admin

புலியுடன் ஒரு தேநீர் விருந்து.

The Tiger Who Came to Tea (2019) என்ற அனிமேஷன் படத்தைப் பார்த்தேன். உலகப்புகழ் பெற்ற சிறார் கதையை அனிமேஷன் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். சோஃபி என்ற ஒரு சிறுமி தனது அம்மாவுடன் பூங்காவிற்குக் கிளம்புகிறாள். எதிர்பாராதபடி மழை வந்துவிடுகிறது. வீட்டில் என்ன செய்வது என அம்மாவும் மகளும் கேக் செய்கிறார்கள். வீட்டிலே ஒரு தேநீர் விருந்து ஏற்பாடு செய்வோம் என்கிறாள் அம்மா. அது சோஃபியை உற்சாகம் கொள்ள வைக்கிறது. சாண்ட்விட்ச். கேக். தேநீர் என யாவும் …

புலியுடன் ஒரு தேநீர் விருந்து. Read More »

குறுங்கதை 83 சந்தன சோப்.

சங்கரனின் அப்பா மரக்கடை வைத்திருந்தார். அதற்குத் தேவையான மரங்களைக் கேரளாவில் சென்று வாங்கி வருவது வழக்கம்.அப்படி ஒரு முறை லாரியில் கிளம்பும் போது சங்கரனையும் உடன் அழைத்துச் சென்றார். அப்பாவோடு லாரியில் செல்வது சங்கரனை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியது. வளைந்து செல்லும் மலைப்பாதைகளில் லாரி போகும் போது காற்றுக் கன்னத்தை வருடுவது போல அடித்தது. மூன்று மணி நேரப்பயணத்தின் பிறகு அவர்கள் சர்ப்பக்காவு என்ற கிராமத்தை அடைந்தார்கள். சோலை போல அடர்ந்திருந்த மரங்கள். ஆற்றின் கரையை ஒட்டிய கிராமம். …

குறுங்கதை 83 சந்தன சோப். Read More »

குறுங்கதை 82 இரவில் நடப்பவர்கள்

மலைநகரம் ஒன்றில் வசித்த நான்கு நண்பர்கள் தான் முதலில் அதைத் துவக்கினார்கள். ஆனால் மெல்ல ஒவ்வொருவராக ஆர்வம் காட்டவே அது முப்பது பேர் கொண்ட நடைக்குழுவாக மாறியது. அதில் ஆறு பெண்களும் இருந்தார்கள் அவர்கள் வாரம் சனிக்கிழமை இரவு நடக்கத்துவங்குவார்கள். முழு இரவும் நடப்பார்கள். விடியும் போது எந்த ஊரை அடைகிறார்களோ அங்கே அறை எடுத்துத் தங்கிவிடுவார்கள். மறுநாள் பகல் முழுவதும் உறக்கம். திரும்பி வரும் போது பேருந்தில் பயணம் மேற்கொள்வார்கள். பகலில் நடப்பது போன்றதில்லை இரவில் …

குறுங்கதை 82 இரவில் நடப்பவர்கள் Read More »

குறுங்கதை 81 மறுசந்திப்பு

நாற்பது வருஷங்களுக்குப் பிறகு அவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் மறுமுறை சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. அப்படி ஒரு நிகழ்வினை முன்னெடுத்தவன் மகேந்திரன். அவனே ஒரு வாட்ஸ்அப் குரூப் துவங்கி அதில் பழைய மாணவர்களின் தொலைபேசி எண்களைக் கண்டறிந்து அவர்களுடன் பேசி தேதி குறித்து அந்தச் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தான். பல்வேறு மாவட்டங்களிலும் பணிக்காகத் தங்கியிருந்தவர்கள் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் பங்கேற்க ஆர்வம் காட்டினார்கள் டேனியலுக்கு அந்தச் சந்திப்பிற்குப் போவதில் விருப்பமிருந்தாலும் …

குறுங்கதை 81 மறுசந்திப்பு Read More »

குறுங்கதை 80 மனக்கண்.

காணாமல் போன, திருடு போன பசுமாடுகளைக் கண்டுபிடித்துத் தருவதற்கென ஒரு மனிதர் இருந்தார். சாது சுப்பையா என்ற அவருக்கு எந்த ஊரில் பசு காணாமல் போயிருந்தாலும் அது எங்கே போயிருக்கக்கூடும் என்று தெரிந்துவிடும். கரிசலின் சின்னஞ்சிறிய கிராமம் ஒன்றில் வசித்து வந்த அவரிடம் தங்கள் மாடு பற்றி அறிந்து கொள்வதற்காக வடக்கேயிருந்து கூட ஆட்கள் வருவார்கள். ஒரு கட்டு வெற்றிலை பாக்கும் ஒரு படி உப்பும் தான் அவருக்குக் காணிக்கை. சாது சுப்பையாவின் ஞானதிருஷ்டி தான் பசுவைக் …

குறுங்கதை 80 மனக்கண். Read More »

குறுங்கதை 79 ஐந்தாம் தேதி

அப்போது கதிருக்கு பதிமூன்று வயது நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதி எப்போது வரும் எனக் காத்துக் கொண்டேயிருப்பான் ஐந்தாம் தேதி தான் மயில்வாகனம் மாமா சம்பளம் வாங்குவார். அன்று மாலை கதிரையும் அவன் தம்பி தங்கைகளையும் ஹோட்டலுக்கு அழைத்துக் கொண்டு போவார். அந்த நாளுக்காகக் காத்து கிடப்பான். மயில்வாகனம் மாமா குமார் ஸ்டோரில் கணக்காளராக வேலை செய்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. தனி அறை எடுத்துத் தங்கியிருந்தார். அப்பா தான் தென்காசியிலிருந்த அவரை வரவழைத்து …

குறுங்கதை 79 ஐந்தாம் தேதி Read More »

குறுங்கதை -78 இந்தியா எனும் கனவு.

1487ல் எஸ்மரால்டா கப்பல் லிஸ்பனிலிருந்து புறப்பட்டது. ஆனால் ஒன்றரை வருஷங்களாகியும் அவர்களால் இந்தியாவிற்குச் செல்லும் வழியைக் கண்டறிய முடியவில்லை. கடலில் சுற்றி அலைந்து கொண்டிருந்தார்கள். அக்கப்பலில் இருந்தவர்களுக்கு இந்தியா என்பது ஒரு சொல்லில்லை. கனவு. அக் கப்பலின் கேப்டன் ஒரு கிளி வளர்ந்து வந்தான். அது நாள் முழுவதும் இந்தியா இந்தியா என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. இந்தியா என்பது வீதியெல்லாம் பொன்னும் மணியும் கொட்டிக்கிடக்கும் தேசம் எனக் கடலோடிகள் நம்பினார்கள். எவர் முதலில் சென்று சேருகிறார்களோ அவர்களுக்கே பொக்கிஷங்கள் …

குறுங்கதை -78 இந்தியா எனும் கனவு. Read More »

குறுங்கதை 77 மறதியின் காப்பகம்

அந்த ஷாப்பிங் மாலில் பார்வையாளர்கள் மறந்து விட்டுப் போன பொருட்களைப் பாதுகாத்து ஒப்படைப்பதற்கெனத் தனி அறையொன்று இருந்தது. அதன் நிர்வாகியாக இருந்தான் சிவானந்தம். வீட்டுச்சாவிகள். பைக், கார்சாவிகள். ஹேண்ட்பேக்குகள், கர்சீப், மணிபர்ஸ், குடை, சிறுவர்களின் காலணிகள், செல்போன்கள், வங்கி அட்டைகள், விளையாட்டுப் பொம்மைகள். குடிநீர் பாட்டில்கள். மூக்குக் கண்ணாடி, சில்லறைக் காசுகள். மாத்திரைகள், விக்ஸ் டப்பா, கால்கொலுசுகள் சிகரெட் லைட்டர்கள் போன்றவற்றைத் தான் மறந்து போன பொருட்களாக இருக்கும். சுத்தம் செய்யும் பணியாளர்கள் அவற்றை எடுத்து வந்து …

குறுங்கதை 77 மறதியின் காப்பகம் Read More »

குறுங்கதை 76 தந்தையும் மகளும்.

சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவின் சிறிய சமஸ்தானங்களில் ஒன்றாக இருந்தது கைசூர். அதன் மன்னராக இருந்த முக்திபோத் தன்னுடைய ஒரே மகள் கௌரியை ராம்கரில் திருமணம் செய்து கொடுத்திருந்தார். அந்த இரண்டு ஊர்களுக்கும் நடுவே ஒரு ஆறு ஓடியது. ஆற்றின் ஒரு கரையில் கைசூர் இருந்தது. மறுகரையில் ராம்கர். அன்றாடம் முக்திபோத் விடிகாலை  எழுந்தவுடன் தன் கையாலே மகளுக்கு விருப்பமான சிவப்பு ரோஜாவைப் பறித்து ஒரு தங்கப்பெட்டியில் வைத்து அனுப்பி வைப்பார். அதை அரண்மனையிலிருந்து  ஒரு வீரன் எடுத்துக் …

குறுங்கதை 76 தந்தையும் மகளும். Read More »