admin

குறுங்கதை 87 காதல் கவிதை.

அவர்கள் இருவரின் காதலுக்கும் நரேன் தான் தூதுவனாக இருந்தான். அப்போது அவனது வயது 12. சுலோச்சனா தினமும் ஒரு சினிமா பாட்டுப்புத்தகம் கொடுத்து அனுப்பி வைப்பாள். அதில் ஏதாவது ஒரு பாடலில் சில வரிகளை அடிக்கோடிட்டு இருப்பாள். நரேன் பாட்டுப்புத்தகத்தைச் சேதுவிடம் கொண்டு போய்க் கொடுப்பான். சேது அப் பாட்டுப்புத்தகத்தைப் புரட்டக்கூட மாட்டான். மாறாக அவன் தான் எழுதிய காதல் கடிதம் ஒன்றை அவளிடம் தரும்படியே அனுப்பி வைப்பான். சில நாட்களில் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடம் …

குறுங்கதை 87 காதல் கவிதை. Read More »

ஜி.சௌந்தர்

யோகா மாஸ்டர் ஜி.சௌந்தரிடம் இரண்டு மாதங்களாக யோகா கற்றுக் கொண்டேன். உடலையும் மனதையும் பேணுவதற்கு யோகா மிகச்சிறந்த வழி. யோகா கற்றுக் கொள்வதில் நல்ல ஆசான் கிடைப்பது முக்கியம். சௌந்தர் மிகச்சிறந்த ஆசிரியர். . சிறந்த யோக பரம்பரையில் ஒன்றான பிஹார் யோக பள்ளியில் ஏழு ஆண்டுகள் பயின்றவர். சென்னை வடபழனியில் சத்யானந்த யோகமையம் நடத்தி வருகிறார். இவர் கற்றுத்தரும் மரபார்ந்த, முறையான யோகப் பயிற்சிகள் மிகச்சிறப்பானவை. அதன் பலனை நான் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். இலக்கியத்தின் மீது …

ஜி.சௌந்தர் Read More »

குறுங்கதை 86 குடும்பச் சண்டை.

கடைக்குச் சென்றால் விதவிதமான பூஜாடிகளை வாங்கி வருவது அவளது வழக்கம். இத்தனை ஜாடியிலுமா பூக்களை வைக்கப்போகிறாய் என்று கணவன் கோவித்துக் கொள்வாள். அதற்கு அவள் பூஜாடிகள் பூக்கள் வைப்பதற்காக மட்டும் உருவாக்கப்பட்டவையில்லை என்பாள். அவனால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. வேஸ்ட் ஆப் மணி என்று அவள் காதுபடச் சொல்வான். உடனே அவள் நீ மட்டும் விதவிதமான ஷுக்களை வாங்கி அடுக்கவில்லையா என்று சண்டையிடுவாள். அது உண்மை, அவனிடம் நூற்றுக்கும் மேற்பட்ட காலணிகள் இருந்தன. எந்தப் புது …

குறுங்கதை 86 குடும்பச் சண்டை. Read More »

குறுங்கதை 85 ஓடிப்போனவன்.

பால்காரனுக்குத் தருவதற்காக அம்மா வைத்திருந்த பணத்தைத் திருடிக் கொண்டு வீட்டை விட்டு ஒடிய அந்தப் பையன் தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்த பணத்தை மறுபடியும் எண்ணிப்பார்த்துக் கொண்டான். சரியாக 638 ரூபாய் இருந்தது. இதை வைத்துக் கொண்டு எங்கே போவது என்ன செய்வது எதுவும் தெரியவில்லை. ஆனால் இனி வீட்டிற்குத் திரும்பிப் போகக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான். பதின்வயதுகளில் வீடு ஒருவனுக்கு அந்நியமாக ஆரம்பிக்கிறது. வீட்டின் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள். கெடுபிடிகள் எரிச்சலூட்டுகின்றன. எவர் முகத்தையும் பார்க்கப் …

குறுங்கதை 85 ஓடிப்போனவன். Read More »

குறுங்கதை 84 மறு உத்தரவு.

சீனாவின் வடக்கு எல்லையை ஒட்டியிருந்தது அந்தக் கிராமம். அந்தக் கிராமத்திற்கு ஒரு நாள் அரசாணை ஒன்று வந்தது. அதன் படிப் போர் முடித்துத் திரும்பும் வீரர்களை வரவேற்க ஊரிலுள்ள பெண்கள் யாவரும் அலங்காரம் செய்து கொண்டு, ஊர் முகப்பில் ஒன்று கூடி, கையில் மலர்மாலை ஏந்தி வரவேற்றுப் பாட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. கிராமத் தலைவர் உடனடியாக உத்தரவிற்கு அடிபணிய வேண்டுமெனக் கட்டளையிட்டார். அக்கிராமத்தில் நூற்றுக்கும் குறைவாகவே வீடுகள் இருந்தன. அந்த வீட்டிலிருந்த பெண்கள் பண்டிகை நாட்களில் …

குறுங்கதை 84 மறு உத்தரவு. Read More »

ஸ்டீன்பெக்கின் குறிப்புகள்.

“a book must be the axe for the frozen sea inside us,” –          Franz Kafka நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஜான் ஸ்டீன்பெக்கின் The Grapes of Wrath நாவல் அமெரிக்காவின் நவீன இதிகாசமாகக் கொண்டாடப்படுகிறது. திரைப்படமாக வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற நாவலது. இதுவரை இரண்டு கோடி பிரதிகளுக்கும் மேலாக விற்றிருக்கும் என்கிறார்கள். நாவல் அடைந்த வெற்றியில் ஸ்டீன்பெக் மிகப்பெரிய பண்ணை வீட்டினை விலைக்கு வாங்கினார். அதற்குள் அழகான நீச்சல் …

ஸ்டீன்பெக்கின் குறிப்புகள். Read More »

புலியுடன் ஒரு தேநீர் விருந்து.

The Tiger Who Came to Tea (2019) என்ற அனிமேஷன் படத்தைப் பார்த்தேன். உலகப்புகழ் பெற்ற சிறார் கதையை அனிமேஷன் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். சோஃபி என்ற ஒரு சிறுமி தனது அம்மாவுடன் பூங்காவிற்குக் கிளம்புகிறாள். எதிர்பாராதபடி மழை வந்துவிடுகிறது. வீட்டில் என்ன செய்வது என அம்மாவும் மகளும் கேக் செய்கிறார்கள். வீட்டிலே ஒரு தேநீர் விருந்து ஏற்பாடு செய்வோம் என்கிறாள் அம்மா. அது சோஃபியை உற்சாகம் கொள்ள வைக்கிறது. சாண்ட்விட்ச். கேக். தேநீர் என யாவும் …

புலியுடன் ஒரு தேநீர் விருந்து. Read More »

குறுங்கதை 83 சந்தன சோப்.

சங்கரனின் அப்பா மரக்கடை வைத்திருந்தார். அதற்குத் தேவையான மரங்களைக் கேரளாவில் சென்று வாங்கி வருவது வழக்கம்.அப்படி ஒரு முறை லாரியில் கிளம்பும் போது சங்கரனையும் உடன் அழைத்துச் சென்றார். அப்பாவோடு லாரியில் செல்வது சங்கரனை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியது. வளைந்து செல்லும் மலைப்பாதைகளில் லாரி போகும் போது காற்றுக் கன்னத்தை வருடுவது போல அடித்தது. மூன்று மணி நேரப்பயணத்தின் பிறகு அவர்கள் சர்ப்பக்காவு என்ற கிராமத்தை அடைந்தார்கள். சோலை போல அடர்ந்திருந்த மரங்கள். ஆற்றின் கரையை ஒட்டிய கிராமம். …

குறுங்கதை 83 சந்தன சோப். Read More »

குறுங்கதை 82 இரவில் நடப்பவர்கள்

மலைநகரம் ஒன்றில் வசித்த நான்கு நண்பர்கள் தான் முதலில் அதைத் துவக்கினார்கள். ஆனால் மெல்ல ஒவ்வொருவராக ஆர்வம் காட்டவே அது முப்பது பேர் கொண்ட நடைக்குழுவாக மாறியது. அதில் ஆறு பெண்களும் இருந்தார்கள் அவர்கள் வாரம் சனிக்கிழமை இரவு நடக்கத்துவங்குவார்கள். முழு இரவும் நடப்பார்கள். விடியும் போது எந்த ஊரை அடைகிறார்களோ அங்கே அறை எடுத்துத் தங்கிவிடுவார்கள். மறுநாள் பகல் முழுவதும் உறக்கம். திரும்பி வரும் போது பேருந்தில் பயணம் மேற்கொள்வார்கள். பகலில் நடப்பது போன்றதில்லை இரவில் …

குறுங்கதை 82 இரவில் நடப்பவர்கள் Read More »

குறுங்கதை 81 மறுசந்திப்பு

நாற்பது வருஷங்களுக்குப் பிறகு அவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் மறுமுறை சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. அப்படி ஒரு நிகழ்வினை முன்னெடுத்தவன் மகேந்திரன். அவனே ஒரு வாட்ஸ்அப் குரூப் துவங்கி அதில் பழைய மாணவர்களின் தொலைபேசி எண்களைக் கண்டறிந்து அவர்களுடன் பேசி தேதி குறித்து அந்தச் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தான். பல்வேறு மாவட்டங்களிலும் பணிக்காகத் தங்கியிருந்தவர்கள் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் பங்கேற்க ஆர்வம் காட்டினார்கள் டேனியலுக்கு அந்தச் சந்திப்பிற்குப் போவதில் விருப்பமிருந்தாலும் …

குறுங்கதை 81 மறுசந்திப்பு Read More »