admin

குறுங்கதை 103 ஒரேயொரு கவிதை

கேதரின் எழுதிய முதற்கவிதை அவள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கணையாழி இதழில் வெளியாகியிருந்தது. அவளது அப்பா தான் கவிதையைத் தபாலில் கணையாழிக்கு அனுப்பி வைத்தவர். அது கூட அவளுக்குத் தெரியாது. ஒரு நாள் தபாலில் கணையாழி இதழ் வீட்டிற்கு வந்த போது அப்பா அதைப் பிரித்து பார்த்து கேதரின் கவிதை வந்துள்ள சந்தோஷம் மிகுதியால் அவள் படிக்கும் பள்ளிக்கே சென்றார். அப்பா ஏன் திடீரென பள்ளிக்கு வந்திருக்கிறார் எனப்புரியாமல் கேதரின் அவரைத் தேடி ஆபீஸ் ரூமிற்குப் போனபோது அப்பா ஒரு சாக்லெட்டை அவளிடம்  கொடுத்து உன் கவிதை கணையாழியிலே வந்துருக்கு என்றார். அவளால் நம்பமுடியவில்லை. நான் அனுப்பவேயில்லைப்பா என்றாள். நான் தான்மா அனுப்பி வைச்சேன் எனச் சிரித்தார். அவளை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியர் …

குறுங்கதை 103 ஒரேயொரு கவிதை Read More »

குறுங்கதை 102 கவிதையின் வரவேற்பரை

கவிதையின் வரவேற்பரை‌ மிகவும் சிறியது. அதில் எப்போதும் சிலர் காத்துக் கொண்டிருந்தார்கள். எதற்காக. யாரைக் காண எனத் தெரியவில்லை.‌ஆனால் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். ஒருவன் சொன்னான் கவிதையில் தோன்றும் சூரியனும் நிலவும் மறைவதேயில்லை. அதைக் காணவே காத்திருக்கிறேன். மற்றவன் சொன்னான் கவிதையினுள் பால்யத்தின் வெண் கடல் இருக்கிறது அதை தேடி போகவே வந்திருக்கிறேன். அடுத்தவன் சொன்னான் கவிதையின் வழியே ரகசிய உலகிற்கு போகமுடியும் என்கிறார்களே அதற்கு தான் காத்திருக்கிறேன். நான்காம் ஆள் சொன்னான் கவிதையினுள் பெண் பறக்கும் உடல் …

குறுங்கதை 102 கவிதையின் வரவேற்பரை Read More »

இடக்கை -ஒரு பார்வை

இடக்கை இருண்டகாலத்தின்  கதை.அதிகாரத்தின் இறைமைக்கும் பேராசைக்கும் தீனியாக்கப்படும்  சாமானியர்களின்  வாழ்க்கையை  சொல்லும் குரூர வரலாற்றின்  கதை.கிட்டத்தட்ட அரசியல் சூதும் -வஞ்சகங்களும்-படுகொலைகளும்- அழித்தொழிப்புக்களும்  நிரம்பிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தினை அதனுடைய தன்மைகெடாமல் வெளிப்படுத்திய நடப்புயுகத்தின் புனைவுப்பிரதியாக இடக்கை நாவலைக் கருதுகிறேன். இந்த நாவல் நெடுக பேரரசுகள் வீழ்ச்சியுறும் ஒலிகள் கேட்டபடியிருக்க,அந்தப் பேரரசுகளால் கொல்லப்பட்ட,நீதிமறுக்கப்பட்ட குரல்கள்  தம்மை அடையாள அழிப்புச்செய்து மவுனித்துக் கொண்டேயிருக்கின்றன.நாவலில் வருகிற தூமகேது,அஜ்ஜா பேகம் ஆகிய இவ்விரு கதாபாத்திரங்களின் மூலமாக நிகழ்த்தப்படும் – விவாதிக்கப்படும் ஒவ்வொரு சம்பவங்களும் வரலாற்றை …

இடக்கை -ஒரு பார்வை Read More »

உறுபசி

அ.திருவாசகம், எஸ்.ராமகிருஷ்ணனின் “உறுபசி” நாவல் வாசித்தேன். எந்த மிகை உணர்ச்சியும் இல்லாமல் உண்மையான வார்த்தைகளால் நாவலை பதிவு செய்திருக்கிறார். கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்த சம்பத் என்ற நண்பனின் மரணத்தில் தொடங்குகிறது நாவல். சம்பத்தான் இந்த நாவலின் மையப்பகுதியாக இருக்கிறான். அரசு மருத்துவமனையில் கிடத்தி வைக்கப்பட்ட சம்பத்தின் சட்டையில் ஒரு சிவப்பு எறும்பு ஊர்ந்து போய் கொண்டிருந்ததையும், அதனை இனி தட்டி விடத் தேவையில்லை என அவன் மனைவி  எண்ணுவது இரக்கத்தை ஏற்படுத்துகிறது. சம்பத்தின்  மரணம், அவனோடு கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்த  அழகர், ராமதுரை, மாரியப்பன் என்ற மூன்று நண்பர்களை மீண்டும் சந்திக்க வைக்கிறது. அழகர் சிகரெட் பற்ற வைத்த கயிறு கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருப்பதை எண்ணி மனிதன் வாழ்வும் இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து கொண்டிருக்கிறதோ என அவன் மனதில் மெல்லிய பயம் ஏற்படுகிறது. சம்பத்தின் மனைவி ஜெயந்தி. சம்பத் கல்லூரியில் காதலித்த பெண் யாழினி. ஓவ்வொருவரின் பார்வையின் வழியே சம்பத் என்ற கதாப்பாத்திரம் வாசகனுக்கு சொல்லப்படுகிறது. சம்பத்தின்  மரணத்தின் போது, நீர்மாலை எடுத்து வருவதற்காக தெருவில் உள்ள அடி குழாயில் தண்ணீர் எடுக்க  சம்பத்தின் …

உறுபசி Read More »

நெடுங்குருதி – ஒரு பார்வை

– பிச்சைக்காரன் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் தமிழ் இலக்கியத்தின் சிறப்பானசாதனைகளுள் ஒன்று ஆனால் ஒரு முரண்நகைச்சுவை இதில் இருக்கிறது. இந்த நாவலை படித்த சிலர் இதைப் புகழ்வதாக நினைத்து , இந்த நாவலைப்பற்றி இப்படி சுருங்கச்சொல்வாதுண்டு “வேம்பலை என்ற கிராமத்தின் மீது படிந்திருக்கும் துயர் எனும் இருளையும் அவ்வூர் மக்களின் வேதனைமிகு வாழ்வையும்  சொல்லும் நாவல்தான் நெடுங்குருதி” இதைக் கேட்கும் புதிய வாசகன் ஒருவன் இதை ஒரு புரட்சிகர நாவலாகவோ , சமூக நாவலாகவோ , …

நெடுங்குருதி – ஒரு பார்வை Read More »

விழிப்புணர்வின் பாதை.

கொரியாவின் புகழ்பெற்ற கவிஞரான கோ யுன் (Ko Un) எழுதிய நாவல் Little Pilgrim 1991ல் வெளியான இந்த நாவல் சுதானா என்ற சிறுவனின் அகத்தேடலை விவரிக்கிறது. இந்த நாவல் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தாவைப் போன்றது. ஆனால் சித்தார்த்தா ஒரு இளைஞன். அவனது மெய் தேடல் வணிகம், காமம், ஞானம் என மூன்று நிலைகளில் சஞ்சரித்து முடிவில் ஞானத்தை அடைகிறது. இந்தச் சித்தார்த்தான் ஒரு சிறுவன். ஒருவகையில் புத்தர் தான் அந்தச் சிறுவனோ எனும்படியாகக் கூடத் தோன்றுகிறது. அவதாம்சக …

விழிப்புணர்வின் பாதை. Read More »

பசியின் குரல்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நட் ஹாம்சனின் Hunger/Sult novel 1890 ல் வெளியானது. வாசகர்களால் கொண்டாடப்பட்ட இந்த நாவலைத் திரைப்படமாகவும் எடுத்திருக்கிறார்கள். இந்நாவலை.க. நா. சு பசி எனத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறியதொரு நாவல். ஆனால் அழுத்தமான அனுபவத்தைத் தரக்கூடியது. இளம் எழுத்தாளனின் ஒரு நாள் காலையில் நாவல் துவங்குகிறது எண்ணவோட்டங்களின் வழியே கதை விவரிக்கப்படுகிறது. கையில் காசில்லாத ஒருவன் ஒரு நாளை எப்படி மதிப்பிடுவான் என்பதைக் கதை அழகாக விவரிக்கிறது. பசி தான் …

பசியின் குரல் Read More »

புகலிடம் தேடி.

ஜான் ஸ்டீன்பெக்கின் Of Mice and Men திரைப்படத்தைப் பார்த்தேன்.. 1937 வெளியான ஸ்டீன்பெக்கின் நாவலை மையமாகக் கொண்ட படமிது. புலம்பெயர்ந்த பண்ணைத் தொழிலாளர் இருவரது வாழ்க்கைக் கதையே இப்படம். கேரி சினிஸ் இப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். படத்தில் துவக்கக் காட்சியில் ஜார்ஜ் மில்டன் மற்றும் லென்னி இருவரும் பண்ணை ஒன்றிலிருந்து தப்பியோடுகிறார்கள். அவர்களைப் பண்ணை உரிமையாளர்கள் துரத்துகிறார்கள். பரபரப்பான அந்தக் காட்சியின் முடிவில் அவர்கள் ரயிலில் தப்பிவிடுகிறார்கள். எதற்காக அவர்கள் தப்பியோடுகிறார்கள் என்பது பின்பகுதியில் தான் …

புகலிடம் தேடி. Read More »

குறுங்கதை 101 அவனது விளையாட்டு

அந்தச் சிறுவனுக்குப் பந்து அல்லது பொம்மைகளை வைத்து விளையாடுவதில் விருப்பமில்லை. அவன் காணும் பொருட்களுக்குப் புதிய பெயர்களை வைத்து விளையாடும் வழக்கம் கொண்டிருந்தான். குறிப்பாக அவன் வீட்டினைக் கடந்து தினமும் வாத்துக்கூட்டம் செல்வதைக் காணுவான். அந்தக் கூட்டத்தில் விடுபட்டது போலத் தனியே இரண்டு வாத்துகள் செல்வது வழக்கம். அந்த வாத்துகளுக்குக் கினா டினா என அவனாக ஒரு புதுப்பெயர் வைத்தான். தன் பெயர் பற்றி எதுவுமறியாத வாத்து எப்போதும் போல மெதுவாக நடந்து போனது. அந்த வாத்துகளுக்கு …

குறுங்கதை 101 அவனது விளையாட்டு Read More »

குறுங்கதைகள் – இயக்குநர் வசந்தபாலன்

இணையத்தில் நான் எழுதி வரும் குறுங்கதைகள் குறித்து இயக்குநர் வசந்தபாலன் தனது வாசிப்பு அனுபவத்தை சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். அவருக்கு என் மனம் நிரம்பிய நன்றி •• எஸ் ராவின் 100 குறுங்கதைகள் குறித்து வசந்தபாலன் இந்த பெருந்தொற்று காலத்தின் அருமருந்தாக ஜெயமோகன் எழுதிய 69 சிறுகதைகளையும், எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய 100 குறுங்கதைகளையும் கூறுவேன். தமிழ் இலக்கிய உலகில் கிழக்கு மேற்கும் ஆங்காரமாய் எழுந்து நிற்கும் யானைகள் இவர்கள். கொரோனோ பற்றிய செய்திகள் ஈக்களைப் போல …

குறுங்கதைகள் – இயக்குநர் வசந்தபாலன் Read More »