admin

பறவைகளை அழைத்துச் செல்பவன்.

Spread Your Wings என்ற பிரெஞ்சு படத்தைப் பார்த்தேன். அழிந்து வரும், காட்டு வாத்து இனம் ஒன்றைக் காப்பாற்ற வேண்டி பறவையியலாளர் கிறிஸ்டியன் ஒரு ஆய்வுத்திட்டத்தைச் சமர்ப்பிக்கிறார். அதை ஏற்றுக் கொள்ளாமல் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் நிராகரிக்கிறது. தனது திட்டத்தைச் செயல்படுத்த விரும்பிய கிறிஸ்டியன் அலுவலக முத்திரையைத் திருடி வந்து தானே ஒரு அரசாணை போல ஒன்றைத் தயார் செய்கிறார். அவரது திட்டம், காட்டுவாத்துகளின் முட்டைகளைச் சேகரித்து அந்த வாத்துகள் பிறக்கும் நாளிலிருந்து தானே வளர்த்து அவற்றைப் …

பறவைகளை அழைத்துச் செல்பவன். Read More »

குறுங்கதை 53 பூச்சரம் சூடிய குரங்கு

அந்தக் குரங்காட்டியையும் அவனது பெண்குரங்கினையும் ஊரே அறிவார்கள். எப்போதும் தனது தோளில் குரங்கை உட்கார வைத்துக் கொண்டு அவன் சுற்றிக் கொண்டிருப்பான். சாப்பிடப்போகும் போதும் கூட அருகில் உட்கார வைத்து தனது இலையிலிருந்த உணவை அதற்கும் தருவான். அவன் சலூனில் சென்று முடிவெட்டிக் கொள்ளும் போது அக்குரங்கு கண்ணாடியில் தன்னைப் பார்த்தபடியே இருக்கும். சில வேளைகளில் அந்தப் பெண் குரங்கிற்கு அவன் பூச்சரம் வாங்கிச் சூடிவிடுவான். பெரும்பாலும் அவன் பள்ளியின் முன்னால் மாலைநேரங்களில் வித்தை காட்டுவது வழக்கம். …

குறுங்கதை 53 பூச்சரம் சூடிய குரங்கு Read More »

சௌடையாவின் குரல்.

ஆரம்பப் பள்ளி படிக்கும் போது நீதிபோதனை என்றொரு வகுப்பிருந்தது. அதில் சிறிய கதைப் புத்தகங்களை வாசிக்கத் தருவார்கள். சில நேரம் கதையை ஆசிரியரே படித்துக் காட்டுவார். நாங்கள் கேட்பதுண்டு. அழவள்ளியப்பா எழுதிய ஈசாப் கதைகளின் பாடல் வடிவம் மிகவும் பிரபலமானது. ஆசிரியர் அதை அழகாகப் பாடுவார். ஒட்டுமொத்த வகுப்பறையும் அந்தப் பாடலைப் பாடும். நீதிபோதனை வகுப்பு பெரும்பாலும் வெள்ளிக்கிழமை மதியம் தான் இருக்கும். ஆகவே அன்று பள்ளி முடிந்தபிறகும் மாணவர்கள் மைதானத்திலிருந்தபடியே இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருப்போம்.தப்பியோடிய …

சௌடையாவின் குரல். Read More »

குறுங்கதை 52 சிற்பியான எலி

அந்த நகரில் ஒரு எலி சிற்பியாக வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒருநாள் பேக்கரி ஒன்றின் உள்ளே இரவில் திருடப் போகையில் அங்கே செய்து வைக்கப்பட்டிருந்த விதவிதமான கேக்குகளையும் அதன் அலங்கார வடிவத்தையும் கண்ட அந்த எலி அவற்றை உண்ணும் சிற்பங்களாகவே கருதியது. ஆகவே தானும் அப்படியான சிற்பங்களைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டது. திருடி வந்த கேக்துண்டினை வைத்துக் கொண்டு சிற்பம் செய்து பார்த்தது. ஆரம்பத்தில் அந்த எலி நினைத்தது போலச் சிறிய உருவத்தைக் …

குறுங்கதை 52 சிற்பியான எலி Read More »

பால்சாக்கின் காதல்.

பிப்ரவரி 1832 இல் எழுத்தாளர் பால்சாக் (Honore de Balzac) முகவரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அது உக்ரேனின் ஒடேஸாவிலிருந்து எழுதப்பட்ட கடிதம். எழுதியவர் பெயர் முகவரி எதுவுமில்லை. ஆனால் அக் கடிதம் பால்சாக்கின் படைப்புகளைக் கோபமாக விமர்சனம் செய்திருந்தது. குறிப்பாக அவரது La Peau de chagrin நாவலின் பெண் கதாபாத்திரம் பற்றி எதிர்மறையான விமர்சனத்தை வைத்திருந்தது. யார் எழுதியது என்று தெரியவில்லை. அந்நியர் என்று மட்டுமே கையெழுத்து இடப்பட்டிருந்தது. ஆனால் அதை எழுதியது ஒரு …

பால்சாக்கின் காதல். Read More »

குறுங்கதை 51 மூன்று கிளிகள்

பறவைகளை யாராவது சகோதரிகள் என்று நினைப்பார்களா ?. வள்ளி ஆச்சி அப்படி நினைத்தாள். அன்றாடம் தன்னுடைய வீட்டின் பின் சுவரில் வந்தமரும் மூன்று கிளிகளை அவள் அக்கா தங்கைகள் என்றே கருதினாள். அக்கிளிகளும் சகோதரிகளைப் போலவே ஒன்றாக வாலசைத்தன. மூன்று கிளிகளைப் போலத் தான் ஆச்சியும் மூன்று பெண்களில் ஒருத்தியாகப் பிறந்தாள். ஆனால் அவளது மூத்த சகோதரிகள் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்கள். ஆச்சிக்கும் வயது எழுபதைக் கடந்தாகிவிட்டது. அரண்மனை போலப் பெரிய வீடு. வீட்டின் ஜன்னல்களை …

குறுங்கதை 51 மூன்று கிளிகள் Read More »

கதவும் கூரையும்

பை சைக்கிள் தீவ்ஸ் படத்தின் மூலம் உலகச் சினிமாவை திசை திரும்ப வைத்தவர் இத்தாலிய இயக்குநரான விட்டோரியோ டி சிகா. அவரது இயக்கத்தில் 1956 ஆம் ஆண்டு வெளியான தி ரூஃப் (The Roof ) என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். புதிதாகத் திருமணம் செய்து கொண்ட நடாலும் லூயிசாவும் குடியிருப்பதற்காக வீடு தேடுகிறார்கள். ரோமில் ஏழைகளுக்கு வீடு கிடைப்பது மிகவும் கடினம். தங்களுக்கென ஒரு வாழ்விடத்தை உருவாக்கிக் கொள்ள இளம் தம்பதிகள் மேற்கொள்ளும் போராட்டமே இப்படம். சிறிய …

கதவும் கூரையும் Read More »

காற்று,மணல், நட்சத்திரங்கள்.

காற்று, மணல்,நட்சத்திரங்கள் குறித்த சிறிய அறிமுக உரை பிரெஞ்சு எழுத்தாளர் அந்த்வான் து செந்த்-எக்சுபெரி எழுதிய குட்டி இளவரசன் உலகின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்று. அந்த நாவல் எழுதுவதற்கான ஆதார அனுபவங்களை விவரிக்கிறது காற்று, மணல், நட்சத்திரங்கள். இதில் விமானியான எக்சுபெரி தனது  பறக்கும் அனுபவத்தை மிக அழகாக விவரித்திருக்கிறார். . இந்த நூலை தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்திருப்பவர் வெ. ஸ்ரீராம். க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது இணைப்பு https://youtu.be/_fTInyp8nfk