admin

காதல் என்ற சொல்

மதுரையிலுள்ள  சித்திரவீதிக்காரன் எனது புதிய நாவலுக்கு எழுதியுள்ள விமர்சனம். •• தூரம் காதலைக் கொல்கிறது. தூரமின்மையும்கூட. அலர் காதலைக் கொல்கிறது. சில சமயம் ஏதுமின்றியே காதல் சாகிறது. காஹா சத்தசஈ எஸ்.ராமகிருஷ்ணனின் பத்தாவது நாவலான ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை’ மதுரை புத்தகத் திருவிழாவில் வெளியானது. எஸ்.ரா.வின் நாவல்கள் உப பாண்டவம் தொடங்கி பதின் வரை எல்லா நாவல்களையும் வாசித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் தனித்துவமானவை. காதலை மையங்கொண்ட நாவல்களில் ‘ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை’க்கும் தனியிடம் …

காதல் என்ற சொல் Read More »

மதுரை புத்தகக் கண்காட்சியில்

மதுரைப் புத்தகக் கண்காட்சியில் எனது புதிய நாவல் வெளியீடு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தோழர் எஸ். ஏ.பெருமாள் வெளியிடத் தீபா வெங்கடாசலம் பெற்றுக் கொண்டார். ஐந்து நாட்கள் மதுரையிலிருந்தேன். நிறைய வாசகர்களைச் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. நான் விரும்பியது போலவே புதிய நாவல் அதிகமும் இளைஞர்களால் வாங்கிச் செல்லப்பட்டது சந்தோஷம் அளித்தது. இந்நாவலைப் படமாக்குவதற்காக மூன்று இயக்குநர்கள் தொடர்பு கொண்டார்கள். ஒரு நாவல் வெளியான சில தினங்களிலே அதன் உரிமையை வாங்குவதற்குத் திரைத்துறையினர் முன்வந்திருப்பது வரவேற்க …

மதுரை புத்தகக் கண்காட்சியில் Read More »

மதுரையில்

இன்றிலிருந்து நான்கு  நாட்களுக்கு மதுரையில் இருப்பேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் மதுரைப் புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கில் சந்திக்கலாம். இன்று மாலை 6 மணிக்கு எனது புதிய நாவலின் வெளியீட்டுவிழா மதுரைப் புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கு எண் 138ல் நடைபெறவுள்ளது ••

தெலுங்கில்

எனது சிறுகதை கொஞ்சம் அதிகம் இனிப்பு தெலுங்கில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கௌரி கிருபாகரன்.  அவருக்கு மனம் நிரம்பிய நன்றி ••

நாவல் வெளியீடு

நாளை மதுரை புத்தகத் திருவிழாவிற்கு வருகிறேன். நாளை மாலை (05.09.2019)  5 .30 மணிக்கு மதுரைப் புத்தகத் திருவிழா தேசாந்திரி அரங்கு எண் 138ல் எனது புதிய நாவல் ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல்கதை வெளியிடப்படவுள்ளது. தலைமையேற்று நாவலை வெளியிடுபவர் தோழர் எஸ்.ஏ.பெருமாள் நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி வேண்டுகிறேன் விலை ரூ 200 ••• 04.09.2019

செங்கிஸ்கானின் பாடல்

The Story of the Weeping Camel என்ற புகழ்பெற்ற டாகுமெண்டரி படத்தை இயக்கிய பைம்பசுரான் டாவா (Byambasuren Davaa) வின் அடுத்தப் படமான Two Horses of Genghis Khan என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். 2009ல் வெளியான படமிது. மங்கோலியத் திரைப்பட இயக்குனரான பைம்பசுரான் டாவா ஜெர்மனியில் வசிக்கிறார். சர்வதேச அளவில் ஏராளமான விருதுகளை வாங்கியவர் டாவா. சீனாவின் கலாச்சாரப் புரட்சி காலத்தில் மங்கோலிய மக்களின் மரபும் பண்பாடும் ஒடுக்குமுறைக்கு ஆளானது. மங்கோலிய நாட்டுப்புற இசை …

செங்கிஸ்கானின் பாடல் Read More »

அஷ்டமூர்த்தியின் கடைசி சிற்பம்

அஷ்டமூர்த்தி மலையாளத்தின் மிக முக்கியமான சிறுகதையாசிரியர். எழுத்தாளர். இவரது கடைசி சிற்பம் என்ற சிறுகதைத் தொகுப்பு தமிழில் சிதம்பரம் ரவிச்சந்திரன் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. புதுப்புனல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பஷீர் துவங்கி அசோகன் செருவில் வரை மலையாளத்தின் முக்கிய சிறுகதையாசிரியர்கள் பலரும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கென வாசகர் வட்டமே தமிழில் உருவாகியுள்ளது. சமகால மலையாள சிறுகதைகளின் போக்கினையும் எழுத்துமுறையையும் அறிந்து கொள்வதில் தமிழ் எழுத்தாளர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அஷ்டமூர்த்தியின் கதைகள் தமிழுக்குப் புதுவரவாக உள்ளது மகிழ்ச்சி …

அஷ்டமூர்த்தியின் கடைசி சிற்பம் Read More »

கவிஞனின் நாட்குறிப்பு.

A.K.Ramanujan – Journeys – A Poet’s Diary என்ற புத்தகத்தை வாசித்தேன். இந்நூலைப் படிக்க வேண்டும் என்று விரும்பியதற்கு முதற்காரணம் ஏ.கே ராமானுஜன் சில காலம் மதுரையிலுள்ள தியாகராசர் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக வேலை செய்திருக்கிறார் என்பதே. 1951ல் அவர் மதுரைக்கு வேலைக்கு வந்திருக்கிறார். 50களின் மதுரையைப் பற்றியும் தனது பணிக்கால அனுபவங்களையும் எழுதியிருக்கிறார் என்ற குறிப்பை ஆங்கில நாளிதழில் வாசித்தேன். அதுவே இந்நூலை வாசிக்கத் தூண்டியது. ஏ.கே ராமானுஜன் சிறந்த கவிஞர்.கட்டுரையாளர். நாட்டுப்புறவியல் ஆய்வாளர்.மொழிபெயர்ப்பாளர். …

கவிஞனின் நாட்குறிப்பு. Read More »

கனலி இணையதளம்

கனலி இணையதளத்தின் துவக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு குட்டி இளவரசனுடன் ஒரு பயணம் என்ற தலைப்பில் உரையாற்றினேன்.  விக்னேஷ்வரன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. நேற்று சித்துராஜ் பொன்ராஜ் முரகாமி பற்றி ஆற்றிய உரை மிகச்சிறப்பானது.  அழகிய புகைப்படங்களை எடுத்த பாலமுரளிக்கும் நிகழ்வை ஒளிப்பதிவு செய்த ஷ்ருதி டிவிக்கும்  நன்றி நண்பர் வேலூர் லிங்கன் நிகழ்விற்கு வந்திருந்தது கூடுதல் மகிழ்ச்சி. அவரது நேர்காணல் கனலியில் வெளியாகியுள்ளது.  அவசியம் வாசிக்கவும். எனது உரையின் காணொளி https://www.youtube.com/watch?v=H7I5mAvUKDg&feature=em-uploademail இணையதள …

கனலி இணையதளம் Read More »

தேசாந்திரி புதிய வெளியீடுகள்

தேசாந்திரி பதிப்பகம் மதுரைப் புத்தகத்திருவிழாவை முன்னிட்டு எனது நூல்களின் புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது விலை: ரூ125 விலை: ரூ 125 மதுரைப் புத்தகக் கண்காட்சி தேசாந்திரி அரங்கு எண் 138ல் இப் புத்தகங்களைப் பெறலாம் ஆன்லைன் தளத்திலும் தேசாந்திரி பதிப்பகத்திலும் விற்பனைக்குக் கிடைக்கும். தொடர்பிற்கு : தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 தொலைபேசி 044 23644947 அலைபேசி 9600034659 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/