admin

இடக்கை காட்டும் வெளிச்சம்

-கண்ணன். நீதிக்காக மனிதர்கள் நடத்தும் நெடும்போராட்டத்தை தங்களின் இடக்கை நாவலில் நீங்கள்  சிருஷ்டித்த விதம் அற்புதம் , இந்த மண்ணில் எதோ ஒரு காலத்தில் கதை நிகழ்கிறது என சொல்லமுடியாதபடி இன்றைய எதார்த்தத்திற்கு அவ்வளவு நெருக்கமான இன்னும் சொல்வதானால் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான கேள்விகளை நீதி குறித்த விசாரணையை,நீதிக்கான விளக்கத்தை சாமானியனுக்கு ஒரு விதமும்  ஆள்பவருக்கு வேறுவிதமுமாக  ஆளுக்கொரு நீதி கடைபிடிக்கப்படும் சூட்சமத்தை உங்கள் இடக்கை-யில்  வாசித்துக் கடப்பது எளிதாக இருக்கவில்லை … நீதிக்கு இருக்கும் இருபக்கங்களை …

இடக்கை காட்டும் வெளிச்சம் Read More »

இரவை வாசிப்பவர்கள்

(நடு- இணைய இதழில் வெளியான சிறுகதை) அண்ணாசாலையில் அப்படியொரு புத்தகக் கடை இருக்கிறது என்பதே ஆச்சார்யா சொல்லி தான் ரகுவிற்குத் தெரியும். பலமுறை அந்த இடத்தைக் கடந்து போயிருக்கிறான். சிவப்பு நிற கட்டிடத்தைப் பார்த்தவுடன் ஏதோ அரசாங்க அலுவலகம் என்று நினைத்துக் கொண்டிருந்தான். எத்தனை புதிய கட்டிடமாக இருந்தாலும் அரசு அலுவலகங்கள் ஒன்று போலவே இருக்கின்றன. ஒன்று போலவே செயல்படுகின்றன. “அந்தப் புத்தகக்கடையின் பெயர் நைட்ஸ். இரவு ஒன்பதரை மணிக்குத் தான் திறப்பார்கள். விடியும் வரை கடை …

இரவை வாசிப்பவர்கள் Read More »

குறுங்கதை 91 காதலில் விழுந்த புலி

காட்டிலிருந்த புலியொன்று நீர் அருந்துவதற்காக வந்த குளத்தில் ஒரு சிவப்புக் கொண்டை மீன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டது. அந்த மீனிற்குத் தன்னைக் கண்டுபயமில்லை என்பது புலிக்கு வியப்பாக இருந்தது. புலி தன்னைக் கவனிப்பதை அறிந்தவுடன் சிவப்புக் கொண்டை மீன் வேண்டுமென்றே வாலசைத்து துள்ளியது. புலிக்கு அது வேடிக்கையாகத் தோன்றியது. “என்னை கண்டு பயமில்லையா“ எனக்கேட்டது புலி “தண்ணீரை விட நீ ஒன்றும் பலசாலியில்லை. நான் தண்ணீரில் பிறந்து வளர்ந்தவள்“ என்றது சிவப்புக் கொண்டை மீன் புலிக்குச் …

குறுங்கதை 91 காதலில் விழுந்த புலி Read More »

இலக்கிய உரை

தேசாந்திரி Youtube சேனலில் வெளியாகியுள்ள இலக்கிய உரை ”நவீன மலையாள இலக்கியத்தின் அடையாளம் பஷீர் https://youtu.be/XSZSPY0SNhQ

ஆய்வு

எனது கதைகள், நாவல்கள், பயண நூல், கட்டுரைகள்  பற்றி கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலரும் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். இதுவரை நான்கு பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். 20க்கும் மேற்பட்டவர்கள் எம்பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலரே தனது ஆய்வேட்டினை எனக்கு அனுப்பித் தருகிறார்கள்.  மற்றவர்கள் அனுப்புவதில்லை.  ஆய்வாளர்கள் ஒரு பிரதியை எனக்கு அனுப்பினால் உங்கள் ஆய்வில் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வேன். •• எனது சிறுகதைத் தொகுதி பற்றி வெளியாகியுள்ள ஆய்வேடு

உபபாண்டவம் எனும் பிரம்மாண்டம்

– மா. ஹரிஹரன். கோவை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உபபாண்டவம் எனும் நாவலை வாசித்தேன் பொதுவாக மகாபாரதம் கதை என்பது நடந்த நிகழ்ச்சிகளை யாராவது வரிசைக்கிரமமாகக் கூறுவதாக இருக்கும். அதாவது Narrative style என்பதுபோல. இதில் திரு. எஸ்.ரா அவர்கள் ஒரு நாடோடிப் பயணியாக அந்தக் காலகட்டத்திற்குள் பயணித்து, அந்தக் கதைமாந்தர்களுடன் விவாதித்து, அவர்களுடைய மன வோட்டத்தினை அவர்கள் மூலமாகவும், மற்றவர் வாயிலாகவும் கூறுகிறார். கதைக்களம் முன், பின்னாக மாறுகின்றது. மகாபாரதத்தில் பேசப்படாத சாமானிய மக்களிடம் இவர் …

உபபாண்டவம் எனும் பிரம்மாண்டம் Read More »

தானே உலரும் கண்ணீர்

-கிஷோர் குமார் சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களையும் , அதிகாரத்தால் அநீதி இழைக்கப்பட்டவர்களையும் பற்றித் தமிழ் இலக்கியம் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்துள்ளது. இக்கருவை வரலாற்றுக் காலத்தில் வைத்து ஆராய்கிறது ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல். அத்தோடு மட்டும் இந்நாவலை குறுக்கிக்கொள்ள முடியாதபடி வாசிப்பால் விரித்தெடுக்க வேண்டிய பலதளங்களையும் இந்நாவல் தொட்டு சென்றுள்ளது. முகலாயப் பேரரசரான அவுரங்கசீபின் இறுதி காலத்தில் அனைத்து வரலாற்று நாயகர்களும், மாமன்னர்களும், புரட்சி வீரர்களும் அனுபவிக்கும் அந்தக் கொடுந் தனிமையை அவுரங்கசீபும் அனுபவிக்கிறாரார். இளமையில் மரணத்தைத் துச்சமாக …

தானே உலரும் கண்ணீர் Read More »

வேம்பலை மனிதர்கள்

– அ.திருவாசகம். மதுரை. உங்களின் ஒவ்வொரு புத்தகத்தையும் விலை கொடுத்து வாங்கிப் படிக்கும் போது உள்ளே புதிதாக ஒரு உலகத்தைக் காணமுடிகிறது.சமீபத்தில் நெடுங்குருதி நாவல் படித்தேன். கிட்டத்தட்ட 525 பக்கங்கள் வேம்பர்களின் வாழ்வு வேம்பலைக் கிராமத்தின் வழியாகச் சொல்லப்படுகின்றன. நம் கரிசல் நிலத்தின் வெயில் குடித்து வளர்ந்த மனிதர்களின் வாழ்க்கையின் அவலத்தைச் சிறப்பாய் சொல்லியிருக்கிறீர்கள். இந்நாவலில் வரும் பாத்திரங்கள் நாகு , ரத்னாவதி , வேணி, திருமா , வசந்தா , ஜெயக்கொடி , வடுவார்பட்டி குறவர்கள், …

வேம்பலை மனிதர்கள் Read More »

சஞ்சாரத்தின் வழியே

N பிரசன்ன குமார் •• நாவல் தொடங்கும் முதல் வார்த்தையில் தொடங்கி நாவல் முழுதும் ஒரு ஜீவன் பயணிக்கிறது. கதை மாந்தர்களான பக்கிரி, ரத்தினம் ஆகியோரது வாழ்வு நிலை, அவர்தம் குடும்பங்களின் நிலை அவர்களுடைய எண்ண ஓட்டங்களின் மூலம் நாயனர்களின் தற்கால வாழ்வியல் முறைகள் தெளிவாக்கப்பட்டுள்ளது. நாவல் சொல்லப்பட்டுள்ள விதம், கதை விரியும் தன்மை ஆகியவை இந்நாவலை வாசகனின் பார்வையில் விலக்காமல், ஒருங்கே நாவல் உடன் பயணிக்க வைக்கிறது. ஒவ்வொரு கதையின் பின் புலத்திலும் ஒருவர் எவ்வாறு …

சஞ்சாரத்தின் வழியே Read More »