admin

கவிஞர் ஆசை

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கவிஞர் ஆசையின் வலைப்பக்கத்திலுள்ள அவரது கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளை வாசித்து வருகிறேன். (https://writerasai.blogspot.com/2017/06/blog-post.html) அற்புதம். மிகச்சிறந்த கட்டுரைகள். மொழிபெயர்ப்புகள். வியந்து ரசித்து படித்துக் கொண்டிருக்கிறேன். அறிவியல் கட்டுரைகளை இவர் அளவிற்குச் சிறப்பாக யாரும் மொழியாக்கம் செய்திருப்பார்களா எனத்தெரியவில்லை. தி இந்து நாளிதழில் இவரது மொழியாக்க கட்டுரைகள் வெளியான போது வாசித்திருக்கிறேன். ஆனால் அப்போது இவ்வளவு தாக்கம் ஏற்படுத்தவில்லை. இணையத்தில் ஒரு சேர இவற்றை வாசிக்கும் போது ஆசையின் எழுத்துலகின் விரிவையும் வலிமையையும் …

கவிஞர் ஆசை Read More »

ஷார்ஜா புத்தகத் திருவிழா

சென்ற ஆண்டு ஷார்ஜா சர்வதேசப் புத்தகத் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன்.   மாபெரும் புத்தகக் கண்காட்சியது. அதில் தமிழ் புத்தகங்கள் கிடைக்கவில்லை. தமிழ் பதிப்பாளர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதை அறிந்து, அது குறித்து தி இந்து நாளிதழில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதினேன். அதன் விளைவாக தமிழ் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான  அமைப்பான பபாசி ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு முன்வந்தது. ஷார்ஜா புத்தகக் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பபாசிக்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து …

ஷார்ஜா புத்தகத் திருவிழா Read More »

ஜேகே

இரண்டு ஜேகேயின் புகைப்படங்களை காலையில் பார்த்தேன். இணையத்தில் கிடைத்த புகைப்படங்கள். தாஜ்மகாலின் முன்பாக நிற்கும் ஜெயகாந்தனின் இந்தப் புகைப்படம் மிகவும் வசீகரமாகவுள்ளது. அவரது உடையும் தோரணையும்  பாருங்கள். எழுத்தாளனுக்குத் தமிழ் சமூகத்தில் கௌரவத்தை உருவாக்கித் தந்தவர் ஜேகே. கண்ணதாசனுடன் ஜேகே உள்ள புகைப்படத்தில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி கையில் சிகரெட் முகத்தில் புன்சிரிப்புமாக ஜேகே அமர்ந்திருக்கும் விதம் அவரது ஆளுமையின் வெளிப்பாடு. காலையில் பெய்து கொண்டிருக்கும் மழையின் ஊடே ஜேகேயைப் பற்றிய நினைவுகள் ததும்புகின்றன.

எந்த உலகில் வசிக்கிறோம்.

சதத் ஹசன் மண்டோவின் புகழ்பெற்ற கதை டோபா டேக் சிங். 1955ல் வெளியான இக்கதை லாகூரிலுள்ள பழமையான மனநலக்காப்பகம் ஒன்றில் வசிக்கும் பிஷன் சிங் என்பவரின் வாழ்க்கையை விவரிக்கிறது. தற்போது பாகிஸ்தானிலுள்ள டோபா டேக் சிங் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர் பிஷன் சிங். வசதியான விவசாயி. நிலப்பிரச்சனை காரணமாக மனநோயாளியாக மாறுகிறார். அவரை லாகூரிலுள்ள மனநலக்காப்பகத்தில் சேர்க்கிறார்கள். பதினைந்து ஆண்டுகள் அங்கே தங்கியிருக்கிறார். இரவிலும் சரி பகலிலும் சரி அவர் உறங்குவதேயில்லை. அது போல உட்காருவதுமில்லை. …

எந்த உலகில் வசிக்கிறோம். Read More »

குல்சாரின் நினைவுகள்

1940ம் வருடம் பழைய டெல்லியிலுள்ள ரோஷனாரா பாக். அங்கே  ஒரு ஸ்டோர் ரூம். மின்சார வசதி கிடையாது. அதில் பனிரெண்டு வயது சிறுவன் இரவில் தனியே இருக்கிறான். அவன் பிறந்த சில மாதங்களிலே அவனது அம்மா இறந்துவிட்டார். அம்மாவின் முகம் எப்படியிருக்கும் என்று கூட அவனுக்குத் தெரியாது. அம்மாவிற்கு புகைப்படம் கூட கிடையாது. அப்பா வேறு திருமணம் செய்து கொண்டார். அந்தக் குடும்பம் பாகிஸ்தானிலிருந்து டெல்லிக்கு துணி வியாபாரம் செய்வதற்காக குடியேறியிருந்தது. பஜாரில் துணிப்பைகள் மற்றும் தொப்பி …

குல்சாரின் நினைவுகள் Read More »

புதுவை இளவேனில்

பாண்டிச்சேரி போவது என்றாலே இளவேனிலுடன் சுற்றுவது என்று தான் அர்த்தம். எப்போது பாண்டிச்சேரி சென்றாலும் புகைப்படக்கலைஞர் இளவேனிலைச் சந்தித்துவிடுவேன். தேர்ந்த வாசகர். எழுத்தாளர்களை நேசிக்கும் ப்ரியத்துக்குரிய தம்பி. எழுத்தாளர் கிராவை தாத்தா என்றே இளவேனில் அழைக்கிறார். கிராவும் தனது சொந்தப்பேரனைப் போல தான் இளவேனிலை நடத்துகிறார். இளவேனிலுடன் பேசிக் கொண்டிருப்பது உற்சாகம் தரக்கூடியது. சமீபத்தில் அவருக்காக கிரா ஒரு நாவலை எழுதித் தந்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் அந் நாவலை வெளியிட இருக்கிறது. 96வயது வயதில் கிரா ஒரு …

புதுவை இளவேனில் Read More »

பிரபஞ்சனைச் சந்தித்தேன்

மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தொடர் சிகிட்சைகள் பெற்று வரும் எழுத்தாளர் பிரபஞ்சனைக் காணுவதற்காகக் குடும்பத்துடன் சென்றிருந்தேன். நண்பர் இளவேனில் உடன் வந்திருந்தார். புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்புப் பிரிவின் தனியறை… நலம்பெற்று புன்னகையுடன் எழுதிக் கொண்டிருக்கும் பிரபஞ்சனைக் காண சந்தோஷமாக இருந்தது. மருத்துவர்கள் சிறப்புக் கவனம் எடுத்துக் கவனித்துக் கொள்கிறார்கள். பத்திரிக்கையாளர் பிஎன்எஸ் பாண்டியன் பெரும்துணையாக இருந்து  உதவிகளைச் செய்து வருகிறார். நண்பர்கள்,எழுத்தாளர்கள், வாசகர்கள் எனப் பலரும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்துப் …

பிரபஞ்சனைச் சந்தித்தேன் Read More »

ஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்

கடந்த வாரத்தில் எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே பற்றிய இரண்டு திரைப்படங்களைப் பார்த்தேன். ஒன்று அவரது காதலைப் பற்றியது. மற்றொன்று அவரது நட்பை பற்றியது. எழுத்தாளர்களில் ஹெமிவே பற்றிய அதிகமான நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கூடMrs. Hemingway என்ற நாவல் அவரது முதல் மனைவியைப் பற்றி வெளியாகியுள்ளது. PAPA: HEMINGWAY IN CUBA என்ற திரைப்படம் ஹெமிங்வே கியூபாவில் வசித்த போது அவருக்கும் இளம் பத்திரிக்கையாளரான எட் மைர்ஸிற்கும் உருவான நட்பைப் பற்றியது. இரண்டும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கபட்ட …

ஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள் Read More »

டால்ஸ்டாயின் கைகள்

லியோ டால்ஸ்டாயோடு மிகுந்த நட்பு கொண்டிருந்தார் மாக்சிம் கார்க்கி.  பலமுறை தேடிச் சென்று டால்ஸ்டாயை சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்பினை பற்றி நினைவுக்குறிப்புகளில் டால்ஸ்டாயின் கைகளைப் பற்றி வியந்து எழுதியிருக்கிறார். டால்ஸ்டாயின் நரம்புகள் புடைத்த பெரிய கைகளைக் காணும் போது லியனார்டோ டாவின்சியின் கைகளைப் போலவே தோன்றியது. இரண்டு பேர்களின் கைகளும் தொட்டதையெல்லாம் கலையாக்கியவை. மாயத்தன்மை கொண்ட கைகள். பேசிக் கொண்டிருக்கும் போது டால்ஸ்டாயின் கைகள் அசைந்து கொண்டேயிருந்தன. கடவுளை போல அவர் அமர்ந்திருப்பதாகத் தோன்றியது. அந்த உரையாடலின் …

டால்ஸ்டாயின் கைகள் Read More »

இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள்.

ரிச்சர்ட் பெவேர் மற்றும் லாரிசா வோல்கோகன்ஸ்கி (Richard Pevear and Larissa Volokhonsky) இருவரும் ரஷ்ய இலக்கியங்களின் புதிய மொழியாக்கங்களைச் செய்து வருபவர்கள். தம்பதிகளான இருவரும் இணைந்து Leo Tolstoy,  Fyodor Dostoevsky,Mikhail Bulgakov ,Nikolai Gogol. Boris Pasternak, Anton Chekhov ஆகியோரின் முக்கியப் படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சசோதரர்கள் நாவல் இதுவரை ஆறு முறை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஆறில் இவர்களின் மொழிபெயர்ப்பே மிகச்சிறப்பானது. ரிச்சர்ட் பெவேர் ஒரு அமெரிக்கர். …

இரண்டு மொழிபெயர்ப்பாளர்கள். Read More »