புத்தகத் திருவிழா -3
புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கில் நிறைய வாசகர்களைச் சந்தித்தேன். அவர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் தீராத நன்றிக்குரியது.
புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கில் நிறைய வாசகர்களைச் சந்தித்தேன். அவர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் தீராத நன்றிக்குரியது.
எனது மகன் ஹரிபிரசாத் இயக்கிய மை டியர் செகாவ்- குறும்படம் சென்னை புத்தகத் திருவிழா அரங்கில் 16 ஜனவரி வியாழன் மாலை 6 மணிக்கு திரையிடப்படவுள்ளது. குறும்படங்களைத் திரையிடுவதற்காக புத்தக கண்காட்சி சிறப்பு அரங்கு ஒன்றை அமைத்துள்ளது. அங்கே இந்தக் குறும்படம் திரையிடப்படுகிறது. இந் நிகழ்வில் அனைவரும் பங்குபெற்று சிறப்பிக்க வேண்டுமென அழைக்கிறேன்
சென்னை புத்தகத் திருவிழா இன்று மாலை துவங்குகிறது. தேசாந்திரி அரங்கு எண் 396 & 397 தயாராகிவிட்டது. ஜனவரி 21 வரை எல்லா நாட்களும் புத்தகத் திருவிழாவிற்கு வருவேன். விருப்பமானவர்கள் தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம்.
சுருக்கமான தென் இந்திய வரலாறு : நொபோரு கராஷிமா தமிழில் முனைவர் ப . சண்முகம். நொபோரு கராஷிமா தமிழக வரலாற்றைச் சிறப்பாக ஆராய்ந்து வரும் ஜப்பானிய வரலாற்று ஆய்வாளர். இவர் தென்னிந்திய வரலாற்றைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆராய்ந்து விரிவாக எழுதியிருக்கிறார். A concise History of South India: Issues and interpretations. என்னும் ஆங்கில நூலின் மொழியாக்கம் இந்நூல். அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம், இதனை வெளியிட்டுள்ளது.
எழுதாப் பயணம் ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் ஆட்டிசம் பாதிப்புக் கொண்ட கனி என்ற தனது மகனை வளர்ப்பதிலும் கல்வி நிலையத்திற்கு அனுப்பிப் படிக்க வைப்பதிலும் அவரது அன்னை லக்ஷ்மி பாலகிருஷ்ணன் பட்ட கஷ்டங்களையும் படிப்பினைகளையும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார். இது ஒரு நிகரற்ற வாழ்க்கை சித்திரம். ஆங்கிலத்தில் அருண் ஷோரி எழுதிய Does He Know A Mothers Heart : How Suffering Refutes வாசித்தபோது கலங்கிப்போனேன். அதைவிடச் சிறப்பாகவே லக்ஷ்மி …
புன்னகைக்கும் பிரபஞ்சம் தேர்வு செய்யப்பட்ட கபீரின் கவிதைகளின் தொகுப்பு புன்னகைக்கும் பிரபஞ்சம் செங்கதிர் இதனைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கபீரின் பாடல்கள் வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக மக்களால் பாடப்படுபவை. எளிய மொழியில் நேரடியாக வெளிப்படும் கபீர் பாடலின். அபாரமான படிமங்கள், உவமைகள் வியப்பூட்டுகின்றன. ரேமண்ட் கார்வர். கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் போன்ற படைப்பாகளின் சிறுகதைகளைச் சிறப்பாக மொழியாக்கம் செய்தவர் செங்கதிர்.
எனது புதிய நாவல் புத்தகத் திருவிழா தேசாந்திரி பதிப்பகம் அரங்கு எண் 396 & 397ல் கிடைக்கும்
ஓவியரும் சிற்பியுமான எஸ். தனபாலின் சுயசரிதை ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்து பெரும்பாராட்டினைப் பெற்றது. அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து எடிட் செய்து, தேவையான புகைப்படங்களைத் தேடிக்கண்டுபிடித்து கிருஷ்ணபிரபு ‘ஒரு சிற்பியின் சுயசரிதை!’ எனத் தனி நூலாகக் கொண்டு வந்திருக்கிறார். இந்நூலை சிறுவாணி வாசகர் மையத்துடன் இணைந்து காலச்சுவடு பதிப்பகம் தனபால் சென்னை ஒவியக்கல்லூரியில் பயில்வதற்குச் சென்ற நாட்கள். ராய் சௌத்ரியோடு அவருக்கு ஏற்பட்ட நட்பு. சிற்பத்துறையின் மீது கொண்ட ஈடுபாடு. அவரோடு படித்த ஒவியர்கள், கல்லூரி …
நைஜீரியா எழுத்தாளர் அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் எழுதிய Season of Crimson Blossoms நாவலின் தமிழாக்கமே தீக்கொன்றை மலரும் பருவம் நைஜீரியாவில் 2015ல் வெளியான இந்நாவலை லதா அருணாசலம் மொழியாக்கம் செய்திருக்கிறார். இவர் பல ஆண்டுகள் நைஜீரியாவில் வசித்தவர் என்பதால் நாவலின் நுட்பங்களை மிகச்சிறப்பாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஜீரோ டிகிரி பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது Season of Crimson Blossoms 2016 ஆம் ஆண்டிற்கான நைஜீரியாவின் உயரிய இலக்கிய விருதினை வென்றிருக்கிறது. நாவலின் கதை 2009 மற்றும் …