admin

இலக்கியச் சிந்தனை விருது

2019ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஆனந்த விகடனில் வெளியான எனது சிற்றிதழ் கதையை  இலக்கியச் சிந்தனை தேர்வு செய்துள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா ஏப்ரல் 14 அன்று நடைபெறவுள்ளது.  இந்த தகவலை இலக்கியச் சிந்தனை அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ப.லட்சுமணன் தெரிவித்துள்ளார். சிறுகதையை வெளியிட்ட ஆனந்தவிகடனுக்கும் விருது அளிக்கும் இலக்கியச் சிந்தனைக்கும் மிகுந்த நன்றி. எனது புதிய சிறுகதைத் தொகுதியான போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் தொகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது.

குறுங்கதை-11 போர்வீரனின் சூரியன்.

யுத்தமுனையிலிருந்த இளம் போர்வீரன் ஒவ்வொரு நாளும் தனது மனைவியை, பிள்ளைகளை, தாயை, சொந்த வீட்டினை, வீட்டுச் சுவரில் ஓடியாடும் அணிலை, எப்போதாவது வந்து போகும் பச்சை கழுத்து புறாவை நினைவு கொண்டபடியே இருந்தான். சில வேளைகளில் அவன் நினைவில் வீட்டுப்பசுவின் கழுத்துமணி சப்தம் கூடக் கேட்கும். அடுப்பில் தாளிக்கும் மணம் கூட நாசியைத் தொடும். படியில் கிடந்த மனைவியின் செருப்பில் ஒட்டியிருந்த சேறு கூடத் துல்லியமாகத் தெரியும். இவ்வளவு ஏன் உறங்கும் குழந்தைகளின் சீரான மூச்சொலி கூட …

குறுங்கதை-11 போர்வீரனின் சூரியன். Read More »

வேண்டுகோள்

எனது புத்தக வெளியீடுகள்,  இலக்கிய நிகழ்ச்சிகள், இணையதளம், பேருரைகளுக்காக எப்போதும் கைப்பணத்தை தான் செலவழித்து வருகிறேன். மிக அரிதாக சில நண்பர்கள் உதவி செய்வார்கள்.  அதுவும் கடந்த மூன்று ஆண்டுகளாக கிடைக்கவில்லை.  அதைப் பற்றி நான் பெரிதாக  கவலைப்படவில்லை. எழுத்தை மட்டுமே நம்பி வாழுகிறவன் என்பதால் எனது கஷ்டங்கள் நான் உருவாக்கிக் கொண்டவை என்று புரிந்தே இருக்கிறேன். தற்போது தேசாந்திரி Youtube சேனலில் சென்னையும் நானும் என்ற வீடியோத் தொடரைப் பகிர்ந்து வருகிறேன். 12 பகுதிகளாக இதன் முதற்சீசன் …

வேண்டுகோள் Read More »

வீட்டிற்கு வந்த பறவை

World Literature Today என்ற இதழைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சமகால உலக இலக்கியப்போக்குகளை அறிந்து கொள்ளவும் சிறந்த மொழியாக்கங்களை வாசிக்கவும் உதவும் பத்திரிக்கை. இந்தியாவிற்கான இதன் ஆண்டுச் சந்தா 150 டாலர். இதன் பழைய இதழில் ஃபக்ரி காவர்(Fakhri Kawar) என்ற ஜோர்டான் எழுத்தாளரின் A Bird in My House என்ற கதையை வாசித்தேன். அற்புதம். மிக வித்தியாசமான கதை. இக்கதையை வாசித்தபிறகு ஃபக்ரி காவரின் புத்தகங்களைத் தேட ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் ஒன்றிரண்டே வாசிக்கக் கிடைக்கின்றன. …

வீட்டிற்கு வந்த பறவை Read More »

மும்பை இலக்கிய விழா

கடந்த மூன்று நாட்களாக மும்பை கேட்வே லிட்பெஸ்டிவலில் கலந்து கொண்டிருந்தேன். இந்தியா முழுவதுமிருந்து முக்கிய எழுத்தாளர்கள் பலரும் வந்திருந்தார்கள். இந்திய இலக்கியத்தின் எதிர்காலம் குறித்து நான்கு முக்கிய அமர்வுகள் நடைபெற்றன. NCPA அரங்கம் மிக அழகானது. பல்வேறு நாடக அரங்குகளை ஒன்றாகக் கொண்ட வளாகமது. அமர்வில் விவாதித்ததை விடவும் அரங்கிற்கு வெளியே எழுத்தாளர்களுடன் கூடிப் பேசி ஒன்றாக நாளைக் கழித்தது மகிழ்ச்சியாக இருந்தது. நிகழ்விற்கு வந்திருந்த இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனை சந்தித்து உரையாடினேன். மலையாள எழுத்தாளர் உண்ணி, …

மும்பை இலக்கிய விழா Read More »

குறுங்கதை-10 சண்டைச்சேவல்

அவனது சண்டைச்சேவல் தோற்றதேயில்லை. அவன் சேவலைச் சண்டைக்குப் பழகுவதற்கு  முன்பாக அது ஒரு சேவல் இல்லை என்பதை உணரச் செய்வான். இதற்காக அதிகாலையில் சேவல் தன்னை அறியாமல் கூவும் போது சிறிய மூங்கில் கழியால் அடித்து அது கூவுவதைக் கட்டுப்படுத்துவான். நாட்படச் சேவல் கூவுவதை நிறுத்திக் கொண்டுவிடும். பின்பு சேவலை இன்னொரு சேவலுடன் சண்டைக்குப் பழக்குவதற்குப் பதிலாகத் தண்ணீரை பீய்ச்சியடித்து சேவலை அதோடு சண்டையிடச் செய்வான். தண்ணீர் எந்தத் திசையிலிருந்து பீறிடும் எனத் தெரியாமலும் நனைந்து கண்ணை …

குறுங்கதை-10 சண்டைச்சேவல் Read More »

ஓமானில்

சோலை வாசகர் வட்டம், நிஸ்வா-  ஓமானில் எனது படைப்புலகம் குறித்த இலக்கியக் கூட்டம் நடைபெறுகிறது. நிகழ்வை ஒருங்கிணைப்பவர்களுக்கும் கலந்து கொண்டு உரையாற்றுபவர்களுக்கும் நன்றி •• தொடர்புக்கு +96896630871

காதலின் நினைவில்

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை என்ற எனது புதிய  நாவலைப் பற்றி  அழகான விமர்சனத்தை திவாகர் ஜெ எழுதியிருக்கிறார். அவருக்கு எனது நன்றி •• காதலின் நினைவில் திவாகர். ஜெ உங்களின் பள்ளிப் பருவக் காலத்தில் நீங்கள் கோடை விடுமுறைக்கு உறவினர் வீடுகளுக்கு சென்றதுண்டா? நிச்சயம் சென்றிருப்போம். அதுவும் பெரும்பாலும் தாத்தா – பாட்டி வீட்டிற்கோ அல்லது மாமா வீட்டிற்கோ தான் சென்றிருப்போம் அல்லவா? இக்கதையும் அப்படியொரு கோடை விடுமுறையில் தனது தாத்தா வீட்டிற்குச் செல்லும் ஒருவனது …

காதலின் நினைவில் Read More »