admin

அரவான் நாடகம்

டிசம்பர் 30 மாலை புதுவைப் பண்பாட்டு மையத்தில் அரவான் நாடகம் சிறப்பாக அரங்கேறியது.   நண்பர் சுகுமார் சண்முகம் இயக்கி நடித்திருந்தார். அரவான் நாடகத்தைக் காண அரங்கு நிறைய பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். பத்தாண்டுகள் முன்பாக கருணா பிரசாத் இந்த நாடகத்தை தீப்பந்த வெளிச்சத்தில் மாறுபட்ட நிகழ்வாக  உருவாக்கியிருந்தான். அதிலிருந்து மாறுபட்டு  சுகுமார்  மரபுக்கலைகளுடன் இணைத்து இந்த நாடகத்தை புதிய வடிவில் நிகழ்த்தியது   பாராட்டிற்குரியது. அரங்க அமைப்பு. ஒளி.  உடைகள், இசை பாடல்கள் பொம்மலாட்டம் என அத்தனையும் சிறப்பாக இருந்தன. …

அரவான் நாடகம் Read More »

புத்தாண்டு இரவு

2019 புத்தாண்டு துவங்குவதை முன்னிட்டு தேசாந்திரி பதிப்பகத்தில் வாசகர்களின் சந்திப்பு நடைபெற்றது. நிறைய இளைஞர்கள். குழந்தைகளுடன் குடும்பமாக சிலர் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. இலக்கியம்,  சமகாலப் பிரச்சனைகள், கல்வி, பண்பாடு, வரலாறு, சினிமா, தத்துவம் என பல்வேறு விஷயங்களைத் தொட்டு உரையாடினோம்.   இனியதாக புத்தாண்டு துவங்கியுள்ளது.  இந்த மகிழ்ச்சி எல்லோருக்கும் ஆண்டு முழுவதும் நீடிக்கட்டும். புத்தாண்டு துவங்கியதும் காலையில் Memories Look at Me:  Tomas Transtromer என்ற புத்தகம் படித்தேன். நோபல் பரிசு பெற்ற …

புத்தாண்டு இரவு Read More »

அரவான் நாடகம்

புதுச்சேரியில் டிசம்பர் 30 மாலை ஆறுமணிக்கு எனது அரவான் நாடகம் நிகழ்த்தப்படவுள்ளது. இதனை இயக்கியிருப்பவர் சுகுமார் சண்முகம் புதுவை பண்பாட்டு மைய அரங்கில் நிகழ்வு நடைபெறுகிறது அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் ••

வெளியீட்டுவிழா – நன்றி

நேற்று எனது ஐந்து நூல்களின் வெளியீட்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. வந்து சிறப்பித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.   நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய நீதியரசர் மகாதேவன். வாழ்த்துரை வழங்கிய ஜெயசீலன் ஐஏஎஸ், குறிஞ்சிவேலன், எஸ்.ஏ.பி. அருணன், தங்கப்பன் ஆகியோருக்கு மனம் நிரம்பிய நன்றிகள்.  தியேட்டர் லேப் குழுவின் சார்பில் எனது சதுரத்தில் வசிப்பவன் நாடகத்தை நிகழ்த்திய ஜெயராவ் அவர்களுக்கும் நன்றி. நடிகர்கள் இருவருக்கும் மிகுந்த பாராட்டுகள். நிகழ்வை முழுமையாக படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ள ஸ்ருதி டிவிக்கு நன்றி. FB நேரலை …

வெளியீட்டுவிழா – நன்றி Read More »

விளக்கு விருது

அமெரிக்கத் தமிழர்களால் வழங்கப்படும் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 2017ம் ஆண்டு “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி ஆகிய இருவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது விருது பெறும் பா.வெங்கடேசன்,  ஆ.இரா. வேங்கடாசலபதி இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பா.வெங்கடேசன் மிகச்சிறந்த கவிஞர். நாவலாசிரியர். சிறுகதை எழுத்தாளர். இவரது தாண்டவராயன் கதை, பாகீரதியின் மதியம் இரண்டும் மிக முக்கியமான நாவல்கள். புனைவெழுத்தில் தனித்துவமிக்க மொழியை,கதையாடலை கைக்கொண்டு வருபவர் பா.வெங்கடேசன். வரலாற்று ஆய்வாளரும் …

விளக்கு விருது Read More »