admin

ஒலிநூல்

பார்வையற்றவர்களுக்கு உதவும் படியாக நான் தேர்வு செய்து தொகுத்த தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் நூல் ஒலிப்புத்தகமாக  வெளிவரவுள்ளது. இதனை வாசிப்போம் இணைய தளம் உருவாக்கியுள்ளது. இதன் வெளியீட்டு விழா 28 சனிக்கிழமை மாலை இக்சா மையத்தில் நடைபெறவுள்ளது.  அதில் கலந்து கொண்டு ஒலிப்புத்தகத்தை வெளியிடுகிறேன்

நன்றி

கோவை கொடீசியா புத்தகக் கண்காட்சியினர் அளித்த வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றுக் கொண்டேன். திரளாக வந்து வாழ்த்திய வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி விருது அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எனது எளிய அன்பையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் கோவை கொடீசியா புத்தகக் கண்காட்சியில்  தேசாந்திரி பதிப்பக அரங்கு எண் 201ல் எனது நூல்கள் யாவும் விற்பனைக்கு உள்ளன

நம்பி கிருஷ்ணன்

சொல்வனம் இணைய இதழில் நம்பி கிருஷ்ணன் எழுதி வரும் உலக இலக்கியம் குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஒரே வார்த்தையில் சொன்னால், அற்புதம். தீவிர வாசிப்பும், செறிவான புரிதலும்.  அந்தப் புரிதலை நூறு சதவீதம் தமிழில் வெளிப்படுத்தும் மொழித்திறனும், சிறந்த மொழியாக்கமும் கொண்ட ஒருவரை நான் கண்டதேயில்லை. அவரது எழுத்து வியக்க வைக்கிறது. நம்பி கிருஷ்ணன் யார். எங்கே வசிக்கிறார் என எதுவும் தெரியாது. ஆனால்  சொல்வனத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளை நானே ஒரு PDF …

நம்பி கிருஷ்ணன் Read More »

புதிய பதிப்புகள்

தேசாந்திரியின் புதிய பதிப்புகள் வெளியாகியுள்ளன கடவுளின் நாக்கு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. விலை ரூ 350 பதின் நான்காம் பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 235 இடக்கை நான்காவது பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 375 விழித்திருப்பவனின் இரவு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 225 ரயிலேறிய கிராமம் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 150 வாசகபர்வம் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 210 மலைகள் சப்தமிடுவதில்லை புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 250 காற்றில் யாரோ நடக்கிறார்கள் புதிய …

புதிய பதிப்புகள் Read More »

விருது வழங்கும் விழா

கோவை புத்தகத் திருவிழா  சார்பில் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குகிறார்கள். இந்த நிகழ்வு ஜுலை 20  வெள்ளி மாலை ஆறு மணிக்கு கொடீசியா அரங்கில் நடைபெறவுள்ளது. வாசகர்கள். நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அழைக்கிறேன் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. கடை எண் 201. வெள்ளி மாலையில் அங்கே இருப்பேன். விருப்பமானவர்கள் சந்திக்கலாம். ஞாயிறு மாலையும் புத்தகக் கண்காட்சி அரங்கில் இருப்பேன். ஞாயிறு மாலை (22.07.2018)  கொடீசியா புத்தக கண்காட்சி …

விருது வழங்கும் விழா Read More »

கதைகள் செல்லும் பாதை- 9

– தலைகீழ் மாற்றம் எட்கர் கெரெட் (Etgar Keret ) இஸ்ரேல் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1967 இல் டெல் அவிவ் நகரில் பிறந்தவர். சர்வதேசப் புகழ் பெற்ற இவரது நூல்கள் 25க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. நியூயார்க் டைம்ஸ், கார்டியன், பாரிஸ் ரிவ்யூ இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இவரது பசை (Crazy Glue) என்ற குறுங்கதையை வாசித்தேன். சொல்வனம் இணையஇதழில் இக்கதை மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. 420 சொற்கள் கொண்ட மிகச்சிறிய கதை.. …

கதைகள் செல்லும் பாதை- 9 Read More »

வைதீஸ்வரனின் கவிதைகள்

எஸ். வைதீஸ்வரன் நவீன தமிழ் கவிதையின் முக்கிய ஆளுமை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதி வருபவர்.. சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகையில் கவிதை எழுதத் தொடங்கியவர். இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது மொத்த கவிதைகளின் தொகுப்பான மனக்குருவி வாசித்துக் கொண்டிருந்தேன். நகரவாழ்வின் நெருக்கடியை, தடித்தனத்தை, அவலத்தை, ஆறாத் துயரங்களை, அரிதான சந்தோஷங்களைக் கவிதையில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். வைதீஸ்வரன் ஒரு ஒவியர். முறையாக ஒவியர் கற்றவர். ஒவியர் என்பதால் …

வைதீஸ்வரனின் கவிதைகள் Read More »

குப்ரிக்கின் காரோட்டி

S Is for Stanley – திரைப்பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்கின் காரோட்டியாகப் பணியாற்றிய எமிலியோ பற்றிய ஆவணப்படம். எமிலியோ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் குப்ரிக்கிடம் பணியாற்றியிருக்கிறார்.  அந்த நாட்களின் நினைவுகளை எமிலியோ துல்லியமாக விவரிக்கிறார். தனது பணிக்காலத்தின் போது சேகரித்த பொருட்களைச் சாட்சியமாக முன்வைக்கிறார். குப்ரிக்கின் சிறுகுறிப்புகளும் புகைப்படங்களுமாக விரிகிறது ஆவணப்படம். பிரபலமான இயக்குனரையோ, அவரது குடும்பத்தினரையோ ஆவணப்படமாக்குவது வழக்கம். ஆனால் இப்படம் குப்ரிக்கின் காரோட்டியை பற்றியது. அவர் வழியாக குப்ரிக் என்ற மனிதரின் மேன்மையைப் …

குப்ரிக்கின் காரோட்டி Read More »

செகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு

செகாவின் மீது பனிபெய்கிறது கட்டுரை தொகுப்பின்  புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்ய இலக்கியங்களின் மீது பெரும்காதலுடன் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் செகாவ். டால்ஸ்டாய், கோகல், புஷ்கின், கார்க்கி போன்றோர்களின் ஆளுமையை அடையாளம் காட்டுகின்றன. சர்வதேச இலக்கியத்தின் தனித்துவமிக்க எழுத்தாளர்கள் பலரையும் பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. விலை ரூ 150 புத்தகம் வாங்க  : www.desanthiri.com. தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. …

செகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு Read More »

நெடுங்குருதி புதிய பதிப்பு

நெடுங்குருதி நாவலின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல்  ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. விலை ரூ 500 புத்தகம் வாங்க  : www.desanthiri.com. தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659 mail id:Desanthiripathippagam@gmail.com