குறுங்கதை -19 பிரார்த்திக்கும் ரோபோ.
அந்த இளைஞன் அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் ஒரு இயந்திரத்தை உருவாக்கியிருந்தான். அது ஒரு வகை ரோபோ. வேலை வேலை என்று பரபரப்பாக ஒடிக் கொண்டேயிருந்த காரணத்தால் அவனுக்குப் பிரார்த்தனை செய்ய நேரமில்லை. ஆகவே அவன் பொருட்டான பிரார்த்தனைகளைச் செய்யப் புதிய ரோபோவை உருவாக்கியிருந்தான். சின்ன வயதில் கடவுள் தன் வீட்டுப் பூஜையறையில் வசிப்பதாகவே நம்பிக் கொண்டிருந்தான். வயது வளர வளர அவன் கடவுளிடமிருந்து விலகிப் போனான்.. கல்லூரி வயதில் பிரார்த்தனை என்பது இயலாமைகளின் பட்டியல் என்று தோன்றியது. …