admin

கோடுகளின் உயிரியக்கம்

அ.பெருமாள் சாந்தி நிகேதனில் பயின்ற ஓவியர். மதுரையில் வசித்து வந்த அவர் ஓவியக்கலை குறித்த சிறந்த புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவரது மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள புத்தகம் ஓவியக்கலை- நந்தலால் போஸ். பெருமாள்  1930லிருந்து 1938வரை சாந்திநிகேதனில் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை பயின்றார். பின்பு அதே சாந்திநிகேதனில் ஆசிரியராகவும், நூலகராகவும், அருங்காட்சியப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். தனது ஆசிரியரும் இந்தியாவின் பெருமைக்குரிய ஓவியருமான நந்தலால் போஸ் ஆற்றிய உரை மற்றும் அவரது கட்டுரைகளை பெருமாள் மொழியாக்கம் செய்திருக்கிறார் நந்தலால் போஸ் நவீன …

கோடுகளின் உயிரியக்கம் Read More »

தேசாந்திரி YouTube சேனலில்

சென்னையும் நானும் குறித்த புதிய  முன்னோட்டம் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோத் தொடர் தேசாந்திரி YouTube  சேனலில் வெள்ளிகிழமை  தோறும் வெளியாகும். தொடரைக் காணுவதற்கு தேசாந்திரி YouTube சேனலை  subscribe செய்து கொள்ளுங்கள். https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1 •• சென்னையும் நானும் முன்னோட்டம் 2 LINK https://youtu.be/s4oIeSnDSSE DESANTHIRI CHANNEL SUBSCRIPTION LINK https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1

பணமே சாட்சி

ஜப்பானியர்கள் சிங்கப்பூரினைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தியது குறித்த வரலாற்றை மீளாய்வு செய்து ஹேமா எழுதியுள்ள வாழைமர நோட்டு என்ற புத்தகத்தை வாசித்தேன். ஹேமாவின் முதல் புத்தகம் இதுவென்று அறிய நேர்ந்த போது வியப்பாக இருந்தது. மிகச் சிறப்பாக வரலாற்றை எழுதியிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த ஹேமா தனது பணியின் நிமித்தமாகத் தற்போது சிங்கப்பூரில் வசிக்கிறார். சிங்கப்பூரை ஏன் ஜப்பானியர்கள் தாக்கினார்கள். எவ்வாறு தாக்குதல் நடைபெற்றது என்பதைப் பற்றிய வரலாற்று உண்மைகளைத்  துல்லியமாக விவரித்திருக்கிறார். அத்துடன் சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பானிய …

பணமே சாட்சி Read More »

கோவையில்

எனது புதிய நாவலான ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை குறித்த கலந்துரையாடல்  கோவையில் நடைபெறவுள்ளது. வாசக சாலை நடத்தும் இந்த நிகழ்வு  டிசம்பர் 24 ஞாயிறு  மாலை பிஎஸ்ஜி மேலாண்மைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. வாசகர்கள், நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

மய்யழிக் கரையோரம்.

ஞாயிற்றுகிழமை மாலை மாஹி போயிருந்தேன். மய்யழி ஆற்றின் கரையிலுள்ள அழகான ஊர். கேரளாவினுள் இருந்தாலும் புதுச்சேரி யூனியனுடன் இணைந்த பகுதி. இங்கே தான் எழுத்தாளர் எம். முகுந்தன் வசிக்கிறார். அவர் பிரெஞ்சு தூதரகத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். முகுந்தனின் புகழ்பெற்ற நாவல் மய்யழிக் கரையோரம். இந் நாவலின் 30 முக்கிய நிகழ்வுகளை மாஹியிலுள்ள ஒரு பூங்காவில் புடைப்புச் சிற்பமாகச் செய்து வைத்திருக்கிறார்கள். அதைக் காணுவதற்காகவே சென்றிருந்தேன். மய்யழிக் கரையோரம் நாவல் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த மாஹியின் கதையில் …

மய்யழிக் கரையோரம். Read More »

கண்ணூர்

கேரள மாநிலம் கண்ணூரில் 16ம் மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறவுள்ள எழுத்தாளர் சங்க மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன். நாளை கண்ணூர் செல்கிறேன்.

சென்னையும் நானும்

நான் சென்னைக்கு வந்து 28 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எனது சென்னை  அனுபவங்களை  ஒரு வீடியோ தொடராக வெளியிட நினைக்கிறேன். தேசாந்திரி யூடியூப் சேனலில் இந்தத் தொடர் வாரம் ஒன்றாக வெளியாகவுள்ளது. இதில்  சென்னை வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களுடன் சந்தித்த எழுத்தாளர்கள், திரையுலக அனுபவம் மற்றும்  பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சென்னை குறித்து எழுதியது, பேசியது, சென்னையின் வரலாறு என யாவற்றையும் ஒருங்கிணைத்து உரையாற்றயிருக்கிறேன். இதன் முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது சென்னையும் நானும் முன்னோட்டம் https://youtu.be/70svcZnlR9U ••• …

சென்னையும் நானும் Read More »

101 கடிதங்கள்.

கனேடிய எழுத்தாளர் யான் மார்டெல் (yann martel) அந்நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பருக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு புத்தகத்தைப் பரிசாக அனுப்பி வைத்திருக்கிறார். இந்தப் புத்தகங்களுடன் இதை ஏன் படிக்க வேண்டும் என்பது குறித்த கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பியிருக்கிறார். அவர் அனுப்பிய கடிதங்களில் அந்த நூலின் எழுத்தாளர் பற்றியும், அப் புத்தகம் எவ்வளவு முக்கியமானது என்பது பற்றியும் சுருக்கமாக எடுத்துச் சொல்கிறார். ஒரு நாட்டின் பிரதமர் என்ன புத்தகங்களை வாசிக்கிறார், எந்தப் புத்தகங்கள் …

101 கடிதங்கள். Read More »

கோவையில்

நவம்பர் 14 வியாழன் மாலை கோவை ப்ரூக்பீல்ட் மாலில் உள்ள ஒடிஸி புத்தகக் கடையில் வாசகர் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் புத்தக வாசிப்பு குறித்து உரையாற்றுகிறேன். அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

வெண்ணிற நினைவுகள்

இந்து தமிழ்திசை நாளிதழில் புதிய தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். வெண்ணிற நினைவுகள் என்ற இந்தத் தொடர்  ஞாயிற்றுகிழமை தோறும் வெளியாகும். தமிழ் சினிமாவின் அறியப்படாத  விஷயங்களை முதன்மைப்படுத்தி இந்தத் தொடரை எழுதவுள்ளேன். இந்தத் தொடரை https://www.hindutamil.in/ ஆன்லைனிலும் வாசிக்கலாம். •••