admin

நெரூதா

நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெரூதா குறித்து சிறார்களுக்கான அறிமுகநூலை எழுதியிருக்கிறார் மோனிகா பிரௌன். அழகான வண்ணப்படங்களுடன் வெளியாகியுள்ளது. சிறார்களுக்காக எழுதப்பட்டபோதும் மிகுந்த கவித்துவமான சொற்களால் எழுதியிருக்கிறார் மோனிகா நெரூதாவின் உண்மைப்பெயர் NEFTALÍ RICARDO REYES BASOALTO 1904 ஆண்டு, ஜூலை 12 தேதி சிலி நாட்டில் உள்ள பாரல் என்ற ஊரில் பாப்லோ நெரூதா  பிறந்தார். இவர் பிறந்த சில நாட்களிலேயே அம்மா இறந்துவிடவே தந்தை, டோனா  ட்ரினிடாட் கார்டியா மார்வாடி என்பவரை மறுமணம்‌ …

நெரூதா Read More »

காந்தியின் நிழலில் -2 லூயி ஃபிஷரும் காந்தியும்

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் சத்திய சோதனையைத் தான் முதலில் வாசிப்பார்கள். காந்தியின் வாழ்க்கையைப் பற்றி வின்சென்ட் ஷீன் எனும் அமெரிக்கப் பத்திரிக்கையாளர் எழுதிய புத்தகம், பிரஞ்சு எழுத்தாளர் ரோமன் ரோலந்த் எழுதிய காந்தி குறித்த புத்தகம் இரண்டும் முக்கியமானது. இதை ஜெயகாந்தன் வாழ்விக்க வந்த காந்தி என மொழியாக்கம் செய்திருக்கிறார், தற்போது ராமச்சந்திர குகா காந்தியின் வாழ்க்கையை மிக விரிவான இரண்டு பகுதி கொண்ட நூலாக எழுதியிருக்கிறார். லூயி ஃபிஷர் எழுதிய காந்தி …

காந்தியின் நிழலில் -2 லூயி ஃபிஷரும் காந்தியும் Read More »

மக்களாட்சியின் குரல்

1970ல் வெளியான Cromwell என்ற வரலாற்றுப்படத்தைப் பார்த்தேன் கென் ஹியூஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். கிராம்வெலாக நடித்திருப்பவர் ரிச்சர்ட் ஹாரிஸ். மன்னர் சார்லஸாக நடித்திருப்பவர் அலெக் கின்னஸ், இங்கிலாந்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்ற படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு வெற்றி தேடித் தந்தவர் ஆலிவர் கிராம்வெல் இங்கிலாந்தின் மன்னராட்சி முறையை மாற்றி மக்களாட்சி முறையை அமைப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை விவரிக்கும் விதமாகக் கிராம்வெல் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது, பிரிட்டீஷ் வரலாற்றுபடங்கள் …

மக்களாட்சியின் குரல் Read More »

ரிவேரா

மெக்சிகோவின் தலைசிறந்த ஓவியர் டீகோ ரிவேரா. டெட்ராயிட் நகரிலுள்ள ம்யூசியத்தில் ரிவேரா வரைந்த மிகப்பெரிய சுவரோவியத்தைக் கண்டிருக்கிறேன். மறக்க முடியாத ஓவியமது, அவரது வாழ்க்கையையும் ஓவியங்களையும் புரிந்து கொள்வதற்கு எளிய அறிமுக நூலாக உள்ளது ஜேநெட் மற்றும் ஜோனாஹ்வின்ட்டர் எழுதிய டீகோ ரிவேரா. நிவேதா இதைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். இரட்டைபிள்ளைகளில்  ஒருவராகப் பிறந்த ரிவேரா தனது சகோதரன் நோயினால் இறந்துவிடவே   அந்தோனியா என்ற பூர்வகுடி இந்தியப் பெண் பொறுப்பில் மலைகிராமத்தில் வளர்க்கபடுகிறார். அந்த வாழ்க்கை அவருக்குள் எப்படி …

ரிவேரா Read More »

ஞானக்கூத்தன்

கவிஞர் ஞானக்கூத்தனின் அபூர்வமான  புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் இன்று பார்த்தேன். சில நாட்களுக்கு முன்பு கவிஞர் தேவதச்சனோடு பேசிக் கொண்டிருக்கையில் ஞானக்கூத்தனின் மறைவை தன்னால் இன்னமும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிக் கொண்டிருந்தார். ஞானக்கூத்தனின் புன்னகை வசீகரமானது.  பெரும்பான்மை புகைப்படங்களில் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் அவரது இளமையின் புன்னகையை அடையாளப்படுத்துகிறது. நன்றி https://www.gnanakoothan.com/

இனவரைவியலாளர்

ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் தமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன் அது டெக்சாசில் நடந்ததாக எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால் இன்னொரு மாநிலத்தில் நடந்த சம்பவம் அது. அந்தச்சம்பவத்தில் ஒரேயொரு முதன்மைப் பாத்திரம்தான் (ஒவ்வொரு கதையிலும் ஆயிரக்கணக்கான முதன்மைப் பாத்திரங்கள், தெரிந்தும் தெரியாமலும் உயிருடனும் இறந்தும் இருக்கத்தானே செய்கிறார்கள்). அந்த மனிதனின் பெயர், ப்ரெட் முர்டாக் என்று கருதுகிறேன். அவன் அமெரிக்கர்களைப் போலவே உயரமானவன்; அவனது முடி பொன்னிறமும் அல்ல, கருப்பும் அல்ல, அவனது தோற்றம் கூர்மையானது, அவன் மிகவும் குறைவாகவே …

இனவரைவியலாளர் Read More »

வாழ்த்துகள்

சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் One Story Project-இன் ஒரு பகுதியாக எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜின் தர்மரதம் கதை தேர்வு செய்யப்பட்டு மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள் சித்துராஜ் பொன்ராஜின் கதைகள் புதிய கதைமொழியில் நாம் அறியாத உலகை அடையாளம் காட்டுகின்றன.  மிகத் தீவிரமான வாசகர். உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர்.  சிங்கப்பூரின் வரலாற்றையும் சமகாலத்தையும் புதிய வெளிச்சத்தில் எழுதும் அவரது படைப்புகள் அங்கீகாரம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது ••

காந்தியின் நிழலில் 1 காந்தியும் அருவியும்.

காந்தியின் சீடர்களில் முக்கியமானவர் காகா காலேல்கர். தண்டி யாத்திரைக்குச் செல்லும் போது காந்தி ஒரு ஊன்றுகோலை ஊன்றியபடியே செல்லும் புகைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த ஊன்றுகோல் காகா காலேல்கருடையது. அவர் தான் நெடும்பயணம் செல்லும் காந்திக்குத் தனது ஊன்றுகோலைக் கொடுத்து உதவினார். காகா காலேல்கருக்கு அந்த ஊன்றுகோல் அவரது நண்பரான கோவிந்த் பாயால் பரிசாக வழங்கப்பட்டது. நாகப் பெட்டா என்று அழைக்கப்படும் அந்த மூங்கில் கழி நெருக்கமாக முடிச்சுகள் கொண்டது. உப்பு சத்தியாகிரகத்திற்காகக் காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட …

காந்தியின் நிழலில் 1 காந்தியும் அருவியும். Read More »

காலச்சுவடு இதழில்

ஆகஸ்ட் மாத காலச்சுவடு இதழில் எழுத்தாளர் ஜே.டி.சாலிஞ்சர்  பற்றிய ஆவணப்படம் குறித்து கட்டுரை எழுதியிருக்கிறேன் காலச்சுவடு இதழை வாசிக்க : https://www.kalachuvadu.com ** august 1 20

மூன்று கடல் தாண்டி.

மக்கள் தொலைக்காட்சியில் தினமும் மதியம் மூன்று மணிக்குச் சிறந்த அயல்நாட்டுத் திரைப்படங்களைத் தமிழ் சப்டைட்டிலுடன்  திரையிடுகிறார்கள். புகழ்பெற்ற ரஷ்யத் திரைப்படங்கள் இதில் ஒளிபரப்பாகியுள்ளன. சில படங்கள் பலமுறை திரையிடப்படுகின்றன. அப்படி ஒளிபரப்பான Journey Beyond Three Seas திரைப்படத்தைப் பார்த்தேன். இதே படத்தை முன்பு தூர்தர்ஷன் ஒளிபரப்பு ஒன்றில் பார்த்திருக்கிறேன். இப்படம் 1957 ல் “Pardesi” என்ற பெயரில் இந்தியில் வெளியாகியிருக்கிறது. ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த குதிரை வர்த்தகரான அஃபனாசி நிகிதின் எழுதிய பயணக்குறிப்புகளை மையமாகக் கொண்டு …

மூன்று கடல் தாண்டி. Read More »