admin

சாத்தூர் கல்லூரியில்

நேற்று சாத்தூர் எஸ்.இராமசாமி நாயுடு  கல்லூரி தமிழ்த்துறை மற்றும் தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து நடத்திய இலக்கியவிழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன். கல்லூரியின் முதல்வர் டாக்டர். சே.கணேஷ்ராம் அவர்கள் தலைமை உரையாற்றினார். முன்னாள் மக்களவை உறுப்பினர் திரு.V.அழகிரிசாமி அவர்கள் முன்னிலை வகித்து  சிறப்பாகப் பேசினார். திரு.சந்திரகாந்தன் கல்லூரி மாணவ மாணவியருக்கான கலை இலக்கியப் போட்டிகளை அறிமுகம் செய்தார் இந்த நிகழ்வினை டாக்டர் அறம் ஏற்பாடு செய்திருந்தார். அவர் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் மகன்.  தந்தையைப் …

சாத்தூர் கல்லூரியில் Read More »

எழுத்தாளனுடன் வாழுவது

Living with  a Writer என்ற கட்டுரைத் தொகுப்பினை வாசித்தேன். எழுத்தாளனுடன் வாழ்வது குறித்துப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் மனைவி அல்லது கணவர் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். BBC TV series ‘Walking with Dinosaurs’ எனத் தலைப்பே பயமுறுத்துகிறதே என்று ஒரு கட்டுரையின் துவக்க வரியுள்ளது. நிஜம் தானே. எழுத்தாளனுடன் சேர்ந்து வாழுவது என்பது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையில் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பது போலாகும். எப்போது ஊஞ்சல் சொர்க்கத்தை நோக்கிச் செல்லும் எப்போது நரகத்தை நோக்கித் …

எழுத்தாளனுடன் வாழுவது Read More »

கல்லின் கனவு.

மைக்கேலாஞ்சலோ – இன்பினிடோ (Michelangelo-Infinito) என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தின் இயக்குனர் Emanuele Imbucci . மைக்கேலாஞ்சலோவாக நடித்திருப்பவர் Enrico Lo Verso. ஓவியர்களையும் சிற்பிகளையும் பற்றிய திரைப்படங்களை எப்படி இத்தனை கலை நேர்த்தியாக உருவாக்குகிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. தோற்றமும் உடையும் நடிப்பும் ஒளிப்பதிவும் அபாரம். இந்தத் திரைப்படம் மைக்கேலாஞ்சலோவின் முக்கியக் கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டதின் பின்புலத்தையும் அவரது காலகட்டத்தைச் சேர்ந்த சக கலைஞர்களையும், அதிகார நெருக்கடிகளையும் முதன்மைப்படுத்துகிறது. படத்தின் சட்டகம் அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மைக்கேலாஞ்சலோ கதையை …

கல்லின் கனவு. Read More »

ஒளியே துணை

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் செல்மா லாகர்லெவ், இவரது தேவமலர் மற்றும் மதகுரு ஆகிய நாவல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நாவல்களை க..நா.சு மொழிபெயர்த்திருக்கிறார். தேவமலர் எனக்கு மிகவும் பிடித்த நாவல். தேசாந்திரி பதிப்பகம் மூலம் இதை மறுபதிப்புச் செய்திருக்கிறேன் ஸ்காண்டிநேவிய இலக்கியத்தில் செல்மாவின் இடம் தனித்துவமானது. தொன்மங்கள், நாட்டுப்புறக்கதைகள், தேவதை கதைகள் என மண்ணிலிருந்து உருவான கதைகளின் சரட்டினைக் கொண்டு புதிய புனைவுலகை உருவாக்கியவர் செல்மா. இவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் …

ஒளியே துணை Read More »

போலி மகள்

பெரிமேஸன் துப்பறியும் போலி மகள் என்ற புத்தகத்தைப் பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். இந்நாவலைத் தமிழாக்கம் செய்தவர்கள் பெரிமேஸன் என்ற பெயரை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டு மற்ற எல்லாக் கதாபாத்திரங்களின் பெயர்களுக்கும் தாங்களே புதிய பெயர் கொடுத்திருக்கிறார்கள். இன்றைக்கு வெளியாகும் டப்பிங் படங்களைப் போன்ற டப்பிங் நாவல் போலும். நான்சி என்ற பெண்ணின் பெயரை யசோதா என மாற்றியிருக்கிறார்கள். ஸ்டீவ் என்ற கதாபாத்திரத்திற்குப் பெயர் மோகனசுந்தரம், ஜான் என்பதற்கு மல்லையா, மன்றோ என்பதற்குச் சங்குண்ணி மேனன். …

போலி மகள் Read More »

மீனின் பாடல்

உதிரும் இலைகளின் பாடல் என்ற தலைப்பில் சீனக்கவிதைகளை மொழியாக்கம் செய்து வெளியிட்ட ப. கல்பனா தற்போது மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில் எனக் கொரியக்கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். அவரும் புதுவையில் வசிக்கும் பேராசிரியர் பா. இரவிக்குமாரும் இணைந்து கொரியாவின் முக்கியக் கவிஞர்களின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள் .பரிசல் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. கொரியக்கவிஞரான கோ யுன் குறித்துத் தடம் இதழில் நான் விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன். அந்தக் கட்டுரை தங்களுக்கு ஒரு உந்துதலாக இருந்ததாக ரவிக்குமார் …

மீனின் பாடல் Read More »

பெருஞ்சுவரின் நிழல்

காணக் கிடைக்காத காட்சி என்பார்களே அது பிபிசி தயாரித்துள்ள – A Slow Odyssey: The Great Wall of China என்ற ஆவணப்படத்திற்குத் தான் பொருத்தமானது. வானில் பறந்தபடியே ஒட்டுமொத்த சீனப்பெருஞ்சுவரையும் கேமிரா வழியாக அங்குல அங்குலமாகக் காட்டுகிறார்கள். கூடவே சீனப்பெருஞ்சுவரின் வரலாற்றையும் விவரிக்கிறார்கள். அற்புதமான ஆவணப்படமிது. சீனப்பெருஞ்சுவரை எப்படிக் கட்டினார்கள் என்பதைப் பற்றி நிறையப் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஒரு ஆவணப்படம் போதும் அதன் முழுமையை நமக்குக் காட்டிவிடுகிறது. சீனப்பெருஞ்சுவர் ஒரு மன்னரால் …

பெருஞ்சுவரின் நிழல் Read More »

துறவியின் காதல்

ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவல் ஒரு இளைஞன் வீட்டிலிருந்து வெளியேறி துறவு வாழ்க்கையை நோக்கிப் போவதை விவரிக்கிறது. ஞானத்தைத் தேடும் சித்தார்த்தன் முடிவில் அதை எப்படி அடைகிறான் என்பதை ஹெஸ்ஸே அழகாக விவரித்திருக்கிறார். சித்தார்த்தா நாவலின் மறுபக்கம் போன்றதே நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான அனடோல் பிரான்ஸ்(anatole france) எழுதிய தாயிஸ் (THAIS) இந்நாவலை தாசியும் தபசியும் என்ற தலைப்பில் எஸ். சங்கரன் மொழி பெயர்த்திருக்கிறார். தபசி என்ற சொல்லை இன்று எவரும் பயன்படுத்துவதில்லை. தவம் …

துறவியின் காதல் Read More »

கும்னாமி

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் கடைசி நாட்களையும், அவர் விமான விபத்தில் இறந்து போனது உண்மை தானா என்பதையும் ஆராயும் விதமாகப் பெங்காலியில் கும்னாமி (Gumnaami) என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பாக அப்படத்தைப் பார்த்தேன். ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கிய இப்படம் நேதாஜியின் மரணம் குறித்து ஆராய உருவாக்கப்பட்ட முகர்ஜி கமிஷன் விசாரணையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் முதல் அரைமணி நேரம் கறுப்பு வெள்ளையில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை …

கும்னாமி Read More »