admin

கதைகள் செல்லும் பாதை- 3

இல்லாத கண்கள் ரஸ்கின் பாண்ட் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். குழந்தைகளுக்காக நிறைய எழுதியிருக்கிறார். 1992ல் Our trees still grow in Tehra என்ற நூலிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார் ரஸ்கின் பாண்ட் இமாச்சலப் பிரதேசத்தில் கசோலி என்ற இடத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆப்ரி அலெக்சாண்டர் பாண்ட் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டீஷ் வான்படையில் பணியாற்றினார். ரஸ்கின் பாண்ட் குஜராத்தின் ஜாம்நகரிலும்,டேராடூனிலும், ஷிம்லாவிலும் வளர்ந்தார். குழந்தைகளுக்காக முப்பது நூல்கள் எழுதி உள்ளார். …

கதைகள் செல்லும் பாதை- 3 Read More »

கதைகள் செல்லும் பாதை- 2

கால் நகங்கள் “காலில் நகங்கள் எதற்காகப் படைக்கபட்டிருக்கின்றன. அதனால் என்ன பிரயோசனம் ?“ என ஒரு சிறுமி தனது தாயிடம் கேட்கிறாள் “கடவுளின் படைப்பில் எல்லாவற்றுக்கும் ஒரு தேவையும் அவசியமும் இருக்கிறது. நமக்குத் தான் கால்நகங்களைப் பயன்படுத்த தெரியவில்லை“ என்று அந்தப் பெண்ணின் தாய் சொல்கிறாள் இப்படியொரு உரையாடலை யூத எழுத்தாளரான வெல்வ் செர்னின் நாவலில் கண்டேன். கால்நகங்களைப் பற்றி நம்மில் பெரும்பான்மையினர் கவனம் கொள்வதேயில்லை ஆனால் தன்னைக் கவனிக்கத் துவங்குவது கால்களில் இருந்தே துவங்குகிறது என்கிறாள் …

கதைகள் செல்லும் பாதை- 2 Read More »

கதைகள் செல்லும் பாதை 1

பயமும் காமமும் அருண் ஜோஷி (arun joshi) சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளர். பனாரஸ் பல்கலைகழகத் துணைவேந்தர் ஜோஷியின் மகனாக, காசியில் பிறந்த இவர் அமெரிக்காவில் பட்டபடிப்பு படித்திருக்கிறார். 1961ல் இந்தியா திரும்பி புகழ்பெற்ற நூற்பாலை ஒன்றின் நிர்வாகியாகப் பணியாற்றியிருக்கிறார். பின்பு டெல்லியிலுள்ள ஸ்ரீராம் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனராகப் பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். இவரது முதல் நாவல் The Foreigner 1968ல் வெளியானது. அதைத் தொடர்ந்து The Strange Case of Billy …

கதைகள் செல்லும் பாதை 1 Read More »

உலகைப் படம்பிடித்தல்.

அக்னேஸ் வர்தா பிரெஞ்சு சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் . உலக அளவில் புகழ்பெற்ற பெண் இயக்குனர். பெல்ஜியத்தில் பிறந்த இவர்  பெண்ணிய சினிமாவின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். சிறந்த புகைப்படக்கலைஞரும் கலை வரலாற்று ஆய்வாளருமான இவர் சோர்போன் பல்கலைகழகத்திலிருந்து இலக்கியம் மற்றும் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். வார்தா தனது வாழ்க்கையை ஒரு புகைப்படக்கலைஞராகவே துவக்கினார்.  கேமிராவை ஒரு பேனாவை போல சுதந்திரமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையை பின்பற்றியவர் வார்தா.  இவரது திரைப்படங்கள் பரிசோதனை படங்களாகக் கருதப்படுகின்றன. …

உலகைப் படம்பிடித்தல். Read More »

பேரலையின் உயரம்

ஜப்பானின் புகழ்பெற்ற ஒவியரான ஹொக்குசாய் பற்றி இரண்டு படங்களைப் பார்த்தேன். ஒன்று ஆவணப்படம். மற்றொன்று திரைப்படம். Edo Porn என்ற திரைப்படம் Kaneto Shindo இயக்கத்தில் 1981ல் வெளியாகியிருக்கிறது. இப்படம் ஹொக்குசாயின் வாழ்க்கை மற்றும் காதலைப் பேசுகிறது. நிர்வாணக்காட்சிகள் அதிகமுள்ளதால் இப்படத்தைச் சில நாடுகள் திரையிட அனுமதிக்கவேயில்லை BBC தயாரிப்பான Old Man crazy to Paint ஆவணப்படம் ஹொக்குசாய் ஒவியங்களின் சிறப்புகளையும். அவரது தனித்துவத்தையும் விளக்குகிறது. 1760 ல் டோக்கியோவில் பிறந்த ஹொக்குசாய் மரச்செதுக்கு ஒவியராகப் …

பேரலையின் உயரம் Read More »

மோட்சமென்பது

Understanding Moksha என்ற ஆவணப்படத்தை இணையத்தில் பார்த்தேன். சமீர் குமார் இயக்கியது. காசியில் எடுக்கபட்ட மிகச்சிறந்த படமது.  இசையும் படத்தொகுப்பும் ஒளிப்பதிவும் அபாரம். படம் காசியின் ஊடாக மெய்தேடலை முன்வைக்கிறது. குறிப்பாக மோட்சம் என்பதை புரிந்து கொள்வதற்கான வழிகாட்டுதலை மேற்கொள்கிறது. பனிகாலத்தின் காசியை காட்சிகளாக பார்க்கையில் நினைவுகள் பீறிடுகின்றன. இந்த பனிக்குள் நானும் அலைந்து திரிந்திருக்கிறேன். காசி எனக்கு மிகவும் விருப்பமான ஊர். காசியின் தொன்மை பற்றி ஒரு பேராசிரியர் பேசுகிறார். அப்போது காசி ஒரு அறிவு …

மோட்சமென்பது Read More »

பிரமிள் படைப்புகள்

கவிஞர் பிரமிளின் நெருக்கமான நண்பர் கால.சுப்ரமணியம் .   பிரமிள் மறைவிற்கு பின்பு அவரது கையெழுத்துபிரதிகள். நூல்களை காப்பாற்றி ஆவணப்படுத்தி வருபவர். தற்போது தனது லயம் பதிப்பகம் மூலம் பிரமிளின் மொத்த படைப்புகளையும்  ஒருசேர வெளியிடுகிறார். மிக அரிய முயற்சி.  நாம் அனைவரும் இதற்கு உறுதுணை அளிக்க வேண்டும் •• லயம் – பிரமிள் அறக்கட்டளை வெளியீடாக 2018 ஜூன் மாத இறுதிக்குள் வெளிவரவுள்ள பிரமிளின் ஒட்டுமொத்த எழுத்துக்களின் தொகுதிகள் ————————————————————————- பிரமிள் படைப்புகள் (பதிப்பு : கால …

பிரமிள் படைப்புகள் Read More »

புதிய சிறுகதை – மீறல்

சமீபத்தில் எழுதிய புதிய சிறுகதை. அச்சில் வராதது. •• மீறல் சுகந்தி பேருந்தை விட்டு இறங்கிய போது கோயம்பேட்டில் லேசான தூறலாக இருந்தது. இரவில் நல்ல மழை பெய்திருக்க வேண்டும். சாரலோடு ஒரு ஆட்டோ பிடித்துத் தனது தோழி கல்பனாவின் அறையைத் தேடிப் போனாள். கல்பனாவின் கணவன் துபாய் சென்றபிறகு அவள் வீட்டை காலி செய்துவிட்டு தன்னோடு வேலை பார்க்கும் மிதிலாவின் அபார்ட்மெண்டிற்கு மாறி விட்டாள். பெங்களுரில் இரவு புறப்பட்ட போது போனின் சார்ஜ் குறைந்து கொண்டுவந்தது. …

புதிய சிறுகதை – மீறல் Read More »

டோக்கியோ செல்லும் ரயில்.

ஜப்பானின் புகழ்பெற்ற இயக்குனரான யசுஜிரோ ஒசு இயக்கிய டோக்கியோ ஸ்டோரி படத்தை எப்போது பார்த்தாலும் மனது கனத்துவிடுகிறது. அதன்பிறகு சில நாட்களுக்கு வேறு படம் எதையும் பார்க்க முடியாது. டோக்கியோ ஸ்டோரி திரையில் உருவான காவியம். ஒசு  ஜப்பானியர்களின் ஆன்மாவை அறிந்தவர். அவரது சினிமா பௌத்த சாரத்தைக் கொண்டது. காத்திருப்பும் நிதானமும் தனிமையும் பிரிவும் என வாழ்வின் நுண்மையான தருணங்களை அடையாளம் காட்டியவர் ஒசு . அவரது திரைமொழி மற்ற ஜப்பானிய இயக்குனர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. …

டோக்கியோ செல்லும் ரயில். Read More »

கவிதையின் கையசைப்பு

விகடன் தடம் இதழில் சமகால உலகக் கவிதைகள் குறித்த புதிய பத்தி ஒன்றை துவங்கியுள்ளேன் கவிதையின் கையசைப்பு என்ற அந்தப் பத்தி இந்த இதழில் துவங்கியுள்ளது ஜப்பானின் புகழ்பெற்ற கவிஞன் டகுபுகு பற்றிய அறிமுகம்.