காகமும் நரியும்.
நாம் இன்று வரை சிறுவர்களுக்குச் சொல்லி வரும் பாட்டியிடமிருந்து வடையைத் திருடும் காகம் கதை நம்முடையதல்ல. ஒன்றாம் நூற்றாண்டில் ஈசாப் சொன்ன கதையது. இந்தக் கதையின் வரலாற்றைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். நேற்று இணையத்தில் இந்தக் கதையினை விவரிக்கும் ஓவியங்கள் சிலவற்றைப் பார்த்தேன். இக்கதை ஈசாப் சொல்வதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் புழங்கியது என்கிறார்கள். அப்போது கதையில் காகம் வடை எதையும் திருடவில்லை. அதன் வாயில் இருப்பது வெண்ணெய் துண்டு. அதையே நரி ஏமாற்றி வாங்க முயல்கிறது. …