சிற்பி இலக்கிய விருது – உரை
சிற்பி இலக்கிய விருது – 2019| தேவதச்சன் கவிதைகள் குறித்த எனது உரையின் காணொளி. https://youtu.be/Wqb2WfjQeNo
சிற்பி இலக்கிய விருது – 2019| தேவதச்சன் கவிதைகள் குறித்த எனது உரையின் காணொளி. https://youtu.be/Wqb2WfjQeNo
புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 4 ஞாயிறு மாலை ஈரோடு வருகிறேன் மாலை 5 மணி முதல் புத்தகக் கண்காட்சியிலுள்ள தேசாந்திரி அரங்கில் இருப்பேன். அரங்கு எண் : 104 ஆகஸ்ட் 5 மற்றும் 6 இரண்டு நாட்களிலும் ஈரோட்டில் இருப்பேன். புத்தகத் திருவிழாவில் சந்திக்கலாம் **
வங்காளத்தின் சிறந்த நாவலாசிரியரான சீர்ஷேந்து முகோபாத்யாய (Shirshendu Mukhopadhyay) எழுதிய கறையான் நாவலை நேஷனல் புக் டிரஸ்ட் மறுபதிப்பு செய்துள்ளது. தலை சிறந்த இந்திய நாவல்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது கறையான். இந்நாவலின் கதாநாயகனே நவீன இந்தியாவின் அடையாளம். அவனது செயல்கள் அதிர்ச்சியளிப்பவை. வாழ்க்கை குறித்த அவனது பார்வைகளும் மதிப்பீடுகளும் துணிச்சலானவை. அவன் எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளே தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்கிறான். எண்ணவோட்டங்களாக நீளும் விவரிப்பும், நிராசையும் வேதனையும் கொண்ட அனுபவங்களும் ஒன்று சேர்ந்து கறையான் …
விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டத்தில் இந்த ஆண்டு தேர்வு பெற்ற மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு புத்தக வாசிப்பு குறித்து உரையாற்றினேன்.
மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா மறைவுக்கு என் ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்ற வருடம் திருச்சூர் சென்றிருந்த போது ஆற்றூர் ரவிவர்மாவைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். ஆற்றூர் தமிழ் இலக்கியத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். சிறந்த தமிழ் கவிதைகளை மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சுந்தர ராமசாமியின் நாவலை மொழிபெயர்ப்பு செய்ததற்காக மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார். சமகால தமிழ் படைப்புகள் அத்தனையும் வாசித்திருக்கிறார். நான் சந்திக்கச் சென்றிருந்த போது அவருக்கு நினைவாற்றல் …
நாளை 26 ஜுலை மாலை 4 : 30 மணிக்கு கோவை கொடீசியா புத்தகக் கண்காட்சியில் இருப்பேன். தேசாந்திரி அரங்கில் சந்திக்கலாம் ஜுலை 27 சனிக்கிழமை காலை பத்துமணிக்கு பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் தேவதச்சனுக்கு சிற்பி இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் தேவதச்சன் கவிதைகள் குறித்து சிறப்புரை நிகழ்த்துகிறேன்
எனது இந்தியாவின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. விலை ரூ 650. தேசாந்திரி பதிப்பக நூல்கள் கோவை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். கடை எண் 195 ஜுலை 26 வெள்ளிக்கிழமை கோவை புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன் விருப்பமான நண்பர்கள், வாசகர்கள் மாலை 4: 30 மணிக்கு தேசாந்திரி அரங்கில் சந்திக்கலாம் ••
இன்று முதல் கோவை கொடீசியா புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கம் கடை எண் 195. எனது நூல்கள் யாவும் இங்கே விற்பனைக்கு கிடைக்கும்
மார்கெரித் யூர்ஸ்னார் புகழ்பெற்ற பிரெஞ்சு பெண் எழுத்தாளர். இவரது கீழை நாட்டுக் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பை க்ரியா பதிப்பகம் 2006ல் வெளியிட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட சிறுகதைத் தொகுப்புகளில் இதுவே தலைசிறந்தது என்று சொல்வேன். நேரடியாகப் பிரெஞ்சு மொழியிலிருந்து வெ. ஸ்ரீராம், எஸ், ஜனகநந்தினி, மனிஷா நாராயண், துர்கா சங்கர் ஆகியோர் சிறுகதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். ழான் போல் சார்தர், சிமோன் தெ போவார், ஆல்பெர் காம்யூ ஆகியோரின் சமகால எழுத்தாளர் …
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஸெல்மா லாகர் லெவ்வின் சிறந்த குறுநாவலான தேவமலரை தமிழில் க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார். இது ஸ்காணடிநேவிய இலக்கியத்தின் புகழ்பெற்ற படைப்பு. தேவமலர் எனக்கு மிகவும் பிடித்தமான குறுநாவல். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தேவமலர் பற்றி விரிவான உரை ஒன்றையும் நிகழ்த்தியிருக்கிறேன். தற்போது தேசாந்திரி பதிப்பகம் தேவமலர் மற்றும் கதைகள் என நான்கு முக்கியக் கதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டுவந்துள்ளது. தேவமலர் மற்றும் கதைகள் தமிழில். க.நா.சு ரூ 150 தொடர்புக்கு தேசாந்திரி …