admin

எழுத்தின் பிறப்பு

“தி கிங்ஸ் லெட்டர்ஸ்” என்ற கொரியத் திரைப்படத்தைப் பார்த்தேன். மிகவும் வித்தியாசமான வரலாற்று திரைப்படம். ஹங்குல் எனப்படும் இன்றுள்ள கொரிய மொழியின் அகரவரிசை எழுதும் முறை எவ்வாறு மன்னர் செஜோங்கால் உருவாக்கப்பட்டது என்பதை மிக அழகாகச் சித்தரித்துள்ளார்கள். சினிமாவாக எடுப்பதற்கு மிகக் கடினமான ஒரு விஷயத்தைக் கையில் எடுத்து எவ்வளவு நேர்த்தியாக, உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியிருக்கிறார்கள் என்பது வியக்கவைக்கிறது. 1443 ஆண்டுவரை கொரிய மொழிக்கு எழுத்து வடிவம் கிடையாது. சீன மொழியின் எழுத்து வடிவத்தைக் கொண்டே கொரிய மொழி …

எழுத்தின் பிறப்பு Read More »

குறுங்கதை 14 புதுக்குரல்

திடீரென ஒரு நாளில் அந்த நகரிலிருந்த சுவர்க்கடிகாரங்கள் யாவும் தன் ஒலியைத் தானே மாற்றிக் கொண்டுவிட்டன. டிங் டிங் என அதன் ஒலிக்கும் ஓசை நீண்டகாலமாகவே ஒரே போலிருந்தது தான் காரணமா, இல்லை ஓசை எழுப்பாத கடிகாரங்கள் வந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இப்படி மாறியதா எனத் தெரியவில்லை. ஆனால் சுவர்க்கடிகாரத்திலிருந்து க்கூ க்கூ என விசித்திரமாகப் பறவையின் ஒலி போலச் சப்தம் வர ஆரம்பித்தது. அரண்மனை அலங்கார கடிகாரம் ஒன்று இப்படிச் சபதமிடுவதாக மக்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். …

குறுங்கதை 14 புதுக்குரல் Read More »

குறுங்கதை -13 பெருங்கோபம்

கூழாங்கல்லின் அளவிலே இருந்தது அந்தத் தவளை. ஆனால் அதன் கோபம் கருநாகத்தின் சீற்றம் போல வெளிப்பட்டது. தன்னைச் சுற்றி நடக்கும் மோசமான செயல்களைக் கண்டு அத்தவளை பெருங்கோபம் கொண்டிருந்தது. எதுவும் சரியாக நடக்கவில்லை. யாரும் சரியானவர்களில்லை என்று சதா புலம்பிக் கொண்டேயிருந்தது. சுயநலம், அப்பட்டமான சுயநலம் என்று மற்ற விலங்குகளைப் பார்த்துக் குற்றம் சாட்டியது. தவளையின் கோபம் கள்ளப்பார்வையுடன் திரியும் ஓநாய் மீது திரும்பியது “எவரையும் அடித்துக் கொல்வதிலே குறியாக இருக்கிறாய். உன் புத்தி அற்பமானது. நான் …

குறுங்கதை -13 பெருங்கோபம் Read More »

சினிமாவே வாழ்க்கை.

இசைவிமர்சகர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் எனப் பன்முகத்திறமை கொண்ட ஷாஜியை எனக்கு இருபது ஆண்டுகளாகத் தெரியும். எப்போது சந்தித்தாலும் அவரது பேச்சின் ஊடே சினிமாவும் இசையும் இலக்கியமும் பீறிடும். இசையின் மீது இத்தனை பித்து கொண்ட ஒருவரை நான் கண்டதில்லை. ஆழ்ந்து கரைந்து இசை கேட்கக் கூடியவர். அது போலவே தான் சினிமாவும். உலகச் சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை ஆராய்ந்து பேசக்கூடியவர். மிஷ்கின் படங்களில் நடிக்கத் துவங்கி தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் தொடர்ந்து …

சினிமாவே வாழ்க்கை. Read More »

நன்றி ஜெயமோகன்

நண்பர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எனது சென்னையும் நானும் காணொளித் தொடர் பற்றி பாராட்டி எழுதியிருக்கிறார். கூடவே அதன் இணைப்புகளையும் தந்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய நன்றி. ஜெயமோகன் இணையதளத்தில் எழுதியுள்ள பதிவு. •• சென்னையும் எஸ்.ராமகிருஷ்ணனும் எஸ்.ராமகிருஷ்ணன் சென்னையும் நானும் என்ற தலைப்பில் தொடர்ச்சியாகப் பேச ஓர் ஆவணப்படத்தன்மையுடன் அமைந்த யூடியூப் காணொளித்தொடர் இதுவரை பத்து பகுதிகள் வெளியாகியிருக்கின்றன திடீரென்று யூடியூப் பிரபலமாகிவிட்டிருக்கிறது. அதை பலபேர் பார்க்கிறார்கள் – பணமும் வருகிறது. ஆனால் பார்க்கத்தக்க …

நன்றி ஜெயமோகன் Read More »

குறுங்கதை -12 இரண்டு பிரார்த்தனைகள்

புதிதாகத் திருமணமாகி கணவன் வீடு வந்த இளம்மனைவி சமையலறைக்குள் நுழைந்தாள். முதல்நாள் சமைக்கப்போகிறோம் என்ற பதைபதைப்பு அவளுக்குள்ளிருந்தது. அடுப்பின் முன்னால் வந்து நின்று இரண்டு பிரார்த்தனைகளைச் செய்தாள். ஒன்று நெருப்பிடம். மற்றொன்று உப்பிடம் நெருப்பிடம் அவள் பிரார்த்தனை செய்தாள். “மிகாமலும் குறையாமலும் துணையிருந்து சமைப்பதில் உதவி செய். உன் கோபத்தை காய்கறிகளிடம் காட்டாதே. உன் கருணையால் உணவினை வேகச்செய். பதமாக்கு. ருசிக்கச் செய்.“ உப்பிடம் இது போல அவள் பிரார்த்தனை செய்தாள். “கூடாமலும் குறையாமலும் துணையிருந்து சமைப்பதில் …

குறுங்கதை -12 இரண்டு பிரார்த்தனைகள் Read More »

பேரெழில் பனிமலை

மலையேற்றம் பற்றிய திரைப்படங்களைக் காண்பது எனக்குப் பிடிக்கும். உயிரைப் பொருட்படுத்தாமல் பனியில் வீரர்கள் மலையேறுவதைக் காணும் போது நாம் அறிந்துள்ள மலையும் அவர்கள் அறிந்துள்ள மலையும் வேறு என்பது நன்றாகப் புரியும். Cliffhanger என்ற படத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பாகப் பார்த்திருக்கிறேன். சில்வர்ஸ்டர் ஸ்டோலன் மலையேற்ற வீரராக நடித்திருப்பார். பரபரப்பான ஹாலிவுட் திரைப்படம். The Climbers என்ற 2019ல் வெளியான சீனப்படமும் எவரெஸ்ட் மலையேறும் சீன ராணுவக் குழுவின் முயற்சிகளையே விவரிக்கிறது. இந்த இரண்டு படங்களின் கலவையான …

பேரெழில் பனிமலை Read More »

இலக்கியச் சிந்தனை விருது

2019ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஆனந்த விகடனில் வெளியான எனது சிற்றிதழ் கதையை  இலக்கியச் சிந்தனை தேர்வு செய்துள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா ஏப்ரல் 14 அன்று நடைபெறவுள்ளது.  இந்த தகவலை இலக்கியச் சிந்தனை அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ப.லட்சுமணன் தெரிவித்துள்ளார். சிறுகதையை வெளியிட்ட ஆனந்தவிகடனுக்கும் விருது அளிக்கும் இலக்கியச் சிந்தனைக்கும் மிகுந்த நன்றி. எனது புதிய சிறுகதைத் தொகுதியான போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் தொகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது.

குறுங்கதை-11 போர்வீரனின் சூரியன்.

யுத்தமுனையிலிருந்த இளம் போர்வீரன் ஒவ்வொரு நாளும் தனது மனைவியை, பிள்ளைகளை, தாயை, சொந்த வீட்டினை, வீட்டுச் சுவரில் ஓடியாடும் அணிலை, எப்போதாவது வந்து போகும் பச்சை கழுத்து புறாவை நினைவு கொண்டபடியே இருந்தான். சில வேளைகளில் அவன் நினைவில் வீட்டுப்பசுவின் கழுத்துமணி சப்தம் கூடக் கேட்கும். அடுப்பில் தாளிக்கும் மணம் கூட நாசியைத் தொடும். படியில் கிடந்த மனைவியின் செருப்பில் ஒட்டியிருந்த சேறு கூடத் துல்லியமாகத் தெரியும். இவ்வளவு ஏன் உறங்கும் குழந்தைகளின் சீரான மூச்சொலி கூட …

குறுங்கதை-11 போர்வீரனின் சூரியன். Read More »

வேண்டுகோள்

எனது புத்தக வெளியீடுகள்,  இலக்கிய நிகழ்ச்சிகள், இணையதளம், பேருரைகளுக்காக எப்போதும் கைப்பணத்தை தான் செலவழித்து வருகிறேன். மிக அரிதாக சில நண்பர்கள் உதவி செய்வார்கள்.  அதுவும் கடந்த மூன்று ஆண்டுகளாக கிடைக்கவில்லை.  அதைப் பற்றி நான் பெரிதாக  கவலைப்படவில்லை. எழுத்தை மட்டுமே நம்பி வாழுகிறவன் என்பதால் எனது கஷ்டங்கள் நான் உருவாக்கிக் கொண்டவை என்று புரிந்தே இருக்கிறேன். தற்போது தேசாந்திரி Youtube சேனலில் சென்னையும் நானும் என்ற வீடியோத் தொடரைப் பகிர்ந்து வருகிறேன். 12 பகுதிகளாக இதன் முதற்சீசன் …

வேண்டுகோள் Read More »