admin

குறுங்கதை -19 பிரார்த்திக்கும் ரோபோ.

அந்த இளைஞன் அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் ஒரு இயந்திரத்தை உருவாக்கியிருந்தான். அது ஒரு வகை ரோபோ. வேலை வேலை என்று பரபரப்பாக ஒடிக் கொண்டேயிருந்த காரணத்தால் அவனுக்குப் பிரார்த்தனை செய்ய நேரமில்லை. ஆகவே அவன் பொருட்டான பிரார்த்தனைகளைச் செய்யப் புதிய ரோபோவை உருவாக்கியிருந்தான். சின்ன வயதில் கடவுள் தன் வீட்டுப் பூஜையறையில் வசிப்பதாகவே நம்பிக் கொண்டிருந்தான். வயது வளர வளர அவன் கடவுளிடமிருந்து விலகிப் போனான்.. கல்லூரி வயதில் பிரார்த்தனை என்பது இயலாமைகளின் பட்டியல் என்று தோன்றியது. …

குறுங்கதை -19 பிரார்த்திக்கும் ரோபோ. Read More »

பிளாபர்ட்டின் குறிப்புகள்.

“Art is nothing but this strange translation of thought by form.” – Gustave Flaubert பிரெஞ்சு எழுத்தாளர் குஸ்தாவ் பிளாபர்ட் (Gustave Flaubert)  எழுதிய Intimate Notebook என்ற குறிப்பேட்டினை வாசித்தேன். அவரது மருமகள் கரோலின் மூலம் இந்தக் குறிப்பேடு கண்டறியப்பட்டு வெளியாகியுள்ளது. 1856 ஆம் ஆண்டு பிளாபர்ட் எழுதிய மேடம் பவாரி நாவல்  உலகப்புகழ்பெற்றது. இந்த நாவலின் பாதிப்பிலிருந்தே டால்ஸ்டாய் தனது அன்னாகரீனினா நாவலை எழுதினார். மேடம் பவாரி ஐந்து முறை படமாக்கப்பட்டிருக்கிறது. பிளாபர்ட் உடலின்பத்தைக் …

பிளாபர்ட்டின் குறிப்புகள். Read More »

குறுங்கதை -18 சிறைச்சாலை மலர்கள்

அவனைத் திருடன் என்று குற்றம்சாட்டி சிறையில் அடைத்தார்கள். ஆனால் அவனது தோற்றம் சாதுவைப் போலிருந்தது. மெலிந்த உருவம் கொண்டிருந்தான். யானையின் கண்களைப் போன்ற கூர்மையான பார்வை. சுவருடன் ரகசியம் பேசுகிறவன் போல சிறைச்சாலையின் சுவரைப் பார்த்து பகலெல்லாம் அமர்ந்திருந்தான். காவலாளிகள் சில நேரம் அவனிடம் கேள்வி கேட்கும் போது கூட விரல்களால் காற்றில் எழுதியே பதில் தருவான். அந்தச் சிறைச்சாலை ஒரு தீவிலிருந்தது. சவப்பெட்டியைப் போலச் சிறியதாக இருந்த அவனது சிறையில் எலி செத்துக்கிடப்பது போல ஒரு …

குறுங்கதை -18 சிறைச்சாலை மலர்கள் Read More »

மோலியரின் நாயகன்.

பிரெஞ்சு சினிமாவில் சின்னஞ்சிறிய கதையை வைத்துக் கொண்டு எத்தனை அழகான படத்தை உருவாக்கிவிடுகிறார்கள். நேற்றிரவு CYCLING WITH MOLIÈRE என்ற பிரெஞ்சுப் படத்தைப் பார்த்தேன். பிலிப் லு குவே இயக்கியது.  இரண்டு நடிகர்கள் ஒன்றுகூடி மோலியரின் புகழ்பெற்ற நாடகம் ஒன்றுக்காக ஒத்திகை பார்ப்பது தான் கதை. இதை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமான படத்தைத் தந்திருக்கிறார்கள் கார்த்தியே, பிரான்ஸ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நடிகன். அவனது Dr. Morange தொலைக்காட்சித் தொடருக்கு பெரும் வரவேற்பு. போகுமிடமெல்லாம் ரசிகர்கள் அவனைச் சூழ்ந்து …

மோலியரின் நாயகன். Read More »

குறுங்கதை 17 அந்தச் சிறுவன்

சக்கரவர்த்தியின் புதிய உடைகள் என்ற கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தினமும் புதுப்புது மோஸ்தரில் ஆடைகளை அணிய ஆசை கொண்ட அரசனுக்குப் பாடம் கற்பிக்க இரண்டு நெசவாளிகள் அரூப அடை நெய்து தருவதாக வாக்களித்தார்கள். அதன்படியே அவர்கள் நெய்து தந்த கண்ணுக்குப் புலப்படாத ஆடையை அணிந்து கொண்ட சக்கரவர்த்தி தெருவில் ஊர்வலம் வந்த போது ஊரே கண்ணுக்குப் புலப்படாத உடையைப் பாராட்டியது. ஆனால். ஒரு சிறுவன் மட்டும், “சக்கரவர்த்தி ஆடையே அணியவில்லை. அம்மணமாக இருக்கிறார்“ என்று உண்மையை உரத்துச் சொன்னான். …

குறுங்கதை 17 அந்தச் சிறுவன் Read More »

நவீன சிற்பக்கலை

சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும் என்ற நூலின் அறிமுக விழா மார்ச் 3 (03.03.20) செவ்வாய்கிழமை மாலை சென்னை எஸ்பிளனேட் ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெறுகிறது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி குறித்து உரையாற்றுகிறேன் கும்பகோணத்தில் வசித்து வரும் சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி உலகப்புகழ்பெற்றவர்.  கும்பகோணம் ஒவியக்கல்லூரியில் சிற்பத்துறையில் பேராசிரியராக பணியாற்றியவர். மரபும் நவீனமும் ஒன்று சேர்ந்த புதிய கலைப்படைப்புகளை உருவாக்கி வருபவர்.  இவரது படைப்புகள் குறித்து கலைவிமர்சகர் தேனுகா சிறப்பாக எழுதியிருக்கிறார். •• …

நவீன சிற்பக்கலை Read More »

குறுங்கதை 16 நினைவுகளின் குடுவை

விண்ணாரம் என்ற அந்த மலை மிக உயரமானது. பதினெட்டு வயது இளைஞனாக இருந்த அவன் உற்சாகமாக மலையேறினான். கடினமான பாதையில் கூட அவன் சோர்ந்து போகவில்லை. மலையின் உச்சிக்கு வந்து நின்றபோது மலை அவனிடம் கேட்டது. “எதற்காக இங்கே வந்திருக்கிறாய்“ “மனது நிறையச் சந்தோஷம் நிரம்பியிருக்கிறது. அதைக் கொடுத்துப்போகவே வந்திருக்கிறேன்“ என்றான் இளைஞன் “உன் சந்தோஷத்தைக் கொடு, அதை மேகங்களாக்கி வானில் மிதக்க விடுகிறேன்“ என்றது மலை. இளைஞன் அப்படியே செய்தான். அந்த இளைஞனுக்குச் சில ஆண்டுகளில் …

குறுங்கதை 16 நினைவுகளின் குடுவை Read More »

வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது பெறும் கே.வி .ஜெயஸ்ரீக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துக்கள் மனோஜ் குரூர் எழுதிய நிலம்பூத்து மலர்ந்த நாள் நாவலின் மொழிபெயர்ப்பிற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உறுதுணையாக இருந்த  நண்பர் பவா மற்றும் ஷைலஜாவிற்கு பாராட்டுகள்

குறுங்கதை 15 உடைவாளின் பாடல்

யுத்தம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போர்வீரனுக்குத் தனது உடைவாள் ஏதோ முணுமுணுப்பது போன்ற சப்தம் கேட்டது. சொல்வதற்கு உடைவாளிற்கு என்ன இருக்கப்போகிறது என அவன் கண்டுகொள்ளவில்லை. ஆற்றைக் கடப்பதற்காக அவன் படகிற்குக் காத்திருந்த போது அவனது உடைவாள் பாடத்துவங்கியது. மெல்லிய குரலில் வென்ற நிலத்தை,கொன்ற மனிதர்களைப் பற்றிய பெருமைகளைப் பாட ஆரம்பித்தது . உடைவாள் கூடப் பெருமை பேசுகிறதே என வியந்தபடியே அந்தப்பாடலை ரசித்தான் போர்வீரன். ஆற்றினைக் கடந்து மறுகரைக்குப் போன போது உடைவாள் சப்தமாக …

குறுங்கதை 15 உடைவாளின் பாடல் Read More »