கதைகள் செல்லும் பாதை 5
நினைவில் கேட்கும் சங்கீதம் கவிஞர் சுகுமாரன் மொழியாக்கத்தில் வெளியான லீலை என்ற மலையாளச் சிறுகதை தொகுப்பு முக்கியமானது. சமகாலச் சிறுகதைகளில் பனிரெண்டைத் தேர்வு செய்து சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். தலைப்பு கதையான லீலை மலையாளத்தில் திரைப்படமாக வெளிவந்து பாராட்டுப் பெற்றது. இந்தத் தொகுப்பிலுள்ள கடலின் விளிம்பில் ஒரு வீடு என்ற மாதவிக்குட்டியின் கதை மிகச்சிறப்பானது. புகழ்பெற்ற ஆங்கிலக் கவியான கமலாதாஸ் தான் இந்த மாதவிக்குட்டி. இவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஆமி என்ற மலையாளப் படத்தைச் சில …