admin

காந்தியின் நிழலில்.

மாலதி செந்தூர் தெலுங்கு மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர். இவரது இதய நேத்ரி என்ற நாவல் தமிழில் இதய விழிகள் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதனைச் சாகித்திய அகாதெமி வெளியிட்டிருக்கிறது காந்தி யுகத்தை இத்தனை துல்லியமாக இதுவரை எந்த நாவலும் சித்தரித்ததில்லை. மிகவும் யதார்த்தமாக எழுதப்பட்ட நாவல். நேரடியாகவே கதை சொல்லப்படுகிறது. பல்வேறு அரசியல் செய்திகள் உரையாடலின் வழியே வெளிப்படுகின்றன. காந்தியின் தாக்கம் ஆந்திர மக்களிடம் எவ்வாறு இருந்தது என்பதை நாவல் அழுத்தமாக விவரிக்கிறது. பால்ய விவாகத்திற்கு எதிரான …

காந்தியின் நிழலில். Read More »

மித்ராவின் குற்றச்சாட்டுகள்.

கிருஷ்ணா ஸோப்தி ஞானபீடம் விருது பெற்ற இந்தி மொழி எழுத்தாளர். இவரது மித்ரோ மராஜனி என்ற நாவல் தமிழில் மித்ராவந்தி என வெளியாகியுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் இதை வெளியிட்டிருக்கிறார்கள். பெண்ணின் காமத்தையும் கூட்டுக்குடும்பத்தில் பெண் நடத்தப்படும் விதம் பற்றியும் மித்ராவந்தியில் ஸோப்தி சிறப்பாக எழுதியிருக்கிறார். மித்ராவந்தி என்ற பெண்ணின் கதாபாத்திரம் போல இந்திய இலக்கியத்தில் எவரும் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியதில்லை. அவள் வெளிப்படையாகத் தனது உடலின் வேட்கைகளை, காமத்தூண்டுதல்களைப் பேசுகிறாள். மற்றவர்கள் ரகசியமாக இன்பங்களை அடைந்து …

மித்ராவின் குற்றச்சாட்டுகள். Read More »

ஆவியின் பாடல்

டிசம்பர் இசைக்கச்சேரிகளில் எனக்குப் பிடித்தமான சில கச்சேரிகளுக்குச் செல்வது வழக்கம். என் மனைவி பெரும்பான்மை கச்சேரிகளுக்குப் போய் விடுவார். நாங்கள் நேற்று அருணா சாய்ராம் அவர்களின் கச்சேரி கேட்பதற்காகக் காமராஜர் அரங்கம் சென்றிருந்தோம். சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி அங்கே நடைபெறுகிறது. அரங்கினுள் நுழைய முடியாதபடி பெருந்திரளான கூட்டம். முன்பதிவு செய்திருந்த இருக்கைக்குப் போக முடியவில்லை. ஒரே தள்ளுமுள்ளு. நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமண் ஸ்ருதியினர் ஒழுங்காக எந்த ஏற்பாடும் செய்யவில்லை. நுழைவாயிலில் நின்ற காவலர்கள் ஆட்களைப் பிடித்துத் தள்ளிவிடவே …

ஆவியின் பாடல் Read More »

ஆங்கில நூல்கள்

டிசம்பர் 25 மாலை ரஷ்யக்கலாச்சார மையத்தில் நடைபெறும் எனது புத்தக வெளியீட்டு விழாவில்  மூன்று நூல்களின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகின்றன •• உறுபசி நாவலை பேராசிரியர் வெங்கடாசலம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் தேர்வு செய்யப்பட்ட 20 சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர்  P. ராம்கோபால் கிறுகிறுவானம் என்ற சிறார் நூலை மொழியாக்கம் செய்திருப்பவர் G. கீதா. மூன்று மொழிபெயர்ப்பாளர்களுக்கும் மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் •• 22.12.2019

செகாவ் குறும்படம்

என் மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள குறும்படமான மைடியர் செகாவ் புத்தாண்டு தினத்தன்று வெளியிடப்படுகிறது. தேசாந்திரி youtube சேனலில் இப்படத்தைக் காணலாம். https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg **

உடலில் தோன்றும் மலர்கள்.

She was off like a bird, bullet, or arrow, impelled by what desire, shot by whom, at what directed, who could say? – Virginia Woolf ** Vita and Virginia என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். ஆங்கில நாவலாசிரியை வர்ஜீனியா வுல்ஃப் (Virginia Woolf,) குறித்த திரைப்படமது. வர்ஜீனியா வுல்ஃப்பை பற்றி நினைக்கும் போதெல்லாம் ஏனோ மனதில் லியோ டால்ஸ்டாயின் அன்னாகரீனினா பிம்பம் வந்து போகிறது. வர்ஜீனியா வுல்ஃப்பின் …

உடலில் தோன்றும் மலர்கள். Read More »

சென்னையும் நானும் – 5

சென்னையைப் பற்றிய எனது நினைவுகளின் காணொளித் தொடரின் ஐந்தாம் பாகம் வெளியாகியுள்ளது. தேசாந்திரி யூடியூப் சேனலில் இதைக் காணலாம். இந்தத் தொடரை உருவாக்கி வருவது எனது மகன் ஹரிபிரசாத். ஒற்றை ஆளாக இந்த முயற்சியை முன்னெடுக்கிறான். இந்த உரைகளைக் கேட்கும் நண்பர்கள் உங்கள் கருத்துகளை அதில் பதிவு செய்யவும். அது ஹரி மேலும் உத்வேகமாகச் செயல்பட உதவும். இந்தக் காணொளித் தொடரை புதிய வாசகர்கள், நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். “Chennaiyum Nanum” – 5 https://youtu.be/YFaciBTqOBY

அழைப்பிதழ்

டிசம்பர் 25 மாலை ஆறுமணிக்கு சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ள எனது ஏழு புதிய நூல்களின் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ் அனைவரும் நிகழ்வில் பங்குபெற்று சிறப்பிக்க வேண்டுகிறேன் இந்த நிகழ்வில் எனது யாமம் நாவலின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியாக்கங்கள் வெளியாகின்றன. உறுபசி நாவல், எனது சிறுகதைகளின் தொகுப்பு, கிறுகிறுவானம் ஆகியவற்றின் ஆங்கில மொழியாக்கமும் வெளியாகின்றன. • 19.12.2019