admin

மதவிலக்கம்

1901ம் ஆண்டு ரஷ்ய கிறிஸ்துவத் திருச்சபை மதவிரோதக் குற்றசாட்டின் பெயரால் லியோ டால்ஸ்டாய்யை மதவிலக்கம் செய்தது. இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ரஷ்யாவில் நிறைய விவாதங்கள் நடைபெற்றன. திருச்சபையினரிடம் மண்டியிட்டுத் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கறாராக அறிவித்தார் டால்ஸ்டாய் . ஆனால் அவரது மனைவி சோபியா தன் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கபட்டுவிடுமே என்று பயந்து எப்படியாவது திருச்சபையை;ச் சமாதானப்படுத்த முயன்றார். அந்த முயற்சிகளுக்காக முக்கிய அரச பிரதிநிதிகள். மதகுருமார்களைத் தொடர்பு கொண்டார் ஆனால் திருச்சபை தன்னுடைய …

மதவிலக்கம் Read More »

மின்சார மனிதன்

புதிய சிறுகதை அப்போது எனக்கு வயது பனிரெண்டு. எங்கள் ஊருக்கு ராயல் சர்க்கஸ் வந்திருந்தது. ஜவகர் மைதானத்தில் தான் கூடாரம் அமைத்திருந்தார்கள். அந்தச் சர்க்கஸிற்கு ஒரு காண்டாமிருகம் வந்திருந்தது. பாடப்புத்தகங்களில் மட்டுமே பார்த்திருந்த காண்டாமிருகத்தை நேரில் காண வேண்டும் என்பதற்காகவே நான் சர்க்கஸ் போக ஆசைப்பட்டேன். வேறு எந்த மிருகத்தையும் விடக் காண்டாமிருகமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரும்புக் கவசம் போன்ற அதன் உடல் அமைப்பும் ஒற்றைக் கொம்பும் உடலுக்குப் பொருந்தாத குரலும் காண்டாமிருகத்தின் மீது தனியானதொரு …

மின்சார மனிதன் Read More »

ரே பிராட்பெரியின் நேர்காணல்கள்.

ஒரு புத்தகத்தை வாசிக்கையில் அது எழுப்பும் நினைவுகளே அதன் மீதான விருப்பத்தை உருவாக்குகின்றன. நேற்று ரே பிராட்பெரியின் (Ray Bradbury) நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்தேன். ரே பிராட்பெரி எனது விருப்பத்திற்குரிய எழுத்தாளர். அவரது நேர்காணல்களின் வழியே அவரது புனைவின் பின்புலத்தையும், அவர் எழுத்தாளராக உருவான சூழலையும் புரிந்து கொள்ள முடிந்தது. உலகெங்கும் எழுத்தாளர்கள் ஒன்று போலத் தான் உருவாகிறார்கள் போலும். பிராட்பெரியின் நேர்காணல்களில் வெளிப்படும் கேலியும் கிண்டலுமான பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. புதிதாக …

ரே பிராட்பெரியின் நேர்காணல்கள். Read More »

மதுரை புத்தகத் திருவிழாவில்

புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு வருகிறேன் செப்டம்பர் 7, 8,9 ஆகிய தேதிகளில்  தேசாந்திரி பதிப்பக அரங்கு எண் 61ல் வாசகர்கள் சந்திக்கலாம். தினமும் மாலை 4 : 30 முதல் புத்தகக் கண்காட்சியில் இருப்பேன்.

பிற மொழிகளில்

உப பாண்டவம் நாவல் தற்போது மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. டிசி புக்ஸ் 2019ல் வெளியிடுகிறது யாமம் நாவல் தற்போது தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. Gillella Balaji மொழிபெயர்த்துள்ளார். அடுத்த மாதம் இந்நாவல் வெளியாகிறது இடக்கை நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஜீரோ டிகிரி பதிப்பகம் மூலம் வெளியாகிறது எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள் என்ற தேர்வு செய்யப்பட்ட 25 சிறுகதைகள் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது உறுபசி நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்ட்டுள்ளது. இது 2019ல்  வெளியாகிறது துணையெழுத்தின் ஆங்கிலப் பதிப்பை  …

பிற மொழிகளில் Read More »

எனது திரைப்படங்கள்

இயக்குனர் லிங்குசாமியின் சண்டக்கோழி 2 திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியிருக்கிறேன். அப்படம் அக்டோபரில் வெளியாகவுள்ளது இயக்குனர் வசந்தபாலனின் ஜெயில் திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறேன் இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேலன் எனது  கதை ஒன்றை படமாக்குகிறார். அதன் படப்பிடிப்பு அடுத்தவாரம் துவங்கவுள்ளது இயக்குனர் ஜெகன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்கான திரைக்கதையை எழுதியிருக்கிறேன் எனது யாமம் நாவல் வெப்சீரியஸாக தயாரிக்கபடவுள்ளது. அதற்கான ஆரம்ப பணிகள் நடைபெற்றுவருகின்றன ஒளிப்பதிவாளர் பாலமுருகன் இயக்கவுள்ள படத்திற்கான கதை திரைக்கதை வசனத்தை  எழுதியிருக்கிறேன்.

புத்தகத் திருவிழா

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன. ஆனால் பார்வையாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. தேர்ந்த வாசகர்களே வருகிறார்கள்.  புத்தகங்களைத் தேடி வாங்குகிறார்கள். சென்ற ஆண்டு நான் ஷார்ஜா புத்தகத் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அங்கே தமிழ் புத்தகங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதை அறிந்து அது குறித்து விரிவான கட்டுரை ஒன்றை தி இந்து நாளிதழில் எழுதியிருந்தேன். அந்தக் கோரிக்கையை ஏற்று  இந்த ஆண்டு பபாசியில் இருந்து ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் அரங்கு …

புத்தகத் திருவிழா Read More »

மன்னிக்கவும்

அறிவித்திருந்த படி இன்று மாலை ராயப்பேட்டை புத்தகத் திருவிழாவிற்கு வர முடியாதபடி அவசர வேலை. இப்போது தான் வீடு திரும்பினேன் வந்து காத்திருந்த வாசகர்கள் அனைவரிடமும்  மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாளை மதுரை செல்கிறேன் திங்கள் கிழமை வந்துவிடுவேன். அவசியம் திங்கள் மாலை புத்தகத் திருவிழாவிற்கு வருவேன். •• இரவு 9.05 18.08.2018

ராயப்பேட்டை புத்தகத் திருவிழா

ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெறும் 4வது சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி  பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது கடை எண் 117. நாளை சனிக்கிழமை 18 மாலை 4 :30 முதல் இரவு 8:30 வரை தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம் திங்கள்கிழமை முதல் ஞாயிறுவரை மாலை நேரத்தில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கில் இருப்பேன். விருப்பமான  வாசகர்கள் சந்திக்கலாம். ••