admin

கோ யுன் : பத்தாயிரம் வாழ்க்கைகள்

(தடம் இதழில் எழுதி வரும் உலகக் கவிதைகள் குறித்த தொடரின்  கட்டுரை ) ஒவ்வோர் ஆண்டும் தமிழில் நிறைய கவிதை நூல்கள் வெளியாகின்றன. புதுப்புது கவிஞர்கள் அறிமுகமாகிறார்கள். ஆயினும் நவீன கவிதைகள் குறித்த விவாதங்கள், கவிதைக் கோட்பாடுகள், அழகியல் பற்றிய உரையாடல்கள் எதுவும் இலக்கியச் சூழலில் நடைபெறுவதில்லை. பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் சிற்றிதழ்களில் வெளியாவதோடு சரி. அவை உரிய கவனத்தையும் உரையாடலையும் உருவாக்கவில்லை. முக்கியக் கவிஞர்கள்கூட இவற்றைப் பொருட்படுத்தி விவாதிப்பது இல்லை என்பது வருத்தமளிக்கும் உண்மை. …

கோ யுன் : பத்தாயிரம் வாழ்க்கைகள் Read More »

இசையே வாழ்க்கை

நகலிசைக் கலைஞன் என்ற நூலை நண்பர் ஒருவர் நேற்று பரிசாக அனுப்பியிருந்தார். அதை நேற்றிரவு வாசித்தேன் எங்கள் பகுதியில் ஊருக்கு ஊர் பொருட்காட்சி நடைபெறும். அதன் சிறப்பே மிகச்சிறந்த மெல்லிசை நிகழ்ச்சிகள். எம்.எஸ்.வி. சங்கர் கணேஷ், கங்கை அமரன் துவங்கி உள்ளுர் கலைஞர்கள் வரை பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். பிரபலமான பாடகர்களும் வருதுவண்டு. ஏழு மணிக்கு துவங்கி இரவு பனிரெண்டரை வரை கச்சேரி நடைபெறும். சில நாட்கள் கச்சேரி நீண்டு மூன்று மணியாகியிருக்கிறது. மக்கள் …

இசையே வாழ்க்கை Read More »

புதிய இசை

சிறந்த கவிஞரும் பாடகருமான நண்பர் ரவி சுப்ரமணியன் சங்கக் கவிதைகளில் தேர்வு செய்த சில பாடல்களுக்கு இசை அமைத்து வருகிறார். அதில் ஒரு பாடலை அனுப்பியிருந்தார். அற்புதம். மிகச்சிறந்த இசையமைப்பு. குரல். பலமுறை கேட்டு மகிழ்ந்தேன். தனியான ஒரு இசைத்தொகுப்பாக இந்த பாடல்கள் வெளியானால் மிகுந்த வரவேற்பைப் பெறும். நண்பர் ரவி சுப்ரமணியனுக்கு என்  மனம் நிரம்பிய வாழ்த்துகள் மூன்று குறுந்தொகைப் பாடல்களின் ஐ கிளவுட் லிங்க்ஸ் https://soundcloud.com/ravisubramaniyan/41-kurunthokai-41 https://soundcloud.com/ravisubramaniyan/28-kurunthaokai-28 https://soundcloud.com/ravisubramaniyan/20-kurunthokai-20

வாழ்நாள் சாதனையாளர் விருது

கோவையில் கொடிசியா சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழா ஆண்டுதோறும் ஒரு படைப்பாளிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கிறது இந்த விருது ஒரு லட்ச ரூபாய் பணமும் பட்டயமும் கொண்டது. இந்த ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எனக்கு வழங்கப்படுவதாக கொடிசியா அமைப்பினர் தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய நன்றி விருது வழங்கும் நிகழ்வு புத்தக கண்காட்சி நடைபெறும் கொடிசியா அரங்கில்  ஜுலை 21ல் மாலையில் நடைபெறுகிறது இதையொட்டி எனது படைப்புகள் குறித்த சிறப்பு கருத்தரங்கு …

வாழ்நாள் சாதனையாளர் விருது Read More »

உரை

அம்புப்படுக்கை சிறுகதைத் தொகுப்பிற்காக 2018ன் யுவ புரஸ்கார் விருது பெற்ற சுனில் கிருஷ்ணனுக்குப் பாராட்டு விழா சிறப்புரை : எஸ்.ராமகிருஷ்ணன் https://www.youtube.com/watch?v=BkPCznjGtBA

கதைகள் செல்லும் பாதை -8

அந்திச்சூரியன். காசிநாத் சிங் என்ற ஹிந்தி எழுத்தாளரின் சுகம் என்றொரு சிறுகதையை இன்று வாசித்தேன். காசிநாத் சிங் வாரணாசியில் வசித்து வருகிறார். வயது 81. காசியில் பிறந்து வளர்ந்தவர். அன்றாடம் மாலையில் இலக்கியம் பேசுவதற்கு கங்கையின் படித்துறைக்கு வந்துவிடுகிறார். சக எழுத்தாளர்கள். வாசகர்கள் என்று ஒரு குழுவே அங்கே கூடிவிடுகிறார்கள். ஒன்றாகத் தேநீர் அருந்தியபடி உலக விஷயங்கள் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். காசி நகரின் தொன்மையையும் அதன் மாற்றங்களையும் பற்றி விரிவான நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். இவரது …

கதைகள் செல்லும் பாதை -8 Read More »

கதைகள் செல்லும் பாதை- 7

அலையுடன் வாழ்வது ஆக்டோவியா பாஸ் நோபல் பரிசு பெற்ற கவிஞர். மெக்சிகத் தூதுவராக இந்தியாவில் சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். கன்யாகுமரி பற்றி நீள் கவிதை ஒன்றினையும் எழுதியிருக்கிறார். Alternating Current.,The Bow and the Lyre, The Siren & the Seashell and Other Essays, On Poets and Others போன்ற இவரது கவிதை குறித்த கட்டுரை நூல்கள் மிக முக்கியமானவை. ஆக்டோவியா பாஸ் சிறுகதை எழுத்தாளரும் கூட. அவரது கவிதைகளைப் போலவே குறியீட்டுத் …

கதைகள் செல்லும் பாதை- 7 Read More »

கதைகள் செல்லும் பாதை 6

தூண்டிலில் சிக்கிய நினைவுகள் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று சா. கந்தசாமி எழுதிய தக்கையின் மீது நான்கு கண்கள். மீன்பிடிக்கச் செல்லும் தாத்தாவோடு செல்லும் சிறுவனின் உலகம் அற்புதமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும். சமீபத்தில் படித்த சீனக்கதை கந்தசாமியின் சிறுகதையை நினைவுபடுத்தியது. வேறுவேறு தேசங்களில் எழுதப்பட்ட கதை. இரண்டிலும் தாத்தா கதாபாத்திரம் அற்புதமாக உருவாக்கபட்டுள்ளது. தாத்தா என்பது வெறும் சொல்லில்லை. தாத்தாவோடு பேரனுக்குள்ள உறவு என்பது தந்தையை விட நெருக்கமானது. தாத்தாக்கள் உலகை பற்றிய புதிய புரிதலை உருவாக்கிவிடுகிறார்கள். …

கதைகள் செல்லும் பாதை 6 Read More »

தேசாந்திரி இணையதயம்

தேசாந்திரி பதிப்பகத்திற்கென தனியான இணையதளம் உருவாக்கபட்டுள்ளது. இந்தத் தளத்தினைத் தொடர்பு கொண்டு எனது புத்தகங்களை எளிதாக வாங்கலாம். புத்தகங்கள் கூரியர் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். சென்னை தவிர இதர ஊர்களுக்கு ரூ 50 கூரியர் செலவிற்கு கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த இணையதளத்தில் தேசாந்திரி தொடர்பான நிகழ்வுகள். தேசாந்திரி பதிப்பக வெளியீடுகள் குறித்த விமர்சனங்கள், காணொளிகள் வெளியிடப்படும். https://www.desanthiri.com/ வாசகர்கள். புத்தக விற்பனையாளர்கள், நண்பர்கள் இந்த இணையதளத்தை ஆதரிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

சிறுகதைப் போட்டி

சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018  பற்றிய அறிவிப்பு. விருப்பமுள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளவும் •••• வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது.அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். * சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய …

சிறுகதைப் போட்டி Read More »