மறுபதிப்புகள்
தேசாந்திரி பதிப்பகம் அச்சில் இல்லாத எனது நூல்களின் மறுபதிப்பை சென்னை புத்தகக் கண்காட்சிக்காக வெளியிடுகிறது.
தேசாந்திரி பதிப்பகம் அச்சில் இல்லாத எனது நூல்களின் மறுபதிப்பை சென்னை புத்தகக் கண்காட்சிக்காக வெளியிடுகிறது.
சோலை வாசகர் வட்டம் சார்பில் நேற்று இக்கூட்டம் ஒமானில் நடைபெற்றுள்ளது. துணையெழுத்து குறித்து உரையாற்றியவர்களுக்கும் நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்தவர்களுக்கும் நன்றி ••
மதுரை வாசகர் வட்டம் சார்பில் இடக்கை நாவல் குறித்த விமர்சனக் கூட்டம் நடைபெறுகிறது இடக்கை நாவல் குறித்து உரையாற்றுபவர் : A. சண்முகநாதன். ஒருங்கிணைப்பு : பேராசிரியர் ஜி. ராமமூர்த்தி நாள் : 14.12.2019 சனிக்கிழமை நேரம்: காலை 11 மணி இடம் : மதுரை பிரம்ம கான சபா. மேலப் பெருமாள் மேஸ்திரி தெரு ( சென்னை சில்க்ஸ் அருகில்) மதுரை. அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி அழைக்கிறேன். ••
ஆஸ்கார் விருது பெற்ற குறும்படமான THE FANTASTIC FLYING BOOKS OF MR. MORRIS LESSMORE பார்த்தேன். புத்தகங்களின் முக்கியத்துவத்தை இதைவிடச் சிறப்பாக யாரும் சொல்லிவிட முடியாது. இணையத்தில் இந்தப்படம் காணக்கிடைக்கிறது. குழந்தைகள் பெரியவர் என அனைவரும் இந்தக் குறும்படத்தைக் காண வேண்டும். படத்தின் துவக்கத்தில் புத்தகத்தை நேசிக்கும் திரு. மோரிஸ் லெஸ்மோர் ஒரு ஹோட்டலின் பால்கனியில் அமர்ந்திருக்கிறார். அவருக்குப் புத்தகங்கள் தான் உலகம். சொற்கள் தான் துணை. ஒவ்வொரு நாளும் தனது வாழ்க்கை நிகழ்வுகளை அவர் …
சமகால உலக சினிமாவின் முக்கிய திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. அன்னாகரீனினா பற்றிய புதிய ரஷ்யத் திரைப்படம். வான்கோ பற்றிய திரைப்படம், மற்றும் எழுத்தாளர்கள் குறித்த பல்வேறு உலகத் திரைப்படங்களை விவரிக்கிறது இந்நூல். டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படவுள்ளது.
இலக்கிய ஆளுமைகள், புத்தகங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. இணையத்திலும், இலக்கிய இதழ்களிலும் வெளியான 24 கட்டுரைகளை உள்ளடக்கியது. ஒ.வி.விஜயன். அசோகன் செருவில். அஷ்டமூர்த்தி போன்ற மலையாளப் படைப்பாளிகள் குறித்த கட்டுரைகளும் இதில் உள்ளன. டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படவுள்ளது.
பிரெஞ்சு ஒவியரான க்ளாட் மோனே மற்றும் ஐரோப்பிய ஒவியர்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. ஒவியங்கள் குறித்த எனது கட்டுரைத் தொகுப்புகளின் தொடர்ச்சியாக இதை எழுதியிருக்கிறேன். இதில் ஒவியர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படங்களையும் அறிமுகம் செய்திருக்கிறேன். டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படவுள்ளது.
சமகால உலகக் கவிஞர்கள் குறித்து விகடன் தடம் இதழில் எழுதிய பத்தியின் தொகுப்பு. கவிஞர் தேவதச்சனும் சமயவேலும் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இந்நூல் சமகால உலகக் கவிதைகளை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான வழிகாட்டி. டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படவுள்ளது.
டிசம்பர் 25 புதன்கிழமை மாலை ஆறுமணிக்கு தேசாந்திரி பதிப்பகம் சார்பில் சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வினை முன்னிட்டு இத்தாலிய இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான இதாலோ கால்வினோ (Italo Calvino) குறித்து சிறப்புரை நிகழ்த்த இருக்கிறேன் புனைவின் புதிய சாத்தியங்களைத் தனது எழுத்துகளின் மூலம் உருவாக்கிக் காட்டியவர் கால்வினோ. இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. கால்வினோவின் புலப்படாத நகரங்கள் நாவல் தமிழில் சா. …
சென்னையும் நானும் தொடரின் மூன்றாவது பகுதி வெளியாகியுள்ளது இணைப்பு: Episode 3 link https://youtu.be/_h9uw328pq4