குறுங்கதை 38 பேரனுபவம்
அந்தத் தீவு முழுவதும் தென்னை மரங்கள் நிரம்பியிருந்தன. மிக உயரமாக இருந்த தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் தன் வாழ்க்கையில் பெரிய அனுபவம் எதுவுமில்லையே எனப் புலம்பிக் கொண்டிருந்தது. தென்னை அதற்குப் பதில் தரவில்லை. ஒவ்வொரு நாளும் அந்தத் தேங்காய் காலடியில் ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்து எத்தனை அழகாகயிருக்கிறது. அதில் பயணம் போனால் எவ்வளவு ஆசையாக இருக்கும் என ஏங்கியது. முடிவில் ஒரு நாள் அந்தத் தேங்காய் மரத்திலிருந்து உதிர்ந்து கடலில் விழுந்தது. அலையாடும் கடலை அது …