admin

குறுங்கதை 61 பேசாத்துணை

ரோசி டிசோசா என்ற அந்தப் பெண்ணிற்குக் கடைசிவரை துணையாக இருந்தது அந்த நாய் மட்டுமே. அவள் நோயுற்ற தருணங்களில் கூட அந்நாய் படுக்கையின் அருகிலே இருந்தது. சில நேரம் ரோசி இரவில் நோயின் வேதனை தாங்கமுடியாமல் அழுவாள். அப்போது அந்த நாய் அவளது கைகளை நக்கி தனது அன்பைத் தெரிவிக்கும். அவளை மருத்துவமனையில் அனுமதித்த நாட்களில்  நாய் வார்டின் உள்ளே வந்துவிட்டது. மருத்துவமனையினுள் நாயிற்கு அனுமதியில்லை என வெளியே துரத்திவிட்டார்கள். அப்படியும் அந்நாய் மருத்துவமனை வளாகத்தை விட்டுப் …

குறுங்கதை 61 பேசாத்துணை Read More »

குறுங்கதை 60 பெயர் எழுதப்பட்ட கால்பந்து

அப்பாவின் நினைவாக வீட்டிலிருந்தது அந்தக் கால்பந்து. அதில் விளையாட்டு வீரர்களின் பெயர்கள் யாவும் கையெழுத்திடப்பட்டிருந்தன. மங்கிய அந்த எழுத்துகளைக் கொண்டு ஒன்றிரண்டு பெயர்களை மட்டுமே வாசிக்க முடிந்தது. கால்பந்து விளையாட்டில் அப்பா கோல்கீப்பராக இருந்தார். அப்பா பரிசாகப் பெற்ற சில கோப்பைகள் வீட்டிலிருந்தன. ஆனால் அவர் கால்பந்து விளையாடுவது போல ஒரு புகைப்படம் கூட வீட்டில் இல்லை. எத்தனையோ மேட்ச் விளையாடியிருப்பாரே ஒன்றில் கூடவா புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை. அல்லது அந்தப் புகைப்படங்களைத் தொலைத்துவிட்டார்களா ?. எங்கள் …

குறுங்கதை 60 பெயர் எழுதப்பட்ட கால்பந்து Read More »

சிறுவர்களின் கனவு.

Good Morning என்ற ஜப்பானியத் திரைப்படத்தைப் பார்த்தேன். யசுஜிரோ ஓசு இயக்கியது.கூழாங்கற்கள் அளவில் சிறியதென்றாலும் தனித்துவமான அழகு கொண்டவை. ஓசுவின் படங்களும் அப்படியானதே, அவரது பிரதான கதைக்களம் குடும்பம். ஜப்பானியக் குடும்ப உறவின் பல்வேறு தளங்களை விவரிப்பதே அவரது படங்கள். அது போலவே காலமாற்றம் ஜப்பானிய வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகளையும் அவரது படங்கள் துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறார். ரயில் பாதைகளும் ரயிலும் யசுஜிரோ ஓசுவிற்கு மிகவும் விருப்பமானவை. அவற்றைக் குறியீடுகள் போலவே பயன்படுத்துகிறார் இப்படத்தில் 1950களில் ஜப்பானிய வாழ்க்கை …

சிறுவர்களின் கனவு. Read More »

குறுங்கதை 59 கானலை அருந்தும் யானை.

பாடிப் பரிசல் பெறுவதற்காக வந்த அவர் மூன்று நாட்களாகக் காத்திருந்தார். கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் என்பது அவரது பெயர் மலைநாட்டில் பௌர்ணமி தோறும் நிலா வட்டம் கூடுவது வழக்கம். ஊர் கிழார் பாணர்களையும் பாடினிகளையும் வரவேற்று கௌரவிப்பார். பரிசல் தந்து அனுப்பி வைப்பார். ஒரு முறை அவர் பாணன் ஒருவனுக்குப் புள்ளிமான் ஒன்றைப் பரிசாக அளித்து அனுப்பினார் என்றார்கள். புள்ளிமானுடன் ஒரு பாணன் நெடுந்தொலைவு நடந்து செல்லும் காட்சி நற்சேந்தனார் மனதில் வந்து போனது. ஊர் கிழாரின் …

குறுங்கதை 59 கானலை அருந்தும் யானை. Read More »

குறுங்கதை 58 காதல்பறவைகள்.

அன்புமிக்கச் சுனிதா அகர்வால் அவர்களுக்கு, நீங்கள் எனது திருமணப்பரிசாகக் கொடுத்தனுப்பிய இரண்டு காதல் பறவைகளை உங்களிடமே திருப்பி அனுப்பி வைக்கிறேன். இது முறையான செயலில்லை என்ற போதும் இந்தப் பறவைகள் வந்த நாள் முதல் நான் நிம்மதியற்றுப் போய்விட்டேன் என்பதால் இதை நீங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறேன். எனக்கோ, என் மனைவிக்கோ பறவைகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்ததே கிடையாது. ஒருமுறை அழகான நாய்க்குட்டி ஒன்றை வீட்டிற்குக் கொண்டுவந்த போது உடனே அதை …

குறுங்கதை 58 காதல்பறவைகள். Read More »

குறுங்கதை 57 நீராக மாறியவர்கள்.

நினைத்த மாத்திரத்தில் தண்ணீராக மாறக்கூடிய நான்கு குள்ளர்கள் இருந்தார்கள். அவர்களின் வேலை வாசனையற்ற மலர்களைக் கண்டறிந்து தனது விரல்தொடலின் மூலம் அந்த மலருக்கு வாசனை தருவது. வாசனையில்லாத மலரின் ஏக்கம் விவரிக்கமுடியாதது. இருட்டில் பறக்கும் பறவையின் கேவலைப் போல உலகம் அறியாதது. குள்ளர்கள் உலகின் அத்தனை மலர்களும் மணம் கொண்டிருக்க வேண்டும் என நினைத்தார்கள். இதற்காகக் காடு மலைசுற்றி அறியப்படாத சிறு மலரை அடையாளம் கண்டு அதற்கொரு வாசனையைக் கொடுத்தார்கள். புதிய வாசனையைப் பெற்றுக் கொண்ட மலர்கள் …

குறுங்கதை 57 நீராக மாறியவர்கள். Read More »

குறுங்கதை 56 உலகம் கேட்கிறது.

வாழ்வில் முதன்முறையாக ஒரு ரேடியோ ஸ்டேஷன் முன்பு நிற்கிறோம் என்ற யோசனையோடு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார் ராகவன். அவரது கையைப்பிடித்தபடியே நின்றிருந்தான் அவரது ஒன்பது வயது மகன் பாலு. அகில இந்திய வானொலி நிலையம் முன்பாக அவர்கள் நின்றிருந்தார்கள். 1970களில் சில வீடுகளில் தான் ரேடியோ இருந்தது. ராகவன் பர்மாவில் வேலை செய்தவர் என்பதால் அங்கிருந்து வால்வு ரேடியோ ஒன்றை வாங்கி வந்திருந்தார். அந்த வானொலியில் லைட் எரிவதற்கே ஐந்து நிமிஷங்கள் ஆகும். அதன்பிறகு கரகரவெனச் சப்தம் …

குறுங்கதை 56 உலகம் கேட்கிறது. Read More »

கானகத்தின் குரல்

ஜாக் லண்டனின் The Call of the Wild நாவல் 1958லே பெ.தூரன் மொழியாக்கத்தில் கானகத்தின் குரல் என்ற பெயரில் வெளியாகியுள்ளது.. பக் என்ற நாயின் வரலாற்றை விவரிக்கும் கானகத்தின் குரல் சுவாரஸ்யமான புத்தகம். அலாஸ்காவில் தங்க வேட்டைக்குப் போனவர்களின் கதையைச் சொல்வதுடன் பனிச்சறுக்கு வண்டி இழுத்துச் செல்லும் நாயின் கதையினை அழகாக விவரித்திருக்கிறார் ஜாக் லண்டன் இந்த நாவல் நான்கு முறை ஹாலிவுட்டில் படமாக்கபட்டிருக்கிறது. Clark Gable நடித்து 1935ல் வெளியான படத்தையும் Charlton Heston …

கானகத்தின் குரல் Read More »

குறுங்கதை 55 கணிதப்புதிர்

கணிதப்புதிர் ஒன்றிற்குத் தீர்வு காணுவதற்காக ஆர் எஸ் சர்மா தனது வாழ்நாளில் எழுபது ஆண்டுகளைக் கழித்திருந்தார். அவரது பதினாறாவது வயதில் ஒரு நாள் பள்ளி ஆசிரியரும் வானவியல் அறிஞருமான அவரது தந்தை அழைத்து அந்தக் கணிதப்புதிரைப் பற்றிச் சொன்னார். இதுவரை உலகில் எவராலும் அந்தக் கணிதப்புதிர் தீர்த்துவைக்கப்படவில்லை. ஆகவே அதைச் சர்மா தீர்த்துவிட்டால் உலகின் கவனம் அவர் மீது விழும். கணிதமேதையாகக் கொண்டாடப்படுவார் என்று சொன்னார் தந்தை. சர்மா தந்தையிடமிருந்தே கணிதம் கற்றுக் கொண்டார். ஒன்பது வயதிற்குள் …

குறுங்கதை 55 கணிதப்புதிர் Read More »

குறுங்கதை 54 இது வேறு ஜன்னல்

பூங்காவில் அந்த மனிதர் பேசிக் கொண்டிருப்பதை ஒரு இளைஞன் கேட்டுக் கொண்டிருந்தான். “ என் வீட்டின் ஜன்னல்களை எண்ணமுடியாது.. ஒவ்வொரு ஜன்னலைத் திறக்கும் போது நான் காணும் காட்சிகள் வேறு வேறானவை. மனிதர்கள் நிறைய ஜன்னல்கள் உள்ள வீடுகளில் வசிக்க வேண்டும். எந்த ஜன்னல் வழியாக உலகை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று தெரியாது. வெட்டவெளி கற்றுத்தராததை ஜன்னல்கள் கற்றுத் தந்துவிடக் கூடியது என்றார் அந்த மனிதர் “உங்கள் வீடு எங்கேயிருக்கிறது “எனக்கேட்டான் அந்த இளைஞன் “மாதா …

குறுங்கதை 54 இது வேறு ஜன்னல் Read More »