குறுங்கதை-21 வண்ணங்களின் தாய்.
ஓவியர் வின்சென்ட் வான்கோ வீடு திரும்பும் போது இரவாகியிருந்தது. இன்றும் அவரால் நினைத்தபடியே ஓவியம் தீட்டமுடியவில்லை. கோதுமை வயலினைக் கடந்து செல்லும் காற்றை வரைய அவர் போராடிக் கொண்டிருந்தார். நினைத்தபடி படம் வரவில்லை. ஆகவே சோர்ந்து போய் வீடு திரும்பியிருந்தார். வீட்டின் கணப்பு அடுப்பிற்கு விறகுகள் இல்லை. சமைத்து உண்பதற்கு உருளைக்கிழங்குகள் கிடையாது. பசி . தாங்க முடியாத பசி அவரை வாட்டியது. பனிக்காலத்தின் இரவுகள் தனிமையை அதிகம் உணர்த்தக்கூடியவை. குளிர் உடலை விடவும் மனதை அதிகம் …