admin

குறுங்கதை- 9 அம்மாவின் புத்தகம்

திருமணமாகி வந்த போது தனது வீட்டிலிருந்து அம்மா அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தாள். ஆப்த நாதரின் கதைகள் என்ற அந்தப் புத்தகத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் அம்மா படித்துக் கொண்டிருந்தாள். அட்டை கிழிந்து காகிதங்கள் பழுத்து உதிரும் நிலைக்கு புத்தகம் வந்தபோதும் அதை வாசிப்பதை நிறுத்தவில்லை. ஒரு புத்தகத்தை எத்தனை முறை படிக்க முடியும். அப்படி என்னதான் அப்புத்தகத்தில் இருக்கிறது. அம்மா புத்தகம் படிக்கும் போது அவள் முகத்தில் எத்தனையோ உணர்ச்சிகள் வெளிப்படும். வீட்டுவேலைகள் செய்து கொண்டிருக்கும் …

குறுங்கதை- 9 அம்மாவின் புத்தகம் Read More »

குறுங்கதை- 8 கனவின் நடனம்

அந்த நகரில் எல்லோரும் கனவில் நடனமாடினார்கள். விடிந்து எழுந்தவுடன் தாங்கள் கனவில் ஆடிய நடனத்தைப் பற்றி வெட்கத்துடன், பெருமிதத்துடன், கூச்சத்துடன் பகிர்ந்து கொண்டார்கள். ஒரு இளம் பெண் சொன்னாள். நான் “நீர்க்குமிழி வானில் பறப்பது போல நடனமாடினேன்“. ஒரு இளைஞன் சொன்னான் “பாய்ந்தோடும் குதிரையின் வேகம் போலிருந்தது எனது நடனம்“. ஒரு முதியவர் சொன்னார் “நதிக்கரையோர நாணலின் அசைவு போன்றிருந்தது எனது நடனம்“. வீட்டு வேலைக்காரப் பெண் சொன்னாள் “காற்றில் ஈரத்துணிகள் உலர்வது போலிருந்தது எனது ஆட்டம்“. …

குறுங்கதை- 8 கனவின் நடனம் Read More »

தேனீக்களை அழைப்பவள்.

இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப் படங்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரும்பான்மை படங்கள் ஏமாற்றமே அளித்தன. எந்தப் படத்திற்கு விருது கிடைக்கும் என்பதை எளிதாக கண்டறிய முடிந்தது. இவை வழக்கமான ஹாலிவுட் சந்தைக்கான படங்கள் என்பதைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் கிடையாது. தொழில்நுட்ப ரீதியாக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட காரணத்தால் அவை மிகச்சிறந்த படம் போலத் தோற்றமளிக்கின்றன. International Feature Film, Feature Documentary என இரண்டு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஹனி லேண்ட் …

தேனீக்களை அழைப்பவள். Read More »

மாணிக்க மூக்குத்தி

இன்று காலையிலிருந்து மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு மதுரையிலே முகூர்த்த நாள்.. என்ற திரைப்படப் பாடலை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். சில பாடல்கள் அப்படித் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கும். எதனால் என்று விளக்க முடியாது. பாடலின் வழியே மனது எதையெதையோ நினைவு கொள்கிறது. இயக்குநர் பி. மாதவன் இயக்கி தயாரித்த படம் “முகூர்த்த நாள். அப்படத்தில் தான் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன் பாடலை எழுதியிருக்கிறார். பி. சுசீலா அற்புதமாகப் பாடியிருக்கிறார். பாடலைத் தனியே கேட்கையில் …

மாணிக்க மூக்குத்தி Read More »

ஹொகுசாயின் மகள்.

Miss Hokusai என்ற அனிமேஷன் படத்தைப் பார்த்தேன். ஜப்பானின் புகழ்பெற்ற ஓவியரான கட்சுஷிகா ஹொகுசாயின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை அவரது மகள் ஓயியின் பார்வையில் விவரித்திருக்கிறார்கள். ஹொகுசாய் குறித்து ஜப்பானில் வெளியான கறுப்பு வெள்ளை திரைப்படம் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். ஹொகுசாயின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஜப்பானுக்குச் சென்ற போது நேரிலே பார்த்திருக்கிறேன். இந்த அனிமேஷன் படத்தின் தனிச்சிறப்பு அவரது ஓவியங்களை அப்படியே மறு உருவாக்கம் செய்து காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அது எளிதான வேலையில்லை. ஒட்டு மொத்த படமும் ஹொகுசாய் …

ஹொகுசாயின் மகள். Read More »

குறுங்கதை -7 சாலை ஓவியன்

சாலையில் கரித்துண்டுகளைக் கொண்டு ஓவியம் வரையும் ஒருவனிருந்தான். அவன் தினமும் பின்னிரவில் யாருமற்ற சாலையில் அமர்ந்தபடியே ஓவியம் வரைந்து கொண்டிருப்பான். மற்ற சாலை ஓவியர்களைப் போலக் கடவுள் உருவத்தை அவன் வரைவதில்லை. மாறாகத் தாயும் சேயுமாக இருவரை தான் வரைவான். ஒவ்வொரு நாளும் அந்தத் தாயின் முகம் மாறிக் கொண்டேயிருக்கும். சில சமயம் அந்த முகத்தில் தூய மகிழ்ச்சி ததும்பும். சில வேளை சோகம் படிந்ததாகக் காணப்படும். பெரும்பான்மை நேரம் வெறித்த பார்வை கொண்ட முகமாகயிருக்கும். ஆனால் …

குறுங்கதை -7 சாலை ஓவியன் Read More »

மும்பை

மும்பை Gateway Litfest 2020 விழாவில் கலந்து கொள்கிறேன். இதற்காக பிப்ரவரி 14 முதல் 16 வரை மும்பையில் இருக்கிறேன். விருப்பமான நண்பர்கள் என்னைச் சந்திக்கலாம்.

குறுங்கதை -6 பச்சைக் காதுள்ள முயல்

மலையடிவாரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மருதன் எப்போதும் வேங்கை மரத்தடியில் உட்கார்ந்து கொள்வான். மேகங்கள் கடந்து போவதை வேடிக்கை பார்ப்பது தான் அவனது பொழுதுபோக்கு. சில நேரங்களில் ஆடுகளுடன் பேசிக் கொண்டிருப்பான். மருதனுக்கென யாருமில்லை. இந்த ஆடுகளும் கூட அவனுக்குச் சொந்தமானவையில்லை. நல்லான் குடும்பத்துக்குச் சொந்தமான ஆடுகளை மேய்ப்பவனாக இருந்தான். தான் எதற்காக வாழ்கிறோம். ஏன் தன்னை வாழ்க்கை இப்படியிருக்கிறது எனச் சில நேரம் சலித்துக் கொள்வான். ஆனால் இதிலிருந்து விடுபட அவனுக்கு வழிதெரியவில்லை ஒரு நாள் …

குறுங்கதை -6 பச்சைக் காதுள்ள முயல் Read More »

குறுங்கதை- 5 எவரது கண்ணீர்

திருமண வீட்டில் அந்த முதியவரைக் கண்டேன். திருமண மேடையைப் பார்த்தவாறு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். எண்பது வயதைத் தாண்டிய தோற்றம். கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. வீங்கிய பாதங்கள். பட்டு வேஷ்டியைத் தளர்வாகக் கட்டியிருந்தார். வேஷ்டி விலகி தொடை தெரிந்தது. சிறுவர்கள் அணிவது போலக் காலர் இல்லாத  சட்டை. மணமகளின் தாத்தா என்றார்கள். அவரது கழுத்து ஒரு பக்கமாகச் சாய்ந்திருந்தது. அவர் பேசும் போது கிணற்றுக்குள்ளிருந்து சப்தம் வருவது போலத் தெளிவற்றுக் கேட்டது. வீட்டில் படுக்கையிலே கிடப்பவர் …

குறுங்கதை- 5 எவரது கண்ணீர் Read More »