந்தார்கள். ஆண்களுக்கு எட்டு. பெண்களுக்கு எட்டு. கவலைகளின் குளியலறையில் மரத்தால் செய்யப்பட்ட தொட்டி ஒன்றிருந்தது. அந்த தொட்டியினுள் இறங்கிக் குளிக்க வேண்டும். குளித்து வெளியேறும் போது கவலைகள் அத்தனையும் மனதிலிருந்து நீங்கிவிடும். துவைத்த உடையைப் போலப் புதிதாக …
அந்தச் சிறுமிக்கு நான்கு வயதிருக்கும். உணவகத்தில் தன் மேசைக்கு எதிரில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களின் இலையில் உள்ள உணவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன சாப்பிடுறே தேவி“ எனக்கேட்டார் அவளது அப்பா “பெரிய தோசை“ என இரண்டு கைகளையும் அகல விரித்துக் காட்டினாள் சிறுமி “உன்னாலே பெரிய தோசையை சாப்பிட முடியாது. இட்லி வாங்கிக்கோ“ என்றாள் அம்மா “இல்லை. நான் வானம் அளவுக்குப் பெரிய தோசைன்னாலும் சாப்பிட்ருவேன்“ என்றாள் சிறுமி அதைக்கேட்டுச் சிரித்தபடியே சர்வர் “அப்போ ஒரு …
அந்தக் கிரகத்தை ஒரு புத்தகம் ஆட்சி செய்து வந்தது. அதை எழுதியவர் யார் என்றோ. எப்படி அந்தப் புத்தகம் ஆட்சிக்கு வந்தது என்றோ யாராலும் கண்டறிய முடியவில்லை. ஆனால் அந்தப் புத்தகத்தின் சொற்கள் பல்வேறு ரூபங்களில் அக் கிரகத்தினை நிர்வகிக்கத் துவங்கின. புத்தகத்தை மீறி யாராலும் நடந்து கொள்ள முடியாது. மீறுபவர்களுக்கான தண்டனைகளையும் புத்தகமே முடிவு செய்தது. அந்தப் புத்தகத்தின் ஒரே பலவீனம். அது பாராட்டிற்கு ஏங்கியது. எவ்வளவு பாராட்டிலும் போதாது என ஆசைப்பட்டது. புத்தகத்தைப் புகழ்ந்து …
இரண்டு சர்க்கஸ் நிறுவனங்களுக்குள் போட்டி இருந்தது. இதில் ஜாய் சர்க்கஸில் வேலை செய்த ரிங்கோ என்ற கோமாளியின் வேடிக்கைகளைக் காண்பதற்காக மக்கள் திரண்டு வந்தார்கள். ரோமன் சர்க்கஸில் வேலை செய்த கோமாளி தனாவிற்கு ரிங்கோவை விடத் தான் சிறந்தவன் எனக் காட்ட வேண்டும் என ஆசையிருந்தது. இதற்காக ஒவ்வொரு ஷோவிலும் புதிய வேடிக்கைகளை உருவாக்கிக் கொண்டிருந்தான். தன்னை விடத் திறமையற்றவனாக இருந்த போதும் எப்படி ரிங்கோ ஜெயிக்கிறான் எனத் தனாவிற்குப் புரியவேயில்லை. தன்னை ரிங்கோ சிரிக்க வைத்துவிட்டால் …
நீண்ட காலத்தின் பிறகு கபிலவஸ்து திரும்பும் புத்தரை வரவேற்க நகரே விழாக் கோலம் பூண்டிருந்தது. அரண்மனையில் யசோதா காத்துக் கொண்டிருந்தாள். தந்தையின் முகம் காண ராகுலனும் ஆசையுடனிருந்தான். ஞானம் பெற்ற புத்தருக்குக் கடந்த காலத்தின் நினைவுகளிருக்காது. அவரை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றார்கள். இயற்கைக்கு மட்டும் தான் கடந்த கால நினைவுகள் கிடையாது. கௌதம புத்தர் தனது சீடர்களுடன் வருகை புரிந்தார். மக்கள் மலர் தூவி வரவேற்பு செய்தார்கள். வணிகர்கள் பொற்குவியல்களை அவரது காலடியில் கொட்டினார்கள். …
இரட்டை குழந்தைகளின் தோற்றம் ஒன்றாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் இரட்டையர்கள் இருவரும் ஒரே புத்தகத்தைத் தான் வாசிப்பார்கள் என்பதோ, இருவரும் ஒன்று போலத் தான் எழுதுவார்கள் என்பதும் வியப்பான செய்தியாகவே இருந்தது. அப்படியான இரட்டையர்கள் இருவர் காசியாபாத்தில் இருந்தார்கள். அவர்களின் தந்தை பீங்கான் பாத்திரங்கள் செய்கிறவராக இருந்தார். இரட்டையர்கள் பள்ளியில் சேர்ந்த நாட்களில் தான் இந்த வியப்பான விஷயத்தை ஆசிரியர்கள் கண்டறிந்தார்கள். இருவரும் ஒன்று போலவே படித்தார்கள். ஒன்று போலவே பரீட்சைக்கு விடை எழுதினார்கள். …
சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் Eeb Allay Ooo. இணைய ஒளிபரப்பின் வழியாக We Are One Global Film Festival on YouTube விழாவில் இந்தப் படத்தைப் பார்த்தேன். மும்பை திரைப்படவிழாவின் சிறந்த படத்திற்கான விருது பெற்றிருக்கிறது. Prateek Vat இயக்கியுள்ளார். புது தில்லியின் முக்கியப் பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளால் ஏற்படும் தொல்லையைப் போக்க குரங்கு விரட்டுபவர்களை அரசாங்கமே நியமிக்கிறது. குரங்குகளை விரட்டப் பயன்படுத்தும் விசித்திரமான ஒலியே ஈப் அலே ஓ. இந்த ஒலியைக் …
அந்தத் தேசத்தில் முதன்முறையாக மக்கள் எவ்வளவு கனவு காணுகிறார்கள். என்ன கனவு காணுகிறார்கள் என்பதைப் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி அரசாங்க ஊழியர்கள் வீடு வீடாக வந்து விசாரணை மேற்கொள்வார்கள் என்றும் அந்த நாட்களில் சிறுவர்கள் முதல் கிழவர்கள் வரை தங்கள் கனவுகள் குறித்த கணக்கை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என்று ஊடகங்களில் அறிவிப்பு வெளியானது. கனவுகளை ஏன் கணக்கெடுப்புச் செய்ய வேண்டும் என ஒருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் எத்தனை கனவு கண்டோம் …