அம்மாவின் கடைசி நீச்சல்
புதிய சிறுகதை ( அச்சில் வராதது) அம்மா நீந்தக்கூடியவர். நாங்கள் தெக்குடி என்ற சிறிய கிராமத்தில் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து தென்பக்கமாகச் செல்லும் சாலை வழியாகச் சென்றால் ஏரியை அடையலாம். மிகப்பெரிய ஏரியது. பாண்டிய மன்னர் காலத்தில் உருவாக்கியது என்றார்கள். அந்த ஏரியைச் சுற்றிலுமாக மூன்று கிராமங்கள் இருந்தன. கிராமத்து விவசாயிகள் ஏரி தண்ணீரையே விவசாயத்திற்குப் பயன்படுத்தினார்கள். ஏரியின் நடுவில் சிறிய திட்டுப் போலிருக்கும். அதில் நீராட்சியம்மன் கோவில் இருந்தது. ஆண்டிற்கு ஒரு முறை நீராட்சி அம்மனுக்கு …