குறுங்கதை- 9 அம்மாவின் புத்தகம்
திருமணமாகி வந்த போது தனது வீட்டிலிருந்து அம்மா அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தாள். ஆப்த நாதரின் கதைகள் என்ற அந்தப் புத்தகத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் அம்மா படித்துக் கொண்டிருந்தாள். அட்டை கிழிந்து காகிதங்கள் பழுத்து உதிரும் நிலைக்கு புத்தகம் வந்தபோதும் அதை வாசிப்பதை நிறுத்தவில்லை. ஒரு புத்தகத்தை எத்தனை முறை படிக்க முடியும். அப்படி என்னதான் அப்புத்தகத்தில் இருக்கிறது. அம்மா புத்தகம் படிக்கும் போது அவள் முகத்தில் எத்தனையோ உணர்ச்சிகள் வெளிப்படும். வீட்டுவேலைகள் செய்து கொண்டிருக்கும் …