அஞ்சலி
நண்பர் அருண்மொழியின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கூட எனது சிறுகதையை மையமாகக் கொண்ட நாடகம் ஒன்றை நிகழ்த்துவதாகச் சொல்லி அதைக் காணுவதற்காக அழைத்தார். வெளியூரில் இருக்கிறேன். வர இயலவில்லை என்றேன். தொலைப்பேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அருண்மொழியை இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். அவர் இயக்கிய காணி நிலம், ஏர் முனை போன்ற படங்கள் நிறையத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டுள்ளன. சினிமா பயிலரங்குகள் நிறைய நடத்தியிருக்கிறார். திரைப்படக் கல்லூரியில் ஆசிரியராகப் …