admin

வீட்டிற்கு வந்த பறவை

World Literature Today என்ற இதழைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சமகால உலக இலக்கியப்போக்குகளை அறிந்து கொள்ளவும் சிறந்த மொழியாக்கங்களை வாசிக்கவும் உதவும் பத்திரிக்கை. இந்தியாவிற்கான இதன் ஆண்டுச் சந்தா 150 டாலர். இதன் பழைய இதழில் ஃபக்ரி காவர்(Fakhri Kawar) என்ற ஜோர்டான் எழுத்தாளரின் A Bird in My House என்ற கதையை வாசித்தேன். அற்புதம். மிக வித்தியாசமான கதை. இக்கதையை வாசித்தபிறகு ஃபக்ரி காவரின் புத்தகங்களைத் தேட ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் ஒன்றிரண்டே வாசிக்கக் கிடைக்கின்றன. …

வீட்டிற்கு வந்த பறவை Read More »

மும்பை இலக்கிய விழா

கடந்த மூன்று நாட்களாக மும்பை கேட்வே லிட்பெஸ்டிவலில் கலந்து கொண்டிருந்தேன். இந்தியா முழுவதுமிருந்து முக்கிய எழுத்தாளர்கள் பலரும் வந்திருந்தார்கள். இந்திய இலக்கியத்தின் எதிர்காலம் குறித்து நான்கு முக்கிய அமர்வுகள் நடைபெற்றன. NCPA அரங்கம் மிக அழகானது. பல்வேறு நாடக அரங்குகளை ஒன்றாகக் கொண்ட வளாகமது. அமர்வில் விவாதித்ததை விடவும் அரங்கிற்கு வெளியே எழுத்தாளர்களுடன் கூடிப் பேசி ஒன்றாக நாளைக் கழித்தது மகிழ்ச்சியாக இருந்தது. நிகழ்விற்கு வந்திருந்த இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனை சந்தித்து உரையாடினேன். மலையாள எழுத்தாளர் உண்ணி, …

மும்பை இலக்கிய விழா Read More »

குறுங்கதை-10 சண்டைச்சேவல்

அவனது சண்டைச்சேவல் தோற்றதேயில்லை. அவன் சேவலைச் சண்டைக்குப் பழகுவதற்கு  முன்பாக அது ஒரு சேவல் இல்லை என்பதை உணரச் செய்வான். இதற்காக அதிகாலையில் சேவல் தன்னை அறியாமல் கூவும் போது சிறிய மூங்கில் கழியால் அடித்து அது கூவுவதைக் கட்டுப்படுத்துவான். நாட்படச் சேவல் கூவுவதை நிறுத்திக் கொண்டுவிடும். பின்பு சேவலை இன்னொரு சேவலுடன் சண்டைக்குப் பழக்குவதற்குப் பதிலாகத் தண்ணீரை பீய்ச்சியடித்து சேவலை அதோடு சண்டையிடச் செய்வான். தண்ணீர் எந்தத் திசையிலிருந்து பீறிடும் எனத் தெரியாமலும் நனைந்து கண்ணை …

குறுங்கதை-10 சண்டைச்சேவல் Read More »

ஓமானில்

சோலை வாசகர் வட்டம், நிஸ்வா-  ஓமானில் எனது படைப்புலகம் குறித்த இலக்கியக் கூட்டம் நடைபெறுகிறது. நிகழ்வை ஒருங்கிணைப்பவர்களுக்கும் கலந்து கொண்டு உரையாற்றுபவர்களுக்கும் நன்றி •• தொடர்புக்கு +96896630871

காதலின் நினைவில்

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை என்ற எனது புதிய  நாவலைப் பற்றி  அழகான விமர்சனத்தை திவாகர் ஜெ எழுதியிருக்கிறார். அவருக்கு எனது நன்றி •• காதலின் நினைவில் திவாகர். ஜெ உங்களின் பள்ளிப் பருவக் காலத்தில் நீங்கள் கோடை விடுமுறைக்கு உறவினர் வீடுகளுக்கு சென்றதுண்டா? நிச்சயம் சென்றிருப்போம். அதுவும் பெரும்பாலும் தாத்தா – பாட்டி வீட்டிற்கோ அல்லது மாமா வீட்டிற்கோ தான் சென்றிருப்போம் அல்லவா? இக்கதையும் அப்படியொரு கோடை விடுமுறையில் தனது தாத்தா வீட்டிற்குச் செல்லும் ஒருவனது …

காதலின் நினைவில் Read More »

குறுங்கதை- 9 அம்மாவின் புத்தகம்

திருமணமாகி வந்த போது தனது வீட்டிலிருந்து அம்மா அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தாள். ஆப்த நாதரின் கதைகள் என்ற அந்தப் புத்தகத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் அம்மா படித்துக் கொண்டிருந்தாள். அட்டை கிழிந்து காகிதங்கள் பழுத்து உதிரும் நிலைக்கு புத்தகம் வந்தபோதும் அதை வாசிப்பதை நிறுத்தவில்லை. ஒரு புத்தகத்தை எத்தனை முறை படிக்க முடியும். அப்படி என்னதான் அப்புத்தகத்தில் இருக்கிறது. அம்மா புத்தகம் படிக்கும் போது அவள் முகத்தில் எத்தனையோ உணர்ச்சிகள் வெளிப்படும். வீட்டுவேலைகள் செய்து கொண்டிருக்கும் …

குறுங்கதை- 9 அம்மாவின் புத்தகம் Read More »

குறுங்கதை- 8 கனவின் நடனம்

அந்த நகரில் எல்லோரும் கனவில் நடனமாடினார்கள். விடிந்து எழுந்தவுடன் தாங்கள் கனவில் ஆடிய நடனத்தைப் பற்றி வெட்கத்துடன், பெருமிதத்துடன், கூச்சத்துடன் பகிர்ந்து கொண்டார்கள். ஒரு இளம் பெண் சொன்னாள். நான் “நீர்க்குமிழி வானில் பறப்பது போல நடனமாடினேன்“. ஒரு இளைஞன் சொன்னான் “பாய்ந்தோடும் குதிரையின் வேகம் போலிருந்தது எனது நடனம்“. ஒரு முதியவர் சொன்னார் “நதிக்கரையோர நாணலின் அசைவு போன்றிருந்தது எனது நடனம்“. வீட்டு வேலைக்காரப் பெண் சொன்னாள் “காற்றில் ஈரத்துணிகள் உலர்வது போலிருந்தது எனது ஆட்டம்“. …

குறுங்கதை- 8 கனவின் நடனம் Read More »

தேனீக்களை அழைப்பவள்.

இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப் படங்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரும்பான்மை படங்கள் ஏமாற்றமே அளித்தன. எந்தப் படத்திற்கு விருது கிடைக்கும் என்பதை எளிதாக கண்டறிய முடிந்தது. இவை வழக்கமான ஹாலிவுட் சந்தைக்கான படங்கள் என்பதைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் கிடையாது. தொழில்நுட்ப ரீதியாக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட காரணத்தால் அவை மிகச்சிறந்த படம் போலத் தோற்றமளிக்கின்றன. International Feature Film, Feature Documentary என இரண்டு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஹனி லேண்ட் …

தேனீக்களை அழைப்பவள். Read More »