admin

சிறுநாவல்கள்

நண்பர் வேலூர் லிங்கம் சிறந்த வாசிப்பாளர். தான் வாசித்த நூல்களைப் பற்றி அடிக்கடி தொலைபேசியில் பேசி மகிழ்வார். இன்று காலை பேசிக்கொண்டிருக்கும் தடிதடியாக ஆயிரம் பக்கங்களுக்கு மேலுள்ள மொழியாக்க நாவல்களைப் பலராலும் படிக்க முடியவில்லை. நூறு இருநூறு பக்கங்களுக்குள் உள்ள சிறிய வெளிநாட்டு நாவல்கள் நிறைய உள்ளன. அவற்றைப் பற்றி நீங்கள்  விரிவாக கட்டுரைகள் எழுதலாமே எனச் சொன்னார் மறுவாசிப்பு செய்துவிட்டு அவசியம் எழுதுகிறேன் என்றேன். அதற்கு முன்னதாக வாசிக்க வேண்டிய சிறுநாவல்களின் பட்டியலை வெளியிடுங்கள். அது …

சிறுநாவல்கள் Read More »

பெற்றோர்களுக்கு

இன்று காலை எனது மெயிலில் இந்தச் செய்தியை  ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். இணையத்தில்  வெளியாகியுள்ள இச்செய்தி சிங்கப்பூரிலுள்ள ஒரு பள்ளி முதல்வர் எழுதியது. SSLC தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழலில் தமிழகப் பெற்றோர்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தியிது

பாவண்ணன் பாராட்டு விழா

நண்பரும் தமிழின் சிறந்த எழுத்தாளருமான பாவண்ணனைக்  கொண்டாடும் விதமாக மே 26 சனிக்கிழமை முழுநாள் கருத்தரங்கம் சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பாவண்ணன் சிறுகதைகள். நாவல்கள், மொழிபெயர்ப்புகள் குறித்து விரிவான உரைகள் இடம்பெறவுள்ளன. நிகழ்வை அமெரிக்காவைச் சேர்ந்த p.k சிவக்குமார், மதுரை வெற்றிவேல், பெங்களுர் மகாலிங்கம் போன்ற நண்பர்கள் ஒருங்கிணைந்து நடத்துகிறார்கள். பாவண்ணனின் சிறுகதைகள் தனித்துவமிக்கவை. அவரது சிறுகதை தொகுப்பு சுஜாதா விருது பெற்றபோது அது குறித்து விரிவாக நான் உரையாற்றியிருக்கிறேன். எனது இல்லத் திருமணம் …

பாவண்ணன் பாராட்டு விழா Read More »

அநீதி

நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு உயிர்கள் பலியாகியுள்ளன. கலவரக்காட்சிகளை வீடியோவில் பார்த்த போது எழுந்த கேள்வி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களா வாகனங்களுக்கு தீ வைக்கிறார்கள். யாரோ புல்லுருவிகள் ஊடுபுகுந்திருக்கிறார்கள்.. ஆனால் இதற்காக பழிவாங்கப்பட்டது போராட்டக்கார்களின் உயிர். துப்பாக்கியை உயர்த்தியபடியே வாகனத்தின் மீது பவனி வரும் காவலர்களைப் பாருங்கள். கார்ப்பரேட் நலம் காக்க எப்படி பணியாற்றுகிறார்கள் என்பது புரியும் . நூறு நாட்களுக்கும் மேலாக அமைதிவழியில் …

அநீதி Read More »

சொற்களின் தோகை

அனார் எனக்குப் பிடித்தமான கவிஞர். சூபி கவிதையுலகின் நவீன வடிவம் போன்றவை அவரது கவிதைகள். பெண் மனத்தின் ஆழ்தவிப்புகளை, மகிழ்ச்சியை, துயரை வெளிப்படுத்துகின்றன அவரது கவிதைகள். அனார் கிழக்கிலங்கையின் சாய்ந்த மருதுவில் வசித்துவருகிறார். சமகால தமிழ் கவிஞர்களில் மிக முக்கியமானவர். நான்கு கவிதை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். ஜின்னின் இரு தோகை கவிதைநூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது அனாரின் கவிதைகள் அன்றாட வாழ்விலிருந்து தாவிப் பறப்பவை. அவர் புறஉலகின் நிகழ்வுகளை விடவும் அகவுலகின் தத்தளிப்புகளை, எழுச்சிகளையே அதிகம் எழுதுகிறார். …

சொற்களின் தோகை Read More »

பெங்களுரில்

திரைப்பட பணி ஒன்றின் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பெங்களுருவில் இருந்தேன். நண்பர்களை சந்திக்க நேரமில்லை. மகாலிங்கம் மட்டும் தினமும் வந்து  சந்தித்து பல்வேறு உதவிகள் செய்து கொடுத்தார். தேர்தல் நடக்கிற பரபரப்பே இல்லாமல் இருந்தது.  ஒரு நாள் விட்டு ஒரு நாள் மழை. வெயிலே தெரியவில்லை.  நிறைய நண்பர்கள் சந்திக்க விரும்பினார்கள்.  பணிச்சூழல் காரணமாக சந்திக்க இயலவில்லை.  விரைவில் பெங்களுருவில் ஒரு வாசக சந்திப்பை நடத்தலாம் என திட்டமிட்டு வருகிறேன். ஏற்பாடுகள் முடிந்தவுடன் அறிவிக்கிறேன் …

பெங்களுரில் Read More »

அவரும் நானும்

அவள் விகடன் இதழில் வெளியாகியுள்ள வசந்தா அக்கா குறித்த கட்டுரை. அன்பு அக்கறை அக்கா! – எஸ்.ராமகிருஷ்ணன் அவரும் நானும் ஆர்.வைதேகி “ `அவளும் நானும்’ என்பதை `அவரும் நானும்’ என மாற்ற முடியுமா? `அவள்’ எனக் குறிப்பிடுவது எனக்கு நெருடலாக இருக்கிறது’’ – பேட்டிக்கு முன்பான கோரிக்கையின் முதல் வரியிலேயே பெண்களின் பெருமதிப்புக்கும் பேரன்புக்குமானவராக நிற்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். “அவளை, `அவர்’ என்றே குறிப்பிடுவோம்!’’ என்று உறுதியளித்த பிறகே பேசவும் சம்மதிக்கிற அவரது மாண்பு மகிழ்ச்சியளிக்கிறது. …

அவரும் நானும் Read More »

புதிய தொடர்

தி இந்து குழுமம் துவங்கியுள்ள காமதேனு இதழில் புதிய பத்தி ஒன்றை துவங்கியிருக்கிறேன். முடிவற்ற சாலை என்ற இந்த பத்தி எனது பயண அனுபவங்களை முன்னிலைப்படுத்துகிறது

கிரேசியா டெலடா

நோபல்பரிசு பெற்ற பெண் எழுத்தாளர் கிரேசியா டெலடா (Grazia Deledda.) இத்தாலியைச் சேர்ந்த இவர் ஐம்பதுக்கும் அதிகமான நாவல்களை எழுதியிருக்கிறார். இவரது The Mother என்ற நாவலை தி.ஜானகிராமன் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். மிக அற்புதமான நாவல். பாதிரியாக உள்ள தனது மகன் பால் ஒரு இளம்பெண்ணுடன் பழகுவதைத் தாங்கிக் கொள்ள முடியாத அன்னையின் தவிப்பே நாவல். கைம்பெண்ணாகப் பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த அன்னை, பால் மதகுருவாகப் பணியேற்றதும் மதகுருவின் தாய் என்ற புனித அடையாளத்தைப் பெறுகிறாள். …

கிரேசியா டெலடா Read More »