கேள்வி பதில்
தேசாந்திரி சேனலில் வெளியாகியுள்ள புதிய வீடியோ Q&A SESSION WITH S.RA https://youtu.be/ZM23e-6Gtqk
தேசாந்திரி சேனலில் வெளியாகியுள்ள புதிய வீடியோ Q&A SESSION WITH S.RA https://youtu.be/ZM23e-6Gtqk
காணாமல் போன, திருடு போன பசுமாடுகளைக் கண்டுபிடித்துத் தருவதற்கென ஒரு மனிதர் இருந்தார். சாது சுப்பையா என்ற அவருக்கு எந்த ஊரில் பசு காணாமல் போயிருந்தாலும் அது எங்கே போயிருக்கக்கூடும் என்று தெரிந்துவிடும். கரிசலின் சின்னஞ்சிறிய கிராமம் ஒன்றில் வசித்து வந்த அவரிடம் தங்கள் மாடு பற்றி அறிந்து கொள்வதற்காக வடக்கேயிருந்து கூட ஆட்கள் வருவார்கள். ஒரு கட்டு வெற்றிலை பாக்கும் ஒரு படி உப்பும் தான் அவருக்குக் காணிக்கை. சாது சுப்பையாவின் ஞானதிருஷ்டி தான் பசுவைக் …
அப்போது கதிருக்கு பதிமூன்று வயது நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதி எப்போது வரும் எனக் காத்துக் கொண்டேயிருப்பான் ஐந்தாம் தேதி தான் மயில்வாகனம் மாமா சம்பளம் வாங்குவார். அன்று மாலை கதிரையும் அவன் தம்பி தங்கைகளையும் ஹோட்டலுக்கு அழைத்துக் கொண்டு போவார். அந்த நாளுக்காகக் காத்து கிடப்பான். மயில்வாகனம் மாமா குமார் ஸ்டோரில் கணக்காளராக வேலை செய்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. தனி அறை எடுத்துத் தங்கியிருந்தார். அப்பா தான் தென்காசியிலிருந்த அவரை வரவழைத்து …
1487ல் எஸ்மரால்டா கப்பல் லிஸ்பனிலிருந்து புறப்பட்டது. ஆனால் ஒன்றரை வருஷங்களாகியும் அவர்களால் இந்தியாவிற்குச் செல்லும் வழியைக் கண்டறிய முடியவில்லை. கடலில் சுற்றி அலைந்து கொண்டிருந்தார்கள். அக்கப்பலில் இருந்தவர்களுக்கு இந்தியா என்பது ஒரு சொல்லில்லை. கனவு. அக் கப்பலின் கேப்டன் ஒரு கிளி வளர்ந்து வந்தான். அது நாள் முழுவதும் இந்தியா இந்தியா என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. இந்தியா என்பது வீதியெல்லாம் பொன்னும் மணியும் கொட்டிக்கிடக்கும் தேசம் எனக் கடலோடிகள் நம்பினார்கள். எவர் முதலில் சென்று சேருகிறார்களோ அவர்களுக்கே பொக்கிஷங்கள் …
அந்த ஷாப்பிங் மாலில் பார்வையாளர்கள் மறந்து விட்டுப் போன பொருட்களைப் பாதுகாத்து ஒப்படைப்பதற்கெனத் தனி அறையொன்று இருந்தது. அதன் நிர்வாகியாக இருந்தான் சிவானந்தம். வீட்டுச்சாவிகள். பைக், கார்சாவிகள். ஹேண்ட்பேக்குகள், கர்சீப், மணிபர்ஸ், குடை, சிறுவர்களின் காலணிகள், செல்போன்கள், வங்கி அட்டைகள், விளையாட்டுப் பொம்மைகள். குடிநீர் பாட்டில்கள். மூக்குக் கண்ணாடி, சில்லறைக் காசுகள். மாத்திரைகள், விக்ஸ் டப்பா, கால்கொலுசுகள் சிகரெட் லைட்டர்கள் போன்றவற்றைத் தான் மறந்து போன பொருட்களாக இருக்கும். சுத்தம் செய்யும் பணியாளர்கள் அவற்றை எடுத்து வந்து …
சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவின் சிறிய சமஸ்தானங்களில் ஒன்றாக இருந்தது கைசூர். அதன் மன்னராக இருந்த முக்திபோத் தன்னுடைய ஒரே மகள் கௌரியை ராம்கரில் திருமணம் செய்து கொடுத்திருந்தார். அந்த இரண்டு ஊர்களுக்கும் நடுவே ஒரு ஆறு ஓடியது. ஆற்றின் ஒரு கரையில் கைசூர் இருந்தது. மறுகரையில் ராம்கர். அன்றாடம் முக்திபோத் விடிகாலை எழுந்தவுடன் தன் கையாலே மகளுக்கு விருப்பமான சிவப்பு ரோஜாவைப் பறித்து ஒரு தங்கப்பெட்டியில் வைத்து அனுப்பி வைப்பார். அதை அரண்மனையிலிருந்து ஒரு வீரன் எடுத்துக் …
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் நேர்காணல் யாவரும்.காமில் வெளியாகியுள்ளது. அகரமுதல்வன் நேர்காணல் செய்திருக்கிறார். சமீபத்தில் படித்த மிகச்சிறந்த நேர்காணலிது. முத்துலிங்கத்தின் பதில்கள் வியக்கவைக்கின்றன. அ.முத்துலிங்கம் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் இருக்கைக்காகச் செய்து வரும் முன்னெடுப்புகள் மகத்தானவை. இயல் விருதுகள் வழங்குவதிலும், தமிழ் படைப்பாளிகளைக் கொண்டாடுவதிலும் அவர் காட்டும் அக்கறையும் நேசமும் நிகரற்றது. கிரிக்கெட் விளையாட்டில் ஒரு சில வீரர்கள் தனக்குப் பந்து வரும்வரை காத்திருக்க மாட்டார்கள். ஒரு அடி முன்னால் போய்ப் பந்து வரும்போதே எதிர்கொண்டு ஓங்கி அடித்துவிடுவார்கள். …
1949ல் முர்ஷிதாபாத் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் துவங்கிய போது எழுத்தாளர் ஏவம் சக்கரவர்த்திக்கு வயது 41. நவபிரஜா பதிப்பகம் தனது நாவலைத் திருடி சுனில் பிரசாத் என்ற எழுத்தாளரின் புதிய நாவலாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இது ஒரு மோசடி. சுனில் பிரசாத்தின் நாவலைத் தடைசெய்வதோடு, இதை வெளியிட முன்வந்த நவபிரஜா மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்தார் ஏவம் சக்கரவர்த்தி மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் என்பதால் அவரது வழக்கு குறித்த செய்தி தினசரிகளில் …
2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான மோ-யானின் நேர்காணல் ஒன்றை வாசித்தேன். மோ-யான் சாண்டோங்கில் ஒரு கிராமத்தில் பிறந்தார், அவரது தந்தை தனியார் கிராம பள்ளியில் படித்தவர், அறிவுஜீவி. ஆகவே பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். மோயானின் சகோதரர் ஷாங்காய் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். மோ-யான் பல்கலைகழத்தில் படித்த நாட்களில் தான் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டார் பெரும்பான்மை எழுத்தாளர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைப் பற்றி எழுதவே ஆசைப்படுகிறார்கள். குறிப்பாகக் குழந்தைப் …
யானை கொட்டடிக்குள் சிறுவர்களை அனுமதிக்கமாட்டார்கள். தகரக்கூரை வேய்ந்த பழைய கொட்டடியது. சுப்ரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான யானை அங்கேயிருந்தது. ஒரு ஊரில் ஒரேயொரு யானை மட்டும் தனியே வாழ்வது விசித்திரமானது. அதற்குத் துணையே கிடையாதா என்று சிறுவர்கள் பேசிக் கொள்வார்கள். அந்த யானையை வாரம் வெள்ளிக்கிழமை மட்டும் கோவிலுக்கு அழைத்து வருவார்கள். மற்ற நாட்களில் அது கொட்டடியிலே தானிருக்கும். யானைப்பாகன் அழுக்கான வேஷ்டி கட்டியிருப்பான். சதா யானையின் அருகில் உட்கார்ந்து பீடி பிடித்துக் கொண்டிருப்பான். யானையின் கண்கள் …