சென்னையும் நானும் – 1
சென்னையும் நானும் என்ற வீடியோ தொடரின் முதற்பகுதி இன்று வெளியாகியுள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இத் தொடர் வெளியாகும். தேசாந்திரி youtube சேனலில் இதைக் காணலாம் முதற்பகுதி : https://youtu.be/GFB_TvClSCQ 22/11/2019
சென்னையும் நானும் என்ற வீடியோ தொடரின் முதற்பகுதி இன்று வெளியாகியுள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இத் தொடர் வெளியாகும். தேசாந்திரி youtube சேனலில் இதைக் காணலாம் முதற்பகுதி : https://youtu.be/GFB_TvClSCQ 22/11/2019
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் வாழ்க்கையை விவரிக்கும் GABO: THE CREATION OF GABRIEL GARCIA MARQUEZ என்ற ஆவணப்படத்தினைப் பார்த்தேன். கொலம்பியாவின் வடபகுதியிலுள்ள அரகடகா என்ற சின்னஞ்சிறிய ஊரில் பிறந்து எவ்வாறு உலகப்புகழ் பெற்ற எழுத்தாளராக உருவானார் என்பதைப் படம் விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. மார்க்வெஸின் ஊருக்கு ரயில் வரும் காட்சியைக் காணும் போது அவரது செவ்வாய்க்கிழமை பகல் தூக்கம் என்ற கதை நினைவில் வந்து போனது. அரகடகா வாழைத்தோட்டங்கள் நிரம்பிய நிலப்பரப்பு. …
கோவை ஒடிஸி புத்தக நிறுவனம் சார்பில் நடைபெற்ற வாசகர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. புத்தகக் கடையினுள் உள்ள சிறிய இடம் என்பதால் நிறைய பேருக்கு இருக்கை போட முடியவில்லை. நின்று கொண்டே உரையைக்கேட்டார்கள். ஒரு மணி நேர உரையும் அதைத் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடலும் நடைபெற்றது. அதிகம் ஆங்கிலப் புத்தகங்களை விற்கும் ஒடிஸி போன்ற நிறுவனம் தமிழ் புத்தகங்களுக்குத் தனிப்பிரிவு அமைத்து சிறப்பு புத்தகக் கண்காட்சி நடத்துவது பாராட்டிற்குரிய விஷயம். 21.11.2019
அ.பெருமாள் சாந்தி நிகேதனில் பயின்ற ஓவியர். மதுரையில் வசித்து வந்த அவர் ஓவியக்கலை குறித்த சிறந்த புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவரது மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள புத்தகம் ஓவியக்கலை- நந்தலால் போஸ். பெருமாள் 1930லிருந்து 1938வரை சாந்திநிகேதனில் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை பயின்றார். பின்பு அதே சாந்திநிகேதனில் ஆசிரியராகவும், நூலகராகவும், அருங்காட்சியப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். தனது ஆசிரியரும் இந்தியாவின் பெருமைக்குரிய ஓவியருமான நந்தலால் போஸ் ஆற்றிய உரை மற்றும் அவரது கட்டுரைகளை பெருமாள் மொழியாக்கம் செய்திருக்கிறார் நந்தலால் போஸ் நவீன …
சென்னையும் நானும் குறித்த புதிய முன்னோட்டம் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோத் தொடர் தேசாந்திரி YouTube சேனலில் வெள்ளிகிழமை தோறும் வெளியாகும். தொடரைக் காணுவதற்கு தேசாந்திரி YouTube சேனலை subscribe செய்து கொள்ளுங்கள். https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1 •• சென்னையும் நானும் முன்னோட்டம் 2 LINK https://youtu.be/s4oIeSnDSSE DESANTHIRI CHANNEL SUBSCRIPTION LINK https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1
ஜப்பானியர்கள் சிங்கப்பூரினைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தியது குறித்த வரலாற்றை மீளாய்வு செய்து ஹேமா எழுதியுள்ள வாழைமர நோட்டு என்ற புத்தகத்தை வாசித்தேன். ஹேமாவின் முதல் புத்தகம் இதுவென்று அறிய நேர்ந்த போது வியப்பாக இருந்தது. மிகச் சிறப்பாக வரலாற்றை எழுதியிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த ஹேமா தனது பணியின் நிமித்தமாகத் தற்போது சிங்கப்பூரில் வசிக்கிறார். சிங்கப்பூரை ஏன் ஜப்பானியர்கள் தாக்கினார்கள். எவ்வாறு தாக்குதல் நடைபெற்றது என்பதைப் பற்றிய வரலாற்று உண்மைகளைத் துல்லியமாக விவரித்திருக்கிறார். அத்துடன் சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பானிய …
எனது புதிய நாவலான ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை குறித்த கலந்துரையாடல் கோவையில் நடைபெறவுள்ளது. வாசக சாலை நடத்தும் இந்த நிகழ்வு டிசம்பர் 24 ஞாயிறு மாலை பிஎஸ்ஜி மேலாண்மைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. வாசகர்கள், நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
ஞாயிற்றுகிழமை மாலை மாஹி போயிருந்தேன். மய்யழி ஆற்றின் கரையிலுள்ள அழகான ஊர். கேரளாவினுள் இருந்தாலும் புதுச்சேரி யூனியனுடன் இணைந்த பகுதி. இங்கே தான் எழுத்தாளர் எம். முகுந்தன் வசிக்கிறார். அவர் பிரெஞ்சு தூதரகத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். முகுந்தனின் புகழ்பெற்ற நாவல் மய்யழிக் கரையோரம். இந் நாவலின் 30 முக்கிய நிகழ்வுகளை மாஹியிலுள்ள ஒரு பூங்காவில் புடைப்புச் சிற்பமாகச் செய்து வைத்திருக்கிறார்கள். அதைக் காணுவதற்காகவே சென்றிருந்தேன். மய்யழிக் கரையோரம் நாவல் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த மாஹியின் கதையில் …
கேரள மாநிலம் கண்ணூரில் 16ம் மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறவுள்ள எழுத்தாளர் சங்க மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன். நாளை கண்ணூர் செல்கிறேன்.
நான் சென்னைக்கு வந்து 28 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எனது சென்னை அனுபவங்களை ஒரு வீடியோ தொடராக வெளியிட நினைக்கிறேன். தேசாந்திரி யூடியூப் சேனலில் இந்தத் தொடர் வாரம் ஒன்றாக வெளியாகவுள்ளது. இதில் சென்னை வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களுடன் சந்தித்த எழுத்தாளர்கள், திரையுலக அனுபவம் மற்றும் பல்வேறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சென்னை குறித்து எழுதியது, பேசியது, சென்னையின் வரலாறு என யாவற்றையும் ஒருங்கிணைத்து உரையாற்றயிருக்கிறேன். இதன் முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது சென்னையும் நானும் முன்னோட்டம் https://youtu.be/70svcZnlR9U ••• …