admin

குறுங்கதை 90 கோபாலன் வீடு

டி.கே.கோபாலனுக்குச் சாவிகள் என்றால் பிடிக்கும். அதுவும் வீட்டுச்சாவியை வைத்துக் கொள்வது என்பது அவரது தனி உரிமை. வீட்டுச்சாவியைச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ளும் போது அதன் கனம் தாளாமல் பை ஒரு பக்கம் இழுக்கும். அந்தக் கனம் தான் அவரது பொறுப்புணர்வின் அடையாளம். வீட்டை நிர்வகிக்கிறோம் என்பதன் சாட்சியம். ஆகவே அவர் ஒரு போதும் வீட்டுச்சாவியை மனைவியிடமோ, பிள்ளைகளிடமோ தர மாட்டார். அவசரத்திற்கு மாற்றுச்சாவி ஒன்று போட்டு வைத்துக் கொள்வோம் என்று மனைவி சொன்ன யோசனையைக் கூடக் …

குறுங்கதை 90 கோபாலன் வீடு Read More »

குறுங்கதை 89 சினிமா பார்த்தவன்.

யஜுசிரோ ஒசு இயக்கிய டோக்கியோ ஸ்டோரி சினிமா பார்த்துத் திரும்பும் போது மாறன் தனது தந்தையும் தாயையும் நினைத்துக் கொண்டான். படத்தில் வரும் பெற்றோர் டோக்கியோவுக்கு வந்ததும் தங்கள் தனிமையை நினைத்துப் பயப்படுகிறார்கள். சொந்த பிள்ளைகளால் பிரித்து வைக்கப்படுகிறார்கள். நிராகரிக்கப்படுகிறார்கள். அந்தப் பிள்ளைகளில் ஒருவனைப் போலத் தன்னை உணர்ந்தான். படம் முடிந்து வெளியே வந்த போது மாநகரம் உறங்கியிருக்கவில்லை. வாகன இயக்கம் குறைந்திருந்தது. நடந்தே அறைக்குத் திரும்ப வேண்டும். கோடம்பாக்கம் பாலத்தை ஒட்டிய மேன்ஷன் ஒன்றில் குடியிருந்தான். …

குறுங்கதை 89 சினிமா பார்த்தவன். Read More »

கேமிராவுடன் ஒரு துறவி.

Monk with a Camera: The Life and Journey of Nicholas Vreeland என்ற ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். புகைப்படக் கலைஞராக உள்ள புத்த துறவி ஒருவரைப் பற்றியது. நிக்கோலஸ் புகழ்பெற்ற புகைப்படக்கலைஞரான இர்விங் பென்னால் பயிற்சியளிக்கப்பட்டவர், பௌத்த சமயத்தில் ஈடுபாடு கொண்டு இந்தியாவில் ஒரு மடாலயத்தில் பதினான்கு ஆண்டுகள் பௌத்த நெறிகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.. பௌத்த மையம் ஒன்றை உருவாக்க அவர் தனது புகைப்படக்கலையைக் கொண்டு நிதி திரட்டியிருக்கிறார் 2014 ஆம் ஆண்டு இந்த …

கேமிராவுடன் ஒரு துறவி. Read More »

குறுங்கதை 88 வஸ்திரம்

நீண்டநாட்களாகத் திரௌபதிக்கு ஒரு ஆசையிருந்தது. மகாராணி காந்தாரியின் கண்களில் கட்டியுள்ள வஸ்திரத்தை ஒருமுறை வாங்கித் தனது கண்ணில் கட்டிப் பார்க்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் மகாராணி காந்திரியைச் சந்திக்கவும் தனிமையில் பேசவும் சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. ஆகவே அவள் காத்துக் கொண்டேயிருந்தாள். யுத்தம் முடிந்து பாண்டவர்கள் வென்ற பிறகு, பிள்ளைகளை இழந்த காந்தாரியும் திருதராஷ்டிரனும் வனம் ஏகப்போகிறார்கள் என்று தெரிந்த நாளில் அவள் தனியே சென்று காந்தாரியைச் சந்தித்தாள். தன் மனதிலிருந்த ஆசையைச் சொன்னாள். காந்தாரி தன் …

குறுங்கதை 88 வஸ்திரம் Read More »

குறுங்கதை 87 காதல் கவிதை.

அவர்கள் இருவரின் காதலுக்கும் நரேன் தான் தூதுவனாக இருந்தான். அப்போது அவனது வயது 12. சுலோச்சனா தினமும் ஒரு சினிமா பாட்டுப்புத்தகம் கொடுத்து அனுப்பி வைப்பாள். அதில் ஏதாவது ஒரு பாடலில் சில வரிகளை அடிக்கோடிட்டு இருப்பாள். நரேன் பாட்டுப்புத்தகத்தைச் சேதுவிடம் கொண்டு போய்க் கொடுப்பான். சேது அப் பாட்டுப்புத்தகத்தைப் புரட்டக்கூட மாட்டான். மாறாக அவன் தான் எழுதிய காதல் கடிதம் ஒன்றை அவளிடம் தரும்படியே அனுப்பி வைப்பான். சில நாட்களில் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடம் …

குறுங்கதை 87 காதல் கவிதை. Read More »

ஜி.சௌந்தர்

யோகா மாஸ்டர் ஜி.சௌந்தரிடம் இரண்டு மாதங்களாக யோகா கற்றுக் கொண்டேன். உடலையும் மனதையும் பேணுவதற்கு யோகா மிகச்சிறந்த வழி. யோகா கற்றுக் கொள்வதில் நல்ல ஆசான் கிடைப்பது முக்கியம். சௌந்தர் மிகச்சிறந்த ஆசிரியர். . சிறந்த யோக பரம்பரையில் ஒன்றான பிஹார் யோக பள்ளியில் ஏழு ஆண்டுகள் பயின்றவர். சென்னை வடபழனியில் சத்யானந்த யோகமையம் நடத்தி வருகிறார். இவர் கற்றுத்தரும் மரபார்ந்த, முறையான யோகப் பயிற்சிகள் மிகச்சிறப்பானவை. அதன் பலனை நான் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். இலக்கியத்தின் மீது …

ஜி.சௌந்தர் Read More »

குறுங்கதை 86 குடும்பச் சண்டை.

கடைக்குச் சென்றால் விதவிதமான பூஜாடிகளை வாங்கி வருவது அவளது வழக்கம். இத்தனை ஜாடியிலுமா பூக்களை வைக்கப்போகிறாய் என்று கணவன் கோவித்துக் கொள்வாள். அதற்கு அவள் பூஜாடிகள் பூக்கள் வைப்பதற்காக மட்டும் உருவாக்கப்பட்டவையில்லை என்பாள். அவனால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. வேஸ்ட் ஆப் மணி என்று அவள் காதுபடச் சொல்வான். உடனே அவள் நீ மட்டும் விதவிதமான ஷுக்களை வாங்கி அடுக்கவில்லையா என்று சண்டையிடுவாள். அது உண்மை, அவனிடம் நூற்றுக்கும் மேற்பட்ட காலணிகள் இருந்தன. எந்தப் புது …

குறுங்கதை 86 குடும்பச் சண்டை. Read More »

குறுங்கதை 85 ஓடிப்போனவன்.

பால்காரனுக்குத் தருவதற்காக அம்மா வைத்திருந்த பணத்தைத் திருடிக் கொண்டு வீட்டை விட்டு ஒடிய அந்தப் பையன் தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்த பணத்தை மறுபடியும் எண்ணிப்பார்த்துக் கொண்டான். சரியாக 638 ரூபாய் இருந்தது. இதை வைத்துக் கொண்டு எங்கே போவது என்ன செய்வது எதுவும் தெரியவில்லை. ஆனால் இனி வீட்டிற்குத் திரும்பிப் போகக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான். பதின்வயதுகளில் வீடு ஒருவனுக்கு அந்நியமாக ஆரம்பிக்கிறது. வீட்டின் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள். கெடுபிடிகள் எரிச்சலூட்டுகின்றன. எவர் முகத்தையும் பார்க்கப் …

குறுங்கதை 85 ஓடிப்போனவன். Read More »

குறுங்கதை 84 மறு உத்தரவு.

சீனாவின் வடக்கு எல்லையை ஒட்டியிருந்தது அந்தக் கிராமம். அந்தக் கிராமத்திற்கு ஒரு நாள் அரசாணை ஒன்று வந்தது. அதன் படிப் போர் முடித்துத் திரும்பும் வீரர்களை வரவேற்க ஊரிலுள்ள பெண்கள் யாவரும் அலங்காரம் செய்து கொண்டு, ஊர் முகப்பில் ஒன்று கூடி, கையில் மலர்மாலை ஏந்தி வரவேற்றுப் பாட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. கிராமத் தலைவர் உடனடியாக உத்தரவிற்கு அடிபணிய வேண்டுமெனக் கட்டளையிட்டார். அக்கிராமத்தில் நூற்றுக்கும் குறைவாகவே வீடுகள் இருந்தன. அந்த வீட்டிலிருந்த பெண்கள் பண்டிகை நாட்களில் …

குறுங்கதை 84 மறு உத்தரவு. Read More »

ஸ்டீன்பெக்கின் குறிப்புகள்.

“a book must be the axe for the frozen sea inside us,” –          Franz Kafka நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஜான் ஸ்டீன்பெக்கின் The Grapes of Wrath நாவல் அமெரிக்காவின் நவீன இதிகாசமாகக் கொண்டாடப்படுகிறது. திரைப்படமாக வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற நாவலது. இதுவரை இரண்டு கோடி பிரதிகளுக்கும் மேலாக விற்றிருக்கும் என்கிறார்கள். நாவல் அடைந்த வெற்றியில் ஸ்டீன்பெக் மிகப்பெரிய பண்ணை வீட்டினை விலைக்கு வாங்கினார். அதற்குள் அழகான நீச்சல் …

ஸ்டீன்பெக்கின் குறிப்புகள். Read More »